தாமஸ் கட்டுக்கதை–திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்–இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்! (6)
மு. தெய்வநாயகம் யார்?: வி.ஜி.சந்தோசம் அவரது குடும்பத்தின் எவாஞ்செலிஸ பின்னணி, ஜான் சாமுவேலின் முருகன்–ஏசு மாற்றம், ஆதி-கிருத்துவ மாநாடுகள், அவற்றில், இருவரது பங்கு முதலியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி மு. தெய்வநாயகம் என்பவரைப் பற்றி பார்ப்போம். பொதுவாக இந்துத்துவவாதிகள், ஏன், சாதாரணமான மக்களுக்குக் கூட, இவர் யார் என்று தெரியாது. இவர் தான், “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” என்ற புரட்டு ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளியிட்டவர். அதற்கு திரு. அருணைவடிவேலு முதலியார் மூலம் அக்டோபர் 24, 1991 அன்று மறுப்பு நூல் வெளியானதற்கு, கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்[1]. பல மடங்களுக்கு கடிதங்கள் எழுதி, அதனை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டார். அப்பொழுது தான், அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. காஞ்சிபுரத்தில் தத்துவ மையத்திற்கு பலமுறை சென்று, மறுப்பு நூல் தயாரானதும், அதனை சென்னையில் பலரிடத்தில் காட்டி, அதனை பதிப்பிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். பிறகு, அது மயிலாடுதுறை, அகில உலக சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற நிறுவனத்திற்கு சென்றது. ஒருவழியாக வெளியிடப்பட்டது. ஆர். எஸ். நாராயணஸ்வாமி தன்னுடைய கட்டுரையில் இதைப்பற்றி விவரித்துள்ளார்[2]. ஆனால், இவரைப் பார்க்காமல், யார் என்று தெரியாமல், “உடையும் இந்தியா” என்று புத்தகத்தை[3] எழுதி, தெய்வநாகம் மற்றும் தேவகலா தந்தை-மகள் ஜோடியின் புகழைப் பரப்பியது ராஜீவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தான், என்று அவுட்-லுக் சஞ்சிகையில், ஒரு கட்டுரை எடுத்துக் காட்டியது.
தெய்வநாயகம், தேவகலா புகழ் ஏன் பரப்ப வேண்டும்?: “உடையும் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தான் தமிழ் எவாஞ்ஜெலிஸ்ட்டுகள் / மதம் மாற்றுபவர்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பிம் இல்லை. மல்ஹோத்ரா அவர்கள் தான் இந்தியாவின் முதல் எதிரி என்று நம்புவது போல, என்னால் நம்ப முடியவில்லை”, என்று ஒருவர் ஆச்சரியப்பட்டதை இங்கு குறிப்பிடலாம்[4]. நிச்சயமாக ராஜீவ் மல்ஹோத்ராவுக்கு அவர்கள் யார் என்று தெரியாது. அரவிந்த நீலகண்டனுக்கும், தமிழர் சமயம் மாநாடு சென்னையில் நடந்தபோது, கலந்து கொண்டதற்கு முன்னர் தெரியாது. ஏனெனில், சென்னை ஆர்ச்பிஷப் பாஸ்டோரெல் சென்டரில் ஆகஸ்ட் 14-17 2008ல் தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது[5], அவர் ஒரு கிருத்துவர் பெயரில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, கே.வி.ராமகிருஷ்ண ராவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, இவர் யார், அவர் யார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ராவும் அவரங்களை யார்-யார் என்று அடையாளம் காட்டி சொல்லிக் கொண்டிருந்தார். ஆக, 2005ல் அந்த தெய்வநாயகம், ஜான் சாமுவேல், முதலாம் கிருத்துவ மாநாடு நடந்தபோது கலந்து கொண்டதால், தாமஸ் கட்டுக்கதையில் இருவரும் சேர்ந்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதே போக்குதான், இப்பொழுது, சந்தோசத்தைப் பாராட்டி விருது கொடுத்தவர்களிடம் வேறு விதமாக வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான தெய்வநாயகம்-ஜான் சாமுவேல்-வி.ஜி.சந்தோசம் கூட்டை அறிந்து கொள்ளாமல் அல்லது அறிந்தும், அறியாதது போல இருந்து, இவர்கள், இப்பொழுது பாராட்டு விழா நடத்தியிருப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும்.
சந்தோசம்–ஜான் சாமுவேல்–தெய்வநாயகம் தொடர்புகள்: இந்தியாவில் கிருத்துவத் தொன்மை மாநாடுகளில் [ஆகஸ்ட் 13-17, 2005; மற்றும் ஜனவரி 14-17, 2007], சந்தோசம் சாமுவேல், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் எல்லோரும் கிருத்துவர்கள் என்பதால், முன்னரும் பேசியிருக்கலாம், அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[6] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ஆக முதல் மாநாட்டிலேயே, இவர்களுக்குள் இருந்த சம்பந்தம், தொடர்பு மற்றும் உறவுகள் வெளியாகின. கிருத்துவர்கள் என்ற முறையில் அவற்றை பெருமையாக எடுத்துக் கொண்டனர் எனலாம். எனவே, அவர்களது மதநம்பிக்கையைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சரித்திரப் புறம்பான, தாமஸ் கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, இந்துமதத்தை தூஷிக்கும் போக்கைத் தான் கண்டிக்க வேண்டியுள்ளது. கிருத்துவ சரித்திர ஆசிரியர்களே தாமஸ் கட்டுக்கதையை ஒதுக்கித் தள்ளியப் பிறகும், இவர்கள் இதனை, கூட்டாக, இத்தனை பணம் செலவழித்து, தொடர்ந்து ஈடுபடுவது கேள்விக்குறியாக உள்ளது. அந்நிலையில் இந்துக்கள் இவர்களை ஆதரிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள், விருதுகொடுக்ககிறார்கள்,….என்றெல்லாம் இருக்கும் போது, அதனை ஆராய வேண்டியுள்ளது.
மைக்கேல் விட்செலும், சந்தோசமும், சமஸ்கிருத கல்லூரியில் நுழைவும்: குருபூர்ணிமா – ஜூலை.6, 2009 அன்று மைக்கேல் விட்செலின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதாராஜன், ஹரண் முதலியோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், போலீஸார் உள்ளே விடவில்லை[7]. அதாவது, மைக்கேல் விட்செல், ஒரு வெளிநாட்டவர், கிருத்துவர் ……அதனால், பெரிய-பெரிய மடாதிபதிகள், பண்டிதர்கள் முதலியோர் விஜயம் செய்து, ஆசீர்வாதித்து, சொற்பொழிவு ஆற்றிய இடத்தில், இவரை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்தனர்[8]. ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு முதலியோர், இந்துக்களாக இருந்தாலும், அந்த கிருத்துவரைத்தான் ஆதரித்தனர். அதுபோலத்தான், இந்துத்துப்வவாதிகள் இப்பொழுது வி.ஜி.சந்தோசத்தை பாராட்டி, விருது கொடுத்துள்ளனர். இங்குதான் இந்துக்களின் பலவீனம், உள்நோக்கம் அல்லது அந்த கிருத்துவர்களுடன் உடன்போகும் போக்கு, ப;அ சந்தேகங்களை எழுப்புகின்றன. ஒருவேளை, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்கின்றனரா? முன்னர், ஆர்.எஸ்.எஸ் கிருத்துவர்களுடன், திரு சுதர்ஷணம்ஜி தலைமையில் கேரளாவில் உரையாடல் வைத்துக் கொண்டனர். இப்பொழுதும், சமீபத்தில், கேரளாவில் அமீத் ஷா கிருத்துவ பாதிரிகளை சந்தித்துள்ளார். ஆகவே, தமிழக பிஜேபி மற்றும் கிருத்துவர்கள் அத்தகைய முறையில் இந்த உரையாடலை வைத்துக் கொண்டார்கள் போலும். மேலும் நாடார் காரணியும் இதில் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இப்பொழுது தமிழகத்தில், பிஜேபியில் நாடார்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இந்துத்துவ-கிருத்துவ உரையாடல்களுக்கு, நாடார்கள் தான் உகந்தவர்கள் என்று தீர்மானித்தார்கள் போலும் ஏனெனில், கன்னியாகுமரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நாடார்கள் இந்து-கிருத்துவரளாகவே இருந்து வருகின்றனர். அதாவது, அவர்களது குடும்பங்களில் உறவினர்கள் இந்துகளாகவும், கிருத்துவரளாகவும் இருந்து வருகின்றனர். வியாபாரம், சொத்து முதலியவற்றை இழக்கக் கூடாது என்ற ரீதியில் அத்தகைய பரஸ்பர-ஒத்துழைப்பு, உறவுகள் வைத்துக் கொண்டுள்ளனர். எனவே, மாநில மற்றும் மத்திய அரசியலுக்கு இவர்களது கூட்டு உதவும் என்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதால், அத்தகைய ஆதிக்கத்தை, இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் போலும்.முன்னர் மைக்கேல் விட்செல், சமஸ்கிருத கல்லூரியில் நுழைந்தது போல, இப்பொழுது சந்தோசம் நுழைந்திருக்கிறார். எனவே, இந்துக்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
தெரசா படத்தை எதிர்த்த உதயகுமார், இவ்விழாவில் சந்தோசமாக பங்கு கொண்டது, செல்பி எல்லாம் எடுத்து கொண்டது: கடந்த ஆகஸ்ட் 2016ல் இந்து ஆன்மீக கண்காட்சியில், இந்திய அகழ்வாய்வு துறை தெரசா படம் இருந்தது என்பதற்காக, உதயகுமார் என்பவர் ஆர்பாட்டம் செய்து எடுக்க வைத்தார். அதே நேரத்தில், பாரதிய இதிகாச சங்கலன சமிதி ஸ்டாலில் வைக்கப் பட்டிருந்த, ஈஸ்வர் ஷரண் எழுதிய, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை உட்பட, திராவிட சான்றோர் பேரவை வெளியிட்ட புத்தகங்களை, ஒருவர் வாரிச் சென்றார். ஆக முதல் நிகழ்ச்சியை “கிருத்துவ எதிப்பு” என்பதா, பின்னதை “கிருத்துவ ஆதரவு” என்பதா? ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்கள் என்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான்! அதே சாமி தியாகராஜன் தான், இப்பொழுது சந்தோசத்திற்கு “எல்லீசர்” பெயரில் விருது கொடுக்க விழா எடுத்துள்ளார்.
© வேதபிரகாஷ்
22-06-2017
[1] அருணை வடிவேலு முதலியார், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல், தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், 1991
[2] R. S. Narayanaswami, Deivanayagam gets his due, Organiser, November 7, 1991, New Delhi.
[3] Rajiv Malhothra and Aravindan Neelakandan, Breaking India: western Interventions in Dravidian and Dalit Faultlines, Infinity Foundation, Princeton, USA, 2011. இதில் வேடிக்கை என்னவென்றால், வேதபிரகாஷ் மற்றும் ஈஸ்வர் ஷரண் புத்தகன்ங்களைப் பற்றி எந்த குறிப்பையும் காணோம்.
[4] More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? They are Tamil evangelists, and while I hold no brief for either of them, I änd it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India.
Gita Ramaswamy, Yankee Hindutva Strikes A study on Bible-thumping activism ignores titular faultlines, concocts plots couched in anti-imperialism, \23 MAY 2011 BOOKS REVIEW.
http://www.outlookindia.com/magazine/story/yankee-hindutva-strikes/271815
[5] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/
[6] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.
[8] While coming out I saw Haran and another were distributing four-page handout about Michae Witzel (while entering I saw Haran and Radha Rajan were arguing with the police). So when I enquired with the police, the organizers had given a complaint asking for protection of the speaker.