Posts Tagged ‘பாரதம்’

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

Bharat sakti, Aurobindo 1904-08

வீக்என்டை ஜாலியாகக் கழித்த விதம்என்றாகியது: இவர்கள் முன்னமே  எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:

  1. இந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.
  2. ஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று?
  3. “பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.
  4. 130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை! என்று கேட்டிருந்தேன், வரவில்லை.
  5. “பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.
  6. 1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.
  7. “பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
  8. “பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்?
  9. தமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது!
  10. கத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன!

Suddhananda Bharati

ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா?: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.

Pondy Lit Fest - S G Suraya

தமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே? நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்!,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்?

PondyLitFest 2019-a lady lecturing standing on a table

தமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது.  வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.

PondyLitFest 2019- Hindi song

தூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.

© வேதபிரகாஷ்

07-10-2019Shenbaga convention centre, Puducherry

[1] The Hindu, Pondy Lit Fest begins, SPECIAL CORRESPONDENT, PUDUCHERRY, SEPTEMBER 28, 2019 00:38 IST; UPDATED: SEPTEMBER 28, 2019 04:56 IST

[2] Bedi inaugurates event; this year’s theme is ‘Bharat Shakti’: The second edition of the Pondy Lit Fest 2019, with the theme ‘Bharat Shakti,’ began here on Friday. Lieutenant Governor Kiran Bedi inaugurated the three-day event at Hotel Shenbaga convention centre. Ms. Bedi recalled the religious and cultural importance of the Union Territory. She spoke about the ancient history of Pondicherry and the origin of its name. Around 80 historians, writers, artists and journalists would participate in the three-day event.

Topics of discussion: Some of the topics included are “Nationalism: Just who is an anti-national,” Jammu and Kashmir: Erasing a blot on history,” Hindutva: Way of Life or rebranded Hinduism, “India in the world,” “Economy: Is $5trillion a mirage and “Fake News: Agenda or Technology to blame.” Kerala Governor Arif Mohammed Khan, Health and Public Works Minister of Assam Himanta Biswa Sarma and BJP general secretary Ram Madhav are the main speakers on the last day of the event. https://www.thehindu.com/news/cities/puducherry/pondy-lit-fest-begins/article29534347.ece

[3] The Print, India’s Right-wing doesn’t mind different voices within. That’s what separates it from Left, AJIT DATTA, Updated: 5 October, 2019 1:05 pm IST

[4] https://theprint.in/opinion/india-right-wing-mind-different-voices-within-left-wing/301461/

[5] DD, Pondy Lit Fest: A two day literature festival in Puducherry, Oct 4, 2019

[6] https://www.youtube.com/watch?v=atGA_Vl8hFE

[7] It is unfortunate that the organizers purposely prevented some experts from Tamilnadu to attend and the proceedings were held in a very restrictive manner. Ironically, most of them spoke in English and Hindi. Most of the speakers spoke in a very generalized manner [learned from three participants]. No videos are uploaded to know what exactly they spoke. There has not been any media coverage. Lt us hope that PondyLitFest 2020 would transparent, accommodative and democratic.

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

மார்ச் 21, 2013

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group

இலங்கைப் பிரச்சினைக்காக புதுச்சேரியில் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்துக்கு மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்கு பிற மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன[1]. அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன?

DK attacked Ayodhya mantap with petrol bombs

ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் மம்தா கூறியது: ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் காங்கிரஸை ஆதரிப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்[2]. மம்தா பேஸ்புக்கில்[3] குறிப்பிட்டது, இவ்வாறாக உள்ளது[4]:

“Our Party supports the cause of the Tamil brothers and sisters. We are deeply concerned about the atrocities meted out to a section of Tamil population in a foreign country.Local sentiments and their causes sometimes become very critical. We are supporting their cause. At the same time, our Party follows a policy that we should not interfere into issues involving external relations with foreign countries. We leave it for the Central Government to decide on such issues. However, the concerns of the state and the sentiments of the people must be kept in view by the Centre, before taking any decision pertaining to foreign country.”

மாறாக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இலங்கை நட்பு நாடு என்பதால் அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்து இருந்தார், என்று தமிழ் ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடினார்கள். “தி ஹிந்து” காரணம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றது[5].

புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சூறை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதும், அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் என்ற பெயரில், “ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனால், யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்து அதன் தலைவர் வீரமோகன், துணை தலைவர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூ ஜாடிகளை அடித்து உடைத்தனர்[6]. மேலும் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்[7]. மேலும் ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஆசிரம கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன[8]. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.

அப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன?

Salem Kanchi mutt attacked

எளிதான இலக்கைத் தேர்ந்தெடுத்து இவர்கள் தாக்குவது ஏன்?: உண்மையில் இவஎகள் தாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ்காரர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அவர்களது சின்னங்களைத் தாக்க வேண்டும் என்றால், சோனியா, ராஹுல், பிரியங்கா புகைப்படங்களைத் தாக்கியிருக்க வேண்டும். ஆனால், இப்படி சமந்தம் இல்லாமல் ஆசிரமத்தைத் தாக்குவது, பொருட்களை நாசம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகின்றது. முன்பு, சென்னையில், பழைய மாம்பலத்தில், இதேபோல சம்பந்தமே இல்லாத, இரண்டு அப்பாவி பிராமணர்களைத் தாக்கி, அருவாளால் வெட்டியுள்ளனர். இப்பொழுது இங்கு இப்படி செய்த அட்டூழியத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்[9] என்று செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதும், வெட்டியதற்கு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று எந்த செய்ட் ஹிகளும் வெளிவரவில்லை. இப்படி வன்முறையில் ஈடுபட்டு, ஒருவேளை கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டால், அத்தகையோர் மறுபடி-மறுபடி வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகி விடும்.

Raghavendra Brindavan attacked - Rama idol uprooted and thrown

© வேதபிரகாஷ்

21-03-2013


[5] A group of pro-Tamil activists today barged into the Aurobindo Ashram, damaged furniture and smashed glass panes after reportedly attacking and injuring the watchman. Police said activists of the Periyar Dravidar Kazhagam (PDK) also smashed flower pots and damaged the notice board, a clock and the ashram emblem atop the main gate. They also raised pro-Tamil slogans, police said, adding that the reason for the attack was not known.

http://www.thehindu.com/news/national/protamil-activists-attack-aurobindo-ashram/article4534302.ece