Posts Tagged ‘குரான்’

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)

ஜூலை 10, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)

Modi present to Isreal PM - copper plates 06-07-2017

மோடி, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுப்பாரா?:  மோடியின் பரிசு-நட்புறவு பற்றிய விவகாரத்தில் சேரமான் பெருமாள், தாமஸ் போன்ற கட்டுக்கதைகள் பின்னணியில் இருப்பதுதான், சரித்திரம் தெரிந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பரிசு என்றால், சால்வை, குர்தா, போன்றவற்றைக் கொடுத்தது மாதிரி கொடுத்திருக்கலாம், ஆனால், இத்தகைய போலிகளை கொடுப்பதுதான் திகைப்பாக இருக்கிறது. நாளைக்கு, ஒருவேளை, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுத்து, “தூது-நட்பு” பேசி, இரு நாட்டுறவுகளைப் போற்றுவாரா? ஆக, சரித்திரத்திற்குப் புறம்பான இவ்விசயங்கள் எப்படி நடக்கின்றன என்பது புதிராக உள்ளன. மோடியின் டுவிட்டர், அரசாங்கப்  பூர்வமான இணைதள பதிவுகள், புகைப்படங்கள் வெளியிடுவன எல்லாமே மறுக்க முடியாதவை. நாளைக்கு, கிருத்துவர்கள், முஸ்லிம்கள் தங்களது கட்டுக்கதை பரப்புப் புத்தகங்களில், பிரச்சாரங்களில் இவற்றை நிச்சயமாக சேர்த்துக் கொள்வர். மோடியே ஒப்புக் கொண்டு விட்டார் என்றும் எழுதப் போகிறார்கள். அதனால், தான், மிக கவலையுடன், இந்த பதிவுகள் என்னால் செய்யப்படுகின்றன. இனி, அந்த சேரமான் கட்டுக்கதை எப்படி உருவானது என்பதனை தொடர்ந்து பார்ப்போம்.

Later-dated mohammedan Mss claim such legends

900 CE முதல் 1800 CE வரை ஒரே கட்டுக்கதையை மாற்றிமாற்றி எழுதப்பட்டதாம்: டுயார்தே பார்போசா [Duarte Barbosa] என்ற போர்ச்சுகீசியர், முதன் முதலில் 1510 CEல் இக்கட்டுக்கதையைக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. “எனக்கு 600 வருடங்களுக்கு முன்னால் சேரமான் பெருமாள் வாழ்ந்தான்…….” என்றாதால், அவனது காலம் c.900 CEஎன்று புனைய ஆரம்பித்தனர். இதே போன்ற இன்னொரு கட்டுக்கதையை ஷேக் ஜைமுத்தீன் [Sheikh Zeinuddin] என்பவர் 1700-1800 CE வாக்கில் எழுதி வைத்ததாக சொல்லப்படுகிறது. 1610 CEல் ஜோயாஸ் டி பரோஸ் [Joas deBarros] என்ற இன்னொரு போர்ச்சுகீசியர், இன்னொருவிதமாக, இக்கதையை அறிந்து எழுத் வைத்தாராம். இப்படி, கட்டுக்கதையே மாற்றி-மாற்றி எழுதப் பட்டதால் தான்,

  1. நிலவை கனவில் பார்த்தான், நேரில் பார்த்தான், உப்பரியிலிருந்து பார்த்தான்.
  2. கனவில் கண்டான்.
  3. நிலவு இரண்டாக உடைந்தது, பிளந்தது.
  4. ஒரு பகுதி, பூமியில் விழுந்தது, மலபாரில் விழுந்தது.
  5. அதைப் பற்றி ஜோசியர்களிடம் விசாரித்தான், அரேபியர்களிடம் விசாரித்தான்.
  6. இந்து ராஜா மொஹம்மதைக் காணச் சென்றான்.
  7. மொஹம்மதுவைப் பார்த்தான், பார்க்கவில்லை.
  8. சுன்னத் செய்து கொண்டான், செய்து கொள்ளவில்லை.
  9. இந்தியாவுக்கு திரும்ப வந்தான், வரவில்லை;
  10. நோய்வாய்ப்பட்டு இறந்தான்; கல்லறை அரேபியாவில் உள்ளது, இந்தியாவில் உள்ளது, காணப்படவில்லை.

Cheraman witnessed moon split like mohammed

சரித்திர மற்றும் கால முரண்பாடுகள்: முன்னரே குறிப்பிட்டது, 17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல் என்பதாகும். ஒருவேளை தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போல, ஐரோப்பியர்களால், உள்ளூர் பண்டிதர்களை வைத்து உருவாக்கப்பட்ட நூலாக இருக்கலாம். கேரளோத்பத்தியின் படி, அனகுன்டியைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயர், சேரமான் பெருமாளை மெக்காவுக்கு செல்லுமாறு பணித்ததாகவும், அங்கு அவர் மதம் மாறியதாக சொல்கிறது. சேரமான் பெருமாள் 355CEல் வந்து, 428ல் மெக்காவுக்குச் சென்றதாகவுள்ளது. ஆனால், மொஹம்மது 622 CEவாக்கில் தான் இருந்தார், பிறகு இஸ்லாம் தோன்றியது. கிருஷ்ணதேவராயர் 1509 CEல் தான் அனலுன்டியின் அரசராகிறார். ஆகவே, உள்ளூர்வாசி, இவ்வளவு தப்பும்-தவறாக எழுதியிருக்க மாட்டான். கிருஷ்ணதேவராயர், அரேபியர்களிடமிருந்து குதிரைகள் வாங்கினார் மற்றும் தனது ராணுவத்தில் முகமதிய தளபது, வீரர்களை வைத்திருந்தார் என்பதினார், அவரது பெயரைச் சேர்த்து எழுதியிருக்கலாம். மேலும் கேரளாவில் முதலில் இருந்தது, இந்து மதமா, ஜைனமா, பௌத்தமா என்ற குழப்பங்களும் ஐரோப்பிய-கிருத்துவ எழுத்தாளர்களிடம் இருந்தன. பச்சனன், அரேபியாவில் ஜைனம் இருந்தது என்றார்.

Ore Nadu - wrapper June 2017- spreading myth- tomb in Arabia

முகமதியர் சேரமான் கட்டுக்கதையினை முன்னால் தள்ள முயற்சித்தது: பிரான்சிஸ் டே என்பவரும், பெருமாள் கொச்சினின் ஆளுனராக 36 வருடங்கள் இருந்ததாகவும், ஓய்வு பெற்றப் பிறகு, அங்கிருந்த மஹாஜெயின்கள், அவரை 378ல் மெக்காவுக்குச் செல்லுமாறு பணித்தனர். மெக்காவில் ஜைனமதம் நன்றாக நிறுவப்பட்டிருந்ததாகவும், அங்கிருப்பவர்கள் இந்தியாவிடன் நன்றாக வியாபாரம் செய்து கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. பிறகு தான், அது முகம்தியர் வசமானது[1]. ஆனால் லோகன் 825ல் பெருமாள் மெக்காவுக்குச் சென்று முகமதியர் ஆனார் என்று எடுத்துக் காட்ட முயன்றார். உண்மையில் பெருமாள் மற்றும் ஜமோரின் கதைகளை எழுதும் போது, முகமதியர்களின் மனங்களில் குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில், பிற்காலத்தில் ஜமோரின் மன்னர்களில் ஒருவன், குரானை ஏற்றுக் கொண்டு, c.825 CE வாக்கில், மெக்காவுக்குச் சென்றதாக, ஒரு கதை இருந்தததை வைத்து குழப்பினர் அல்லது குழப்பப் பார்க்கின்றனர். ஏனெனில் உள்ள ஒரு மசூதி சமாதியில் உள்ள 9ம் நூற்றாண்டு தேதி இத்துடன் ஒத்துப் போகிறது. இதனால், அப்துர் ரஹ்மான் சமீரின் கதையினை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில், அதில் தகவல்கள், தேதிகள் மற்றும் பெயர்கள் எல்லாமே முன்னுக்கு முரணாக உள்ளன[2]..

பற்பல தேதிகளை, சேரமான் பெருமாளுக்குக் கொடுத்தனர்:

ஐரோப்பியகிருத்துவ எழுத்தாளர்கள் கொடுத்த தேதி குறிப்பு[3]
மோயின்ஸ் 426 CE Moens gives A. D. 426;
கிளாடியஸ் பச்சனன் 490 CE Dr .C. Buchman 490;
பிஷப் மிடில்டன் 508 CE Bishop Middleton 508;
லாஸன் 750 CE Mr, Lawson 750;
பாதிரி டி. ஒயிட்ஹவுஸ் 825 CE the Rev. T. Whitehouse 825;
பவோலி 10ம் நூற்றாண்டு CE Paoli, the tenth century ;
யூதர்கள் 379 CE and the Jews themselves, A. D. 379,
பாதிரி டி. ஒயிட்ஹவுஸ் 416 CE making a trifling difference of 416 years, between the date given by them and that by Mr. Whitehouse

இந்த கால முரண்பாடும், கட்டுக்கதையின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது[4]. சுந்தரரர் மற்றும் சேரமான் பெருமாள், தண்டிவர்மனின் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் [795-845 CE]. ஆகவே, அக்காலத்தில் சென்றது என்பது பொய்யாகிறது.

Early spread of Islam 632-750 CE

10ம் நூற்றாண்டிற்கு பின்னர் தான், இஸ்லாம் மற்றும் முகமதியன் இந்தியாவில் அறியப்பட்டிருக்க வாய்ப்புள்ளது: முகமதிய மதத்தைத் தோற்றுவித்த, மொஹம்மதுவின் காலம் 6-7 நூற்றாண்டுகள் [c. 570 CE – 8 June 632 CE) ஆகும். ஆகவே, மதம் என்ற ஒன்று முழுமையாக உருவாகி, மெக்கா-மெதினா ஸ்தலங்களை புனித இடங்களாகக் கொண்டு, குரான் தொகுக்கப்பட்டு, புழக்கத்தில் வந்து, அம்மதம் பரவி, இந்தியாவிற்குள் நுழைய நிச்சயமாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். 610-632 வரை குரான் வெளிப்படுத்தப் பட்டுக் கொண்டிருந்து, மூன்றாம் காலிப் காலத்தில் [644-656] தொகுக்கப் பட்டதாலும், ஹதீஸ் போன்றவை 9-10 நூற்றாண்டுகள் வரை தொகுக்கப்பட்டு வந்ததாலும்,  எல்லாம் நிறைந்த இஸ்லாம் என்ற நிலை உருவாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே, அதுவரை, இந்தியாவில், அரேபியா, துருக்கி முதலிய இடங்களிலிருந்து வணிகம் நிமித்தம் வந்திருக்கலாம், ஆனால், அவர்கள் முகமதியர் கிடையாது. ஆரம்பத்தில் “காலிபைட்” பதவிக்கு சண்டை ஏற்பட்டு, சுன்னி-ஷியா பிரிவுகள், போர்கள் முதலியவை ஏற்பட்டு, பிறகுதான், ஒரு நிறுவனப்படுத்தப் பட்ட மதம் நிலையை அடைந்தது. ஆகவே, இவையெல்லாம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகள் தாம்.

 

© வேதபிரகாஷ்

09-07-2017

Early spread of Islam 632-750 CE-1500 by trade

[1] Some believe that the last Perumal was permitted to be Governor for thirty-six years, at the end of which he retired, and was induced by the Majains, commonly known as Jains, A.D. 378, to proceed to Mecca, at which plce many of that faith were established, carrying on a trade with India, which in subsquent centuries fell into Moorish hands.

 Francis Day, The Land of the Permauls or Cochin, its past and its present, The Adelph Press, Vepery, Madras, 1863, p.44.

[2] Mr. Logan tries to prove that the Perumal became a convert to Mahommedanism and went on a pilgrimage to Mecca in about 825 A. D. The story of Cheraman Perumal having become a Mohammedan to indicate a confusion in the minds of the writers between Cheranam  Perumal and one of the Zamorins who did accept the Koran and leave his country for Arabia in the first quarter of the 9th century, which well tallies with the beginning of the Malabar era. As the inscription on the tomb-stone of supposod apostate, on which the Perumal’s conversion and pilgrimage to Mecca is based, is Abdar Rahman Samiri, it cannot be connected with Cherman  Perumal except by a strange perversion of facts, dates and names.

Report by M. Sankara Menon, Census of India, 1901, Vol.XX, Cochin, Part-I, Cochin Government Press, Ernakulam, 1903, pp.xv-xvi.

[3] Dr. Francis Day has summed up in tho following paragraph the results of the investigation till 1863, as regards the date of thePeruraars abdication. “The shade of Cheraman Perumal is invoked eveu hundreds of years after he had paid the debt of nature, A. D. 378. For this event various authors have indulged in dates of their own, without advancing any argument whatever, tending to prove them correct; for instance, Moens gives A. D. 426; Dr .C. Buchman 490; Bishop Middleton 508; Mr, Lawson 750; the Rev. T. Whitehouse 825; Paoli, the tenth century ; and the Jews themselves, A. D. 379, making a trifling difference of 416 years, between the date given by them and that by Mr. Whitehouse.”

Report by M. Sankara Menon, Census of India, 1901, Vol.XX, Cochin, Part-I, Cochin Government Press, Ernakulam, 1903, p.xv.

[4] Though in prose, it claims to be an abridgement of the bigger Keralanaiakcm written by Thunjaththu Ezhuththachchan As it refers to the Ariyittmazhha of a Zamorm in 1627, it could not have made its appearance earlier Part I is pure myth and legends The chronology of Part II is not satisfactory, and it is inconsistent with what we know of Kerala from other more reliable sources Thus, Cheraman Perumal is said to have been sent by Krishnadeva Raya of Anagundi, and after going to Mecca and converted by uhammad, he is described as dying of fever on his way back According to the Keralolpaththi he arrived in Kerala in 355 and went to Mecca in 428 But Muhammad founded Islam in 622 and and Krishnadeva Raya became king of Anagundi m 1509 Apart from this anachronism there ts also a glaring inconsistentcy.

V. Krishna Ayyar, A Shory History of Kerala, Pai & Co., Ernakulam, 1966, pp.188-189.

நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?

மே 10, 2013
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.

  • நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
  • ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
  • தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
  • புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
  • தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
  • பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
  • நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
  • பாட்டு பாடலாமா, கூடாதா?

என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்? சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

மதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].

வந்தே மாதரம் கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?

பத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.

[6] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.

http://timesofindia.indiatimes.com/india/Cant-be-part-of-Vande-Mataram-BSP-MP-Barq/articleshow/19978268.cms

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

ஏப்ரல் 14, 2013

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

Saudi Arabia and its flag

பிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:

  • ஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].

என்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:

  • சவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].
  • அரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]
  • வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]
  • கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]
  • சவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.

என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.

Saudi royal life

இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

Saudi women

சவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன?: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்?”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் சமம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்!

Saudi women protesting

சவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலமாக இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.

Saudi worker

இஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.

Saudi workerker striking

இலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன என்பதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.

வேதபிரகாஷ்

14-04-2013


[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.

[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=681845

[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.