Posts Tagged ‘பசு மாமிசம்’

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

ஏப்ரல் 4, 2017

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்:  உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

Congress - calf and cow symbol

பசுவின் முக்கியத்துவம்: பாரதத்தில் பசுவைப் போற்றும் பழக்கம் பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. பசுவதை பெரும்பாவம் என்று கல்வெட்டுகளில் அதிகமாகவே குறிப்பிடப் பட்டுள்ளன. “இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும், ” போன்றவை மிகப்பிரபலம். பிராமணர்கள் தாம் தாவர உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் எல்லாவகையான உணவுகளையும் உண்டு வந்தனர். பிறகு ஜைனர் மற்றும் பௌத்தர்கள் புலால் மறுத்தல், புலால் உண்ணாமை, ஜீவகாருண்யம் முதலியவை போதித்தாலும், அவர்களும் அவற்றைப் பின்பற்றவில்லை. ஏனெனில், சத்திரிய ஜைனர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தரே பன்றி இறைச்சி தின்று வயிற்றுப் போக்கு, ரத்தம் வெளியேறியதால் இறந்தார். மேலும், பௌத்தர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கின்றனர். சங்க இலக்கியங்களிலிருந்து, திருக்குறல் வரையிலுள்ளவற்றை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இக்காலத்தில் இதைப் பற்றி பிரச்சார ரீதியில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. ஜீவகாருண்யம் பேசுபவன், எப்படி புலால் உண்ணுவான் என்று கூட யோசிக்காமல், கண்டவன் எல்லாம் சித்தாந்தம் பேச ஆரம்பித்து விட்டான்.

Get sinned if one kills cow

முகமதியஐரோப்பிய காலங்களில் பசுவதை: முகமதியர் இந்தியாவில் நுழைந்து, கொள்ளையடுத்து, பிறகு ஆட்சி செய்த காலங்களில், இவ்வுணர்வு அதிகமாகியது. ஏனெனில், அவர்கள் மாமிசம் உண்பவர்கள் மட்டுமல்லாது, பசுமாமிசம் உண்பவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியர்கள் அப்பழக்கத்தைக் கொண்டிருந்ததால், அவ்வாறே சித்தரிக்கப் பட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் [1839-1898] புலால் உணவுக்காக உயிர் வதை செய்வதை மிகக் கடுமையாகக்    கண்டித்தவர். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் பசுக் கொலை செய்து ஊன் தின்னும் கொடுமையை வெறுத்துத் தாக்கி 100 பாடல்கள் கொண்ட ‘ஆங்கிலேயர் அந்தாதி’ என்னும் சமுதாய சிந்தனை நூலை இயற்றியவர். பாரதத்தைப் பொறுத்த வரையில், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருந்தாலும், பசு மாமிசம் உண்பதில்லை. அதே போல, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்ற பண்டிகை-விரத காலங்களில் மாமிசம் உண்பதில்லை. அத்தகைய ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், மக்களிடையே எந்த பிரச்சினையோ, விவாதமோ வந்ததில்லை. ஆகவே, இத்தகைய உணவு உண்ணும் பழக்க-வழக்கங்களில், மாமிசம் அறவே உண்ணாக்கூடாது என்று சொல்லவே, அமூல் படுத்தவோ முடியாது. பசுவதை மூலம் கலவரங்களை உண்டாக்கலாம் என்றறிந்து, பரிசோதனை செய்தவன் வெள்ளைக் காரன். அச்சதியில் ஒத்துழைத்தவர்கள் முகமதியர். இக்கலை இப்பொழுதும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.

Anti-Gandhi pro-beef campaign

மாட்டிறைச்சியும், பசு மாமிசமும்: மாட்டிறைச்சி எனும்போது, எருது, எறுமை முதலியவற்றின் மாமிசங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள், கிருத்துவர்கள், மேனாட்டவர் போன்றோர் தாம் பசுமாமிசமும் உண்கின்றனர். இந்துக்களில் 90% பசுமாமிசம் உண்பதில்லை. எனவே, பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும். மாட்டிறைச்சியை உண்பதை யாரும் தடுக்க முடியாது. இப்பொழுது கூட சட்டம், தண்டனை முதலியவை “பசுவதை” பற்றி தான் உள்ளதே தவிர மற்ற மாட்டிறைச்சி பற்றியில்லை. ஆனால், ஊடகங்கள், இதனை ஊதி பெரிதாக்கி, செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்து வருகின்றன. ஒவைசி போன்ற தீவிரவாத-அடிப்படைவாத முஸ்லிம்களும் திமிராக, நான் அப்படித்தான் பேசுவேன், முடிந்தால் வழக்குத் தொடுத்துக் கொள் என்று அகங்காகரமாக பேசி வருகின்றனர். இதிலிருந்தே, ஊடகங்களும், மற்றவர்களும், இதை வைத்து கலவரம் உண்டாக்க எத்தனித்திருப்பது தெரிகிறது.     முன்னரே குறிப்பிட்டப் படி, “பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே”, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்.

Anti-Gandhi pro-beef campaign-gandhi against beef

பிஜேபிக்காரர்கள் குழப்புகின்றனரா, குழம்பியுள்ளனரா?: கேரள மாநிலம் மல்லப்புரம் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 03-04-2017 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். குறிப்பாக, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ‘பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்’ எனக் கூறியிருந்தார்[1]. இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க-வின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களைக் கிளம்பியுள்ளன[2]. பிற மாநிலங்களில் உ.பி, ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா மாட்டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. கேரள மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததுமே சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை தொடங்கியது[4]. பிற பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடவடிக்கை இதனை அடுத்து அதிகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என கூறியுள்ளார்.

Gandhi againat cow slaughter

பசுவதை மற்றும் மாட்டிறைச்சி சித்தந்தங்களை குழப்பும் ஊடகங்கள், அரசியல்வாதிகள்: “இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்தால் உயர் தரமான மாட்டிறைச்சிகள் கிடைக்க செய்வேன், இறைச்சி கூடங்களை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன், தடையின்றி மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன்,” என அவர் தெரிவித்திருந்தார்[5]. பசுவதை மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிரான சித்தாந்தங்களை உடைய பா.ஜ.க.வில் இருக்கும் அவர் இத்தகைய கருத்து கூறியிருந்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது[6]. இந்நிலையில், இன்று தன்னுடைய கருத்தில் இருந்து பல்டியடித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஸ்ரீபிரகாஷ், “நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பசுவதைக்கு முழுவதும் எதிரானவனே, உத்தரப்பிரதேசத்தில் செய்தது போல சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கடைகளை கேரளாவிலும் மூடுவோம் என சொல்லி, மக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்வோம் என கூறியிருந்தேன்,” என தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி குறித்து பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் இருவேறு கருத்துக்கள் தெரிவித்தது குறித்து அம்மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜேந்திரனிடம் கேள்வியெழுப்பியபோது, அவருடைய பேட்டிகளை நான் பார்க்கவில்லை என பதிலளித்துள்ளார்.

Gandhi againat cow slaughter-MODI

பசுவதை தண்டனைப் பற்றிய குழப்பங்கள், சட்டங்கள்: குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. எனினும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் அங்கு நீடித்து வந்ததை அடுத்து, தண்டனையை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது[7]. இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர் களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய் தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும். தவிர அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா கூறும்போது, ‘‘பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் செய்யும்படி சாதுக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர் களது கோரிக்கைக்கு இணங்க நாட்டிலேயே மிக கடுமையான சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், வாக்காளர்களை ஈர்க்கவும், அரசியல் ஆதாயம் பெறவும் மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன[8].

Cow slaughter-Act-implementation-violation

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 2015 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

© வேதபிரகாஷ்

04-04-2017

Cow slaughter-Act-implementation-violation-in states

[1] விகடன், அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச் செய்வேன்’ : பா.. வேட்பாளரின் வாக்குறுதி!, Posted Date : 15:26 (02/04/2017); Last updated : 10:00 (03/04/2017

[2] http://www.vikatan.com/news/india/85204-bjp-candidate-campaign-against-beef-ban.html

[3] தினத்தந்தி, எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி, ஏப்ரல் 02, 05:00 PM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/02170000/Give-me-your-vote-I-will-give-you-good-quality-beef.vpf

[5] மாலைமலர், ’பசுவதைக்கு நான் எதிரானவனேதரமான மாட்டுக்கறி வழங்கப்படும் எனக் கூறிய கேரள பா.. வேட்பாளர் பல்டி , பதிவு: ஏப்ரல் 03, 2017 22:57

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/03225742/1077888/Am-against-cow-slaughter-says-BJP-candidate.vpf

[7] தி.இந்து, பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம், Published: March 31, 2017 14:45 ISTUpdated: April 1, 2017 09:12 IST

[8]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9609759.ece

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)!

நவம்பர் 6, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)!

Marxist beef eating propaganda

Marxist beef eating propaganda

கம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம்: பிளவுபட்டு வேலைசெய்ய ஆரம்பித்த காம்ரேடுகள் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள, வரும் வரும்படியைப் பிரித்துக் கொள்ள, சங்கங்களை, சங்க உறுப்பினர்களை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள பலவித சித்தாந்தங்களை உருவாக்க ஆரமித்தனர். இவையெல்லாம், பொதுவாக ஒரு அல்லது பலவித எதிரியை / எதிரிகளை உருவாக்கி, அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது, நடக்க முடியாததை நடத்திக் காட்டுவேன் என்பது[1], போன்ற வாய்ஜாலங்களில் ஈடுபட்டே காலத்தைத் தள்ளிக் கொண்டு வந்தனர். நடக்காதவற்றிற்கும், தோல்விகளுக்கும், அந்த கற்பனை எதிரிகள் தாம் என்று குற்றஞ்சாட்டி வந்தனர். லெனின் கூறிய “சுயநிர்ணய உரிமை” என்றதை[2] குழப்பி, இந்திய மாநிலங்களில் பிரிவினைவாதத்தை வளர்த்து வருவது, அதே நேரத்தில் இந்திய தேசியத்தைப் பேசிவருவது முதலிவை அவர்களை வெளிக்காட்டியது. இதனால் கம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம் போன்ற வாதங்களும் வழக்கில் தாராளமாக வந்தன.  இப்பொழுதும், அவர்கள் தங்களுக்குள் நடக்கும் சித்தாந்த மோதல்களுக்கு இத்தகைய பிரயோகத்தை செய்து வருகிறார்கள்[3].

COMMUNIST BEEF

COMMUNIST BEEF

பிரிவினைவாதங்களினால் வளர்ந்து, நீர்த்துப் போன கம்யுனிஸ்ட் குழுமங்கள்: சிப்தாஸ் கோஷ் போன்றோர், சிபிஐ பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. ஜோஷி, ரணதேவ், ராஜேஸ்வர ராவ், அஜய் கோஷ் இவர்களிடையே இருந்த முரண்பாடுகளும் விவாதிக்கப்பட்டன. மார்க்ஸ் மற்றும் மாவோ சித்தாந்த மோதல்கள் பலவிதங்களில் வெளிப்பட்டன. மார்க்சிஸம்-லெனினிஸம் தான் சரியான தீர்வு என்றும் பேசப்பட்டது. 1969 [CPM (ML)] கல்கத்தாவில் உருவானது. கனு சன்யால் [ Kanu Sanyal] ஏப்ரல்.22, 1969 அன்று, அதாவது, லெனினின் பிறந்த நாள் அன்று, அக்கட்சியின் ஆரம்பத்தை அறிவித்தார். ஆனால், 1948ல் தொடங்கப்பட்ட எஸ்.யு.சி.ஐ தான்தான் இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்று பறைச்சாட்டிக் கொண்டு வருகிறது[5]. அரசியல் ரீதியில் வைத்துப் பார்க்கும் போது 1950 முதல் அவர்களது ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி, 1970 – 80 ஆண்டுகளில் 10 சதவீத ஓட்டுகளை வைத்திருந்தது. அது 2004ல் 8 சதவீதமாக குறைந்தது. தற்போது 5 சதவீதம் மட்டுமே பெறும் என தெரிகிறது.
பத்தாண்டுகளுக்கு முன், லோக்சபாவில் மூன்றில் ஒரு பங்காக 59 சீட்களை பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில். இந்தியா முழுவதும் 14-20 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 2014 பொதுத்தேர்தலில், 282 இடங்களை பிடித்து, பா.ஜ., ஆட்சி அமைத்த போது, கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்தது[6] எனலாம். இருப்பினும்ப் மூன்றாவது அணி என்றெல்லாம் கலாட்ட செய்து வருவார்கள். ஆனால், இப்பொழுது பிஹார் தேர்தலில் அவர்களை காணவில்லை, மாறாக, பசு-மாமிச விருந்து கலாட்டாகளை மற்ற மாநிலங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

FEMEN-ized communist propaganda posters-cow and milk

FEMEN-ized communist propaganda posters-cow and milk

தேசியமா, கூட்டாட்சியா, சுய-நிர்ணயமா – எடுபடாத சித்தாந்தங்கள்: யு.எஸ்.எஸ்.ஆர் பிளந்த பிறகு, அவர்களது சித்தாந்தம் உலக அளவில் நீர்த்துப் போய் விட்டது. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவிலும் அவர்களது ஆட்சி வீழ்ந்து விட்டன. இந்திய தேசீயம் என்று வந்தபோது, அவர்களது “பிரிந்து போகும் உரிமை” போன்ற வாதங்கள் எடுபடாமல் போய்விட்டன. திராவிடத் தலைவர்கள் பிரிவினையிலிருந்து, “மாநில சுயயாட்சி”க்கு வந்து, பிறகு, ஆரிய கட்சிகளுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு, தேசிய நீரோட்டத்துடன் கலந்து விட்ட பிறகு, தமிழகத்திலேயே இவர்களது சித்தாந்தம் தேய்ந்து விட்டது. ராமமூர்த்தி எழுதிய ’’ஆரிய மாயையாதிராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’, திராவிடத்தால் வீழ்ந்தோம், முதலிய புத்தகங்கள், திராவிட சித்தாந்திகளை விட, காம்ரேடுகளைத்தான் அதிகம் பாதித்தன. இதனால், காஷ்மீர் மற்றும் தமீழீழம் பிரச்சினைகளை உசுப்பிக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிரபாகரன் கொலையுண்டு, திராவிடத் தலைவர்களின் நிலைப்பாடு வெளியானவுடன், “இந்துத்துவா”வை எதிர்த்து பிழைத்து வருகின்றன[7].

FEMEN-ized communist propaganda posters-cow-woman and milk yield

FEMEN-ized communist propaganda posters-cow-woman and milk yield

கம்யூனிஸ சித்தாந்தம் எப்படி இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் வேறுபடுகின்றன?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் [Communist Party of India[8]] பரிவாரத்தில் [AITUC, AIKS, AIYF, AISF, NFIW, BKMU] என்று பல அவதாரங்கள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)டின் Communist Party of India (Marxist) அங்கங்கள் [CITU, AIKS, DYFI, SFI, AIDWA, GMP] என்று பலவாறு செயல்பட்டு வருகின்றன. எஸ்.யு.சி.ஐ [Socialist Unity Centre of India (Communist), மற்றும் அதன் பாகங்களான [AIUTUC, AIMSS, AIDYO, AIDSO] முதலியவையும் சித்தாந்த ரீதியில் போராடி வருகின்றன. இதுதவிர, கத்தார் கட்சி (Communist Ghadar Party of India), நக்ஸல்பாரி எழுச்சி (Naxalbari uprising), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) [Communist Party of India (M-L)[9]], Liberation, புதிய ஜனநாயகக் கட்சி [New Democracy], ஜனசக்தி [Janashakti], மற்றும் PCC, 2nd CC, Red Flag, Class Struggle, Communist Party of India (Maoist), போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில், இவை மொழி, இனம், சாதி போன்ற பிர்ச்சினைகளை உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்ற சித்தாந்திகளை ஆட்டிப் படைத்து வருகின்றன. தமிழ், தமிழினம், தமிழ்வெறி, தமிழகம், தமிழ்நாடு-தனி நாடு, தமிழ் ஆட்சிமொழி, தமிழீழம், ஆரிய-திராவிட இனவாதங்கள், பார்ப்பன, சமஸ்கிருத, இந்து-விரோத, நாத்திக வாதங்கள் என்று பலவற்றை வைத்துக் கொண்டு குழப்பி காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

DYFI beef eating Kerala

DYFI beef eating Kerala

என். ராம் மற்றும் தி இந்து மேல் திரும்பியது ஏன்?: தமிழகத்தில் இவர்கள், இதனால், இந்தியப் புரட்சி, தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சி, குடிநாயகம்-ஜனநாயகம், இந்தியதேசம்-தமிழ்தேசம், பார்ப்பனீயம், பார்ப்பன பயங்கரவாதம், கள்ளச்சாராயம்-நல்ல சாராயம், தனியார் கல்வி- அரசு கல்வி, இந்தி-தமிழ், தேர்தல் பாதை-திருடர் பாதை, புரட்சி பாதை – மக்கள் பாதை, கருவி போராட்டம், தமிழ் பாதுகாப்பு போராட்டம், தமிழ் ஆட்சி மொழி, வர்க்கம்-வர்க்க போராட்டம், என்றெல்லாம் பேசிக்கொண்டு தமக்குள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவில் இடதுசாரி சித்தாந்தங்கள் பொய்த்த பிறகு, மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கேற்றபடி திரிபுவாதக்கள் செய்து கொண்டிருப்பதால், எங்கும் எடுபடாமல், குழப்பவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலாளிகளை, வியாபாரிகளை, தொழிலதிபர்களை, நிலதிபர்களை, பண்ணையார்களை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டு பிழைத்து வரும் இவர்கள், எதையெதையோ பேச ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கு மேலேயே சேற்றை இறைத்து வாரி, தங்களது பலவீனங்களை, சித்தாந்த வரட்சியை, போலிப் புரட்சித் தனத்தை வெளிக்காட்டி வருகிறார்கள்.

CPI-ML- activists consuming beef outside the Tahsildar office in Sindhanur on Thursday -05-11-2015- Photo-SANTOSH SAGAR.

CPI-ML- activists consuming beef outside the Tahsildar office in Sindhanur on Thursday -05-11-2015- Photo-SANTOSH SAGAR.

பீப்-ஈடிங் – பசு-மாமிசக்கறி தின்னும் ஆர்பாட்டம், போராட்டம் முதலியன: கம்யூனிஸ்ட் எந்த கறி சாப்பிடவேண்டும் என்று மார்க்ஸ், லெனின், மாவோ முதலியோர் ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே, அவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில், அவர்கள் இதைத்தான் சாப்பிடுவோம் என்று ஆர்பாட்டம் செய்யலாம் போராட்டம் நடத்தலாம், பீப்-உண்ணும் விழா நடத்தலாம். ஆனால், அதில் சமத்துவம், சமதர்மம், செக்யூலரிஸம் முதலியவைப் பின்பற்றப்படுகிறதா என்று காம்ரேடுகள் கவனிக்கவேண்டும். இப்பொழுது எல்லா மாநிலங்களிலும் அத்தகைய விருந்துகளை – பீப்-ஈடிங்-பசு மாமிசக்கறி தின்னும் – நடத்தி வருகிறார்கள்[10]. அதாவது, பிஜேபியை எதிக்கிறேன் என்று, இந்துக்களைத் தான் அவமதித்து வருகின்றனர்[11]. அதனால்தான், இந்துமதத்தலைவர், இது போல, நீங்கள் பன்றி மாமிசம் தின்னும் விழா நடத்துவீர்களா என்று கேட்டிருக்கிறார். ஆக, பிரச்சினையைத் தூண்டி விட்டு, கலவரமாக்கும் போக்கு, இவர்களிடம் தான் காணப்படுகிறது.

ommunism-political-ideologies-

Communism-political-ideologies-

© வேதபிரகாஷ்

06-11-2015

[1] ஏழ்மையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், சுரண்டலை ஒழிப்போம், விபச்சாரத்தை ஒழிப்போம் போன்றவை; அனைவருக்கும் வேலை செய்யும் உரிமை (வேலை கிடைக்கிறாதோ இல்லையோ)……

[2] Lenin, The Right of Nations to Self-Determination, Progress Publishers, Moscow, 1974.

[3] போலி கம்யூனிஸ்டுகள்: பாசிச ஜெயாவின் அடிமைகள்! – இவ்வளவு கேவலமான நிலைக்குப் போய் போலி கம்யூனிஸ்டுகள் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குவதற்கான காரணம், இக்கட்சிகள் தமது வர்க்க அடித்தளத்தை இழந்து பிழைப்புவாதப் புதைசேற்றில் விழுந்து கிடப்பதுதான். புரட்சிகர அரசியலையும் சித்தாந்தத்தையும் கைவிட்டு நாடாளுமன்ற – சட்டமன்ற சாக்கடையில் விழுந்து புரள்வதற்குத் தீர்மானித்த காலத்திலிருந்தே இந்தப் பிழைப்புவாத நோய் அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது. பின்னர் படிப்படியாக அது முற்றத் தொடங்கி, வரலாற்றைப் படைக்கும் உந்துசக்திகளான உழைக்கும் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், வர்க்கப் போராட்டத்தையே கைகழுவிட்டு ஓட்டுக்கும் சீட்டுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காலை நக்கி ஆதாயமடைவதே அவர்களது இலட்சியமாகிப் போனது. http://www.vinavu.com/2014/04/08/cpi-cpm-slaves-of-jayalalithaa/

[4]  Shibdas Ghosh, Selected Works, Vol.II, Central committee – Socialist Unity Centre of India, Calcutta, 1992, p.220-221.

[5]  சிப்தாஸ் கோஷ், எஸ்.யு.சி..யே இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை, 1987.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=961946

[7]  இது உதாரணத்திற்காகக் கொடுக்கப்படுகிறது – இது தவிர பலவுள்ளன –  http://theekkathir.in/2015/11/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

[8] http://www.communistparty.in/

[9] http://www.cpiml.org/

[10] http://www.thehindu.com/news/national/karnataka/backing-cms-stance-left-activists-eat-beef-in-public/article7848635.ece

[11] http://www.thehindu.com/news/national/karnataka/left-activists-eat-beef-in-public-to-support-cm/article7846296.ece

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (1)!

நவம்பர் 5, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (1)!

M K Narayana, S C Chandrahasan, N Ram - 04-11-2015

M K Narayana, S C Chandrahasan, N Ram – 04-11-2015

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்: சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்து மையம் [The Hindu Centre for Politics and Public Policy] சார்பில், “இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்”, குறித்து 04-11-2015 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் எம்.கே. நாராயணன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார்[1]. இக்கருத்தரங்கில் இந்து பத்திரிகை குழுமத் தலைவர் என். ராம் மற்றும் எம்.கே. நாராயணன் பங்கேற்க, “மே 17 இயக்கம்” எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடெமியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அனைவரது பைகளும் சோதிக்கப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்[2]. அங்கும் தீவிரக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்[3]. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்தவர் எம்.கே. நாரயணன். ஐந்தாண்டு அந்த பதவியில் இருந்தார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராகவும் பதவி வகித்தார். வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அவரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்[4]. இது தவிர, எ.எஸ். சந்திரஹாஸன் – ஈழ அகதிகள் நிறுவனம் [S.C. Chandrahasan,  Organisation for Eelam Refugees Rehabilitation treasurer], பொருளாளர்; என். ராம் – கஸ்தூரி அன்டு சன்ஸ் லிமிடெட், சேர்மென் [N. Ram, the Chairman of Kasturi and Sons Limited]; ஆர். கே. ராதாகிருஷ்ணன், பிரன்ட்லைன், துணை ஆசிரியர் [R.K. Radhakrishnan, Senior Deputy Editor, Frontline] முதலியோர் கலந்து கொண்டனர்[5].

Police taking custody of a man who attacked M.K. Narayanan in Chennai on Wednesday. Photo- R. Ravindran

Police taking custody of a man who attacked M.K. Narayanan in Chennai on Wednesday. Photo- R. Ravindran

பிரபாகரன் செருப்பை வீசினாரா, செருப்பால் அடித்தாரா, சரமாரியாக அடித்தாரா, துவைத்து எடுத்தாரா?: தமிழ் ஊடகங்களின் செய்தி வெளியீடே அலாதியானது எனலாம். ஒரே நிகழ்ச்சியை எப்படியெல்லாம் வர்ணிக்கின்றது என்பதனை பாருங்கள்:

  1. இந்நிலையில், 2 மணி நேர நிகழ்ச்சி முடிந்தவுடன், புதுக்கோட்டை பிரபாகரன் என்று பதிவு செய்யப்பட்ட நபர், திடீரென தனது காலணியை எடுத்து எம்.கே. நாராயணனை அடித்தார்[6].
  2. “செருப்பால் அடித்ததாக, அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்”, என்கிறது தமிழ்வின்[7]. உடனே அங்குள்ள போலீஸார் அவரைப் பிடித்து அரங்கில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது, அந்த நபர், எம்.கே. நாராயணன் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக கோஷம் எழுப்பினார். தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்றும் கோஷமிட்டார். தாக்கிய நபர்”எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்” என்று கூறியபடியே அடித்தார்.
  3. இதில் இரண்டு – மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்ததாக கூறப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார்.
  4. சென்னையில் தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாரயணனை தமிழ் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் செருப்பால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்[8] என்கிறது ஒன்.இந்தியா.தமிள்.
  5. “எம்.கே. நாராயணனை பலமுறை செருப்பால் அடித்து துவைத்தார்”, என்கிறது ஒன்.இந்தியா.தமிள், இன்னொரு இடத்தில்.
  6. தினமலர், “அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டார். செருப்பில் ஆணி பதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது”, என்கிறது[9].

இதனைத் தொடர்ந்து எம்.கே. நாராயணனை செருப்பால் அடித்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அந்த கருத்தரங்கம் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

N Ram opposed - reason explained - 03-11-2015

N Ram opposed – reason explained – 03-11-2015

செருப்படிதாக்குதல் ஏன்?: பிரபாகரன் செருப்பை வீசினாரா, செருப்பால் அடித்தாரா, சரமாரியாக அடித்தாரா, துவைத்து எடுத்தாரா, என்று ஆராய்ச்சி செய்கின்ற நிலைக்கு எடுத்துச் சென்றுள்ள ஊடகங்கள், செருப்பால் ஏனடித்தார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. எம்.கே. நாராயணனை செருப்பால் சரமாரியாக தாக்கி கைது செய்யப்பட்ட பிரபாகரன் செய்தியாளர்களிடம், நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் இல்லை; இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தவறாக வழிநடத்தியவர் எம்.கே.நாராயணன். அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றார்[10].  இருப்பினும், கைதானவர் “மே 17 இயக்கத்தை” சேர்ந்தவர் என்று தெரிகிறது, என்கிறது மாலைமலர்[11]. அவ்வாறு சந்தேகிக்கப்படுகின்றது என்கிறது தினமலர்[12].  அதென்ன, அவ்வளவு பெரிய இயக்கமா, இல்லை, “ராம்” போன்ற கம்யூனிஸ சித்தாந்திகள் நடத்தும் கருத்தரங்கத்தையே பாதிக்கும் அளவில் உள்ல பலம் கொண்ட அமைப்பா? நல்லவேளை, அவருக்கு / செருப்பால் அடித்தவருக்கு சகிப்புத்தன்மை ஏனில்லை என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை! சுதேந்திர குல்கர்னியின் மீது மை ஊற்றியதற்கு கலாட்டா செய்தி, உலக செய்தியாக்கிய போது, இவ்விசயம் உள்ளூர் விசயமாக முடக்கப்பட்டுள்ளது.

How beef-eating politics and Sri Lankan issue mixed-04-11-2015

How beef-eating politics and Sri Lankan issue mixed-04-11-2015

விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள்தமிழகத்தில் இருக்கிறார்களா?: இச்சம்பவத்திற்கு பின்னர், நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த என். ராம், இது முட்டாள்தனமான, மக்கள் விரோத கும்பல் நடத்திய அறிவற்ற செயல் என்று குறிப்பிட்டார். மேலும், மே 17 இயக்கத்திடம் இருந்து அச்சுறுத்தல் வந்தபிறகு இந்து மையம், போலீஸாருக்கு தகவல் அளித்ததாகவும், இதையடுத்து காவல்துறை தரப்பில் சிறந்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் என். ராம் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாகவும், இதில் பங்கேற்ற பல வல்லுநர்கள் மற்றம் இலங்கை தமிழ் அகதிகள் கருத்துப் பரிமாற்றம் செய்ததாகவும், இதுபோன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.  இந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்[13]. முன்னதாக, எம்.கே. நாராயணின் வருகையை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், அவரது உருவப்படம் தீவைத்து கொளுத்தப்பட்டது.

mk_naraayanan_nram_protest.Nov.2015

mk_naraayanan_nram_protest.Nov.2015

இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் யார், ஆதரவாளர்கள் யார்?: என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார் என்றால், இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் யார், ஆதரவாளர்கள் யார்? என்ற கேள்வி எழுகின்றது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அல்லது சித்தாந்த ரீதியில் செயல்படும் பலரின் நட்பை, மதிப்பை, ஆதரவைப் பெற வேண்டுமானால், இலங்கைப் பிரச்சினையை யாராக இருந்தாலும் ஆதரித்தாக வேண்டும், இல்லையெனில் அவன் தமிழ் விரோதி, தமிழ் துரோகி, தமிழின விரோதி என்றெல்லாம் வசைப்பாடப்படுவர். அதனால், எல்லோருமே, ஒரே பாட்டைத்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரபாகரன் கொலையுண்டதை யாரும் தடுக்கவில்லை, தடுக்க முடியவில்லை. ஆனால், இன்றும், படை தயாராக இருக்கிறது, அனுப்புவோம் என்றெல்லாம் மேடைகளில் பேசி வருகின்றனர். எந்தப் படையை, எப்படி அனுப்புவர் என்று தெரியவில்லை. தமிழுக்காக உயிரை விடுவேன் என்றவர்கள், தமிழீழம் அமைத்தேத் தீருவேன் என்றவர்களும் வேறு பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், மாட்டுக்கறிப் பிரச்சினையை லாவகமாக, இச்சித்தாந்திகள், இப்பிரச்சினையுள் நுழைத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

05-11-2015

[1] தமிழ்வின், எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்!, புதன்கிழமை, 04 நவம்பர் 2015, 05:54.02 PM GMT .

[2]  பிபிசி.தமிழ், எம்.கே.நாராயணன் சென்னையில் தாக்கப்பட்டார்!, புதன்கிழமை, 04 நவம்பர் 2015, 05:54.02 PM GMT .

[3] நியூஸ்.7, சென்னையில் எம்.கே.நாராயணன் மீது தாக்குதல், Updated: Wednesday, November 4, 2015.

[4]  மாலைமலர், காங்கிரஸ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசி தாக்குதல், பதிவு செய்த நாள்: புதன்கிழமை, நவம்பர் 04, 11:09 PM IST.

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/mk-narayanan-for-across-the-border-citizenship-for-tamil-refugees/article7842860.ece

[6] http://ns7.tv/ta/man-attacks-former-nsa-m-k-narayanan-chappal-chennai.html

[7]  http://www.tamilwin.com/show-RUmtzBTYSVfx2G.html

[8] ஒன்.இந்தியா.தமிள், சென்னையில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கு சரமாரி செருப்படிபிரபாகரன் கைது, Posted by: Karthikeyan, Updated: Wednesday, November 4, 2015, 23:13 [IST].

[9] தினமலர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீச்சு, நவம்பர்.5, 2015, 00.37.

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/former-nsa-m-k-narayanan-attacked-chennai-239225.html

[11] http://www.maalaimalar.com/2015/11/04230940/Man-attacks-former-national-se.html

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1380019

[13] http://www.bbc.com/tamil/india/2015/11/151104_mknarayanan

பிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும் – மாட்டிறைச்சி விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் கூத்து!

நவம்பர் 5, 2015

பிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும் – மாட்டிறைச்சி விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் கூத்து!

pramod-mutalik-sent-pork-to-siddaramaiah

pramod-mutalik-sent-pork-to-siddaramaiah

சித்தராமையா கலவரமூட்டும் பேச்சை ஏன் சோனியா கண்டிக்கவில்லை?: மாட்டிறைச்சி சாப்பிட்டால் க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவருக்கு பன்றிக்கறி பார்சல் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்[1]. முதல் கட்டமாக அந்த அமைப்பினர் முதல்வருக்கு பன்றிக்கறி பார்சல் 03-11-2015 அன்று அனுப்பியுள்ளனர்[2]. முன்னதாக, சித்தராமையா, தான் இதுவரை பன்றி இறைச்சி சாப்பிட்டதில்லை என்றும், இருப்பினும் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்[3] [ಗೋಮಾಂಸ ಹೇಳಿಕೆ: ಮಾತು ಬದಲಿಸಿದ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ – ಹಂದಿ ಮಾಂಸ ತಿಂದಿಲ್ಲ, ಇನ್ನು ಮುಂದೆ ಹಂದಿ ಮಾಂಸವನ್ನೂ ತಿನ್ನುತ್ತೇನೆ: ಸಿದ್ದರಾಮಯ್ಯ]. இத்தகைய பேச்சுகள் உள்ள நிலையை மோசமாக்கும் என்று யாரும் அவரைக் கண்டிக்கவில்லை. சோனியா இது பற்றி ஏன் ஒன்றும் பேசவில்லை, என்று யாரும் கேட்கவில்லை. ஊடகக்காரர்களும், இதனை பொறுட்படுத்தவில்லை. ஆனால், தி இந்து இச்செயலை அத்துமீறல் என்று குறிப்பிட்டு, ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கைதாகிறார்? என்று தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, நீதிபதி போல அத்துமீறல் என்று தீர்மானித்து, கைது செய்யவும் தீர்மானித்து விட்டது போலும்!

Siddharamaiah with Muslims eating.2

Siddharamaiah with Muslims eating.2

பசு மாமிசம் சாப்பிடுவேன் என்றார் ஒருவர், இன்னொருவர் அப்படி சாப்பிட்டால் தலையை வெட்டுவேன் என்கிறார்!: கர்நாடக முதல்வர் சித்தரமையா கடந்த வாரம் த‌னக்கு பிடித்தால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். அதனை யாரும் தடுக்க முடியாது [“Till date I have never eaten cow meat. But if it suits my palette and if I want to eat beef, I will eat it. Nobody can stop me,” he said] என கூறியிருந்தார்[4]. சிலர் இப்பேச்சைக் கண்டித்தும், அவர் கவலைப்படவில்லை. உணவைப் பற்றி அரசியல் நிர்ணய சட்டம் என்ன சொல்கிறது என்று தனக்கு நன்றாகத் தெரியும் என்பதனால், எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்[5]. இதையடுத்து விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் கர்நாடகாவில் பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்[6]. இதனிடையே பாஜகவை சேர்ந்த ஷிமோகா மாவட்ட செயலாளரும், மூத்த தலைவருமான சென்ன பசப்பா, ‘‘இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டை வெட்டி சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன். அவரது தலையில் கால்பந்து விளையாடவும் தயங்க மாட்டேன்’’ என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஷிமோகா போலீஸார் சென்னபசப்பா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்[7].

Siddharamaiah with Muslims eating.3

Siddharamaiah with Muslims eating.3

பன்றி இறைச்சியை சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்க சித்தராமையாவுக்கு தைரியம் இருக்கிறதா?: இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், ‘‘இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச்சியை சாப்பிடுவேன் எனக்கூறி, இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இதற்காக சித்தராமையா இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு என் மீது 90 வழக்குகளை தொடுத்துள்ளது. இதனை சட்டரீதியாக எதிர் கொண்டாலும், அரசியல் ரீதியாக தக்க பதிலடி கொடுப்பேன். மாட்டின் இறைச்சியை சாப்பிடும் சித்தராமையா, பன்றியின் இறைச்சியை சாப்பிடுவாரா? பன்றி இறைச்சியை சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்க சித்தராமையாவுக்கு தைரியம் இருக்கிறதா?”என கேள்வி எழுப்பினார்[8]. மங்களூர் பப் விவகாரத்திலிருந்து, இவருக்கு அரசு கெடுபிடிகள் போட்டுள்ளது.

Pink panty Muthalik 2009

Pink panty Muthalik 2009

பிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும்: இப்பிரச்சினைத் தொடர்ந்து பீஜாப்பூர் மாவட்ட‌ ஸ்ரீராமசேனா அமைப்பின் சார்பாக சித்தராமையாவுக்கு ஒரு கிலோ பன்றிக்கறி பார்சல் மூலமாக அதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் அனுப்பி வைத்தார். இதே போல மாநிலம் முழுவதிலும் இருந்து சித்தராமையாவுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பினர் பன்றி இறைச்சி பார்சல் அனுப்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். உடனே இச்செயலை உடகங்கள் குறை கூற ஆரம்பித்துள்ளன. சென்னபசப்பா கைது செய்யப் பட்டதைப் போல, பிரமோத் முத்தாலிக்கும் ஸ்ரீராம் சேனா அமைப்பினரும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[9] என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியென்றால், சித்தராமையா பேச்சும் கலவரம் உண்டாக்கும் விதத்தில் தானே உள்ளது? கருத்துரிமை, பேச்சுரிமை என்று வரும்போது, அவை எல்லோருக்கும் ஒரே மாதிரி செயல்படுத்தப் படுவதில்லை. அருந்ததி ராய், பல திராவிடத் தலைவர்கள், காஷ்மீர் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் அடிக்கடி பேசித்தான் வருகிறார்கள், வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், ஒருமுறையாவது, நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. மங்களூர் பப் விவகாரத்தில் பிரமோத் முத்தாலிக்கு பல பெண்கள் பிங் கலர் ஜட்டிகளை பார்சலாக அனுப்பி வைத்தனர்[10]. அதாவது, குடிப்பது மட்டுமல்ல, உடலுறவு கொள்வது கூட எங்கள் உரிமை, அதில் யாரும் தலையிட முடியாது என்பதை வலியுறுத்த அவ்வாறு செய்தனர். என்ன, கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல், இவ்வாறு செய்கிறீர்களே என்று, அப்பெண்மணிகளை யாரும் கேட்கவில்லை, கண்டிக்கவில்லை. மாறாக செய்திகளை பெருமையாக வெளியிட்டார்கள்.

Pink panty Muthalik 2009.2

Pink panty Muthalik 2009.2

பிரமோத் முத்தாலிக் கர்நாடகத்தில் சென்று வர தடை: ஒருவருக்கு, இந்தியாவில், கர்நாடகத்தில், எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் தடையுள்ளது என்றால், யாராவது நம்புவார்களா? ஆனால், பிரமோத் முத்தாலிக்  தனது மாநிலத்தில் சென்று வர தடையுள்ளது. இதனிடையே கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பிரமோத் முத்தாலிக் நுழைய முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய பாகல்கோட்டை மாவட்ட நிர்வாகம், மத கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பிரமோத் முத்தாலிக் ஒரு மாதத்துக்கு பாகல்கோட்டை மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது[11]. கடந்த செப்டம்பர்.23ம் தேதி, விநாயகர் சிலைகள் விமர்ஜனம் ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதால், இத்தடை விதிக்கப்பட்டுள்ளது[12].

© வேதபிரகாஷ்

05-11-2015

[1] http://vijaykarnataka.indiatimes.com/district/vijayapura/1-kg-pork-parcel-to-cm-siddaramaiah/articleshow/49647982.cms

[2]  http://www.indian24news.com/india/mutalik-barred-from-entering-mudhol-from-november-23/62073-news

தி இந்து / இரா.வினோத், கர்நாடகாவில் இந்துத்வா அமைப்பினர் அத்துமீறல்: முதல்வருக்கு பன்றிக்கறி பார்சல்ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கைதாகிறார்?, Published: November 5, 2015 07:44 ISTUpdated: November 5, 2015 07:46 IST.

[3] http://www.kannadaprabha.com/top-news/i-have-not-had-pork-but-i-will-eat-says-siddaramaiah/262450.html

[4] http://timesofindia.indiatimes.com/india/Nobody-can-stop-me-from-eating-beef-if-I-want-to-Karnataka-CM-Siddaramaiah/articleshow/49584012.cms

[5] http://www.coastaldigest.com/index.php/news/80802-cm-sticks-to-his-beef-statement-refuses-to-comment-on-pejawars-pork-remark

[6] தினமணி, சித்தராமையாவுக்கு பன்றிக்கறி பார்சல்: ஸ்ரீராம் சேனா அமைப்பு, By DN, பெங்களூர், First Published : 05 November 2015 11:49 AM IST.

[7]http://www.dinamani.com/india/2015/11/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article3114834.ece

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என்ற சித்தராமையாவுக்கு 1 கிலோ பன்றிக்கறி பார்சல் அனுப்பிய முத்தாலிக்!, Posted by: Veera Kumar Updated: Wednesday, November 4, 2015, 16:21 [IST]

[9]http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7844925.ece

[10] http://www.swannet.org/node/1378

[11] http://tamil.oneindia.com/news/india/pramod-mutalik-sent-one-kg-parcel-pork-meat-to-siddaramaiah-239207.html

[12] http://www.thehindu.com/news/national/karnataka/mutalik-barred-from-entering-mudhol-from-november-23/article7844266.ece

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)?

நவம்பர் 1, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)?

Beef politics - Kerala, WB and Delhi CMs

Beef politics – Kerala, WB and Delhi CMs

என்ன சொல்கிறது டெல்லி போலீஸ்?: இந்த சோதனை குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஜடின் நர்வால் கூறும்போது, “இந்து சேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தா ஒரு புகார் அளித்தார். அதில், டெல்லியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையான கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருவதால் கேரளா இல்லத்துக்கு போலீஸ் படை விரைந்தது. இருப்பினும் பாதுகாப்பு கருதி போலீஸ் படைகள் அங்கு சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது” என்றார். போலீஸாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமையினை செய்தார்கள் என்றுதான் ஆகிறது. கேரளா பவனில் போலீஸ் கூட அனுமதி பெற்றுதான் உள்ளே நுழைய வேண்டும் போன்ற வாதங்கள் அபத்தமாக உள்ளன.

kerala-mps-protest-outside-kerala-house-NDTV photo

kerala-mps-protest-outside-kerala-house-NDTV photo

கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து இருக்கிறார்களா?: கேரளாவில் பிஜேபி மற்றும் ஶ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தையும் நெருங்கி வர முயற்சியில் ஈடுபட்டுள்ள விஸ்வநாத் என்பவர் தான் இந்த விவகாரத்திற்கு காரணம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது[1]. ஆனால், அவரோ “சில நண்பர்கள் ஒரு படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதனை நான் என் பேஸ்புக்கில் போட்டேன். அது இந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியாது. சிபிஎம் தலைவர் பினாராய் விஜயன் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான் எனக்குத் தெரியும். எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை”, என்கிறார்[2].  இப்பொழுது மார்க்சிஸ்ட் ஏம்.பிக்களும் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிகிறது.

DYFI in Kerala protested against the recent ban on beef in Maharashtra by organizing Beef festival at Trivandrum March 2015

DYFI in Kerala protested against the recent ban on beef in Maharashtra by organizing Beef festival at Trivandrum March 2015

மூன்று மாநில முதல்வர்கள் பீப் பிரைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்[3]: மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதற்கு கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்[4].  இம்மாநிலங்களில் தடையில்லை (கேசரிவால் தவிர) என்பதினால் இவர்கள் அவ்வாறு பேசியுள்ளனர் என்று தெரிகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில், போலீசார் முறையான நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்றும் கேரளா மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், கேரளா பவனில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதற்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  “டெல்லியில் உள்ள கேரளா பவனில் நடைபெற்ற சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மக்களின் அடிப்படை உரிமையை கைப்பற்றுவதற்கான விவேகமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற முயற்சி, சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றையே இந்த நடவடிக்கை உணர்த்துகின்றது” என்று டுவிட்டரில் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் இதுதொடர்பாக கூறுகையில், பாரதிய ஜனதாவின் அழுத்தம் காரணமாக கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர். டெல்லியில் மாட்டிறைச்சிக்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கேரளா பவனில் போலீசார் சோதனை செய்த சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். கேரளா பவன் அரசால் கொண்டுவரப்பட்டது, ஓட்டல் கிடையாது என்ற கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கருத்தை நான் முழுமையாக ஏற்கின்றேன். டெல்லி போலீஸ் கேரளா பவனுக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். டெல்லி போலீசும் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா போன்று நடந்துக்கொள்கிறது. டெல்லி அரசு பவனில், கேரள மாநில முதல்-மந்திரி, மோடிக்கும் – பாரதிய ஜனதாவிற்கும் பிடிக்காத பொருளை சாப்பிட்டார் என்றால், போலீசார் அவரை கைது செய்துவிடுவார்களா? என்று கெஜ்ரிவால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் நாளை முதல் டெல்லி கேரளா பவனில் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது[5].

People eating beef at the party in Srinagar -Photo- Deccan Chronicle

People eating beef at the party in Srinagar -Photo- Deccan Chronicle

பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம்[6]:  தினமலர், இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்து வருகின்றன. இந்த தடைக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றன. இருப்பினும், இது பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், அரசியலாக்கப்பட்டும் வருகிறது. மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது. இது பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம் எனவும் விமர்சிக்கப்பட்டது. இந்த தடையை காரணமாக வைத்து சிவசேனாவும், வழக்கம் போல் பா.ஜ.,வை விமர்சித்ததுடன், இறைச்சி தடையை அரசியலாக்கியது. இந்நிலையில், ஜெயின் மதத்தவர்களின் திருவிழா காலத்தை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு ஆட்டிறைச்சி, கோழி விற்பனைக்கும் மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது. குஜராத்தும் தடை விதித்தது. ஏற்கனவே இருக்கும் பிரச்னையை இது மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

Beef eating party politics - Jammu-kashmir

Beef eating party politics – Jammu-kashmir

புலால் உண்பவர்களின் நிலை[7]: காஷ்மீர் அரசும் இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினரும், பிரிவினைவாத இயக்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் செப்., 11. 2015 அன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். சத்தீஸ்கர் அரசும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் துவங்கி விட்டதால் செப்டம்பர் 11 ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் சத்தீஸ்கர் அரசு தெரிவித்தது. இந்த தடை அசைவ பிரியர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த தடையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுவழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையில் இருக்கிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சைவத்தையும் திணித்து வருவதாக அரசியல் கட்சிகள் புதிய தாக்குதலை துவக்கி உள்ளன.

Beef eating party politics- good or bad

Beef eating party politics- good or bad

மிருகவதை, ஜீவகாருண்யம், அஹிம்சை பற்றி பொய்யான விளக்கங்களைக் கொடுப்பது: பீப், பசுமாமிசம் உண்ணுவது பற்றி, அளவுக்கு அதிகமாக, அதன் உரிமை கோருபவர்கள், வெளிப்படையாக செய்து வருகிறார்கள். அதைப்பற்றி திரித்தும் எழுதி வருகிறார்கள்[8]. அன்றைய விவசாய சமூகத்தின் மக்கள், பலியிடுதலை நிராகரித்த பவுத்தத்தையும், கொல்லாமையை வலியுறுத்திய சமணத்தையும் தழுவுவதற்கு, பார்ப்பனர்களின் மாடு தின்னும் வெறியும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, தங்களுடைய சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமானால், மாட்டுக்கறியைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் கவிச்சியை வெறுத்தார்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு, என்று அத்தகைய திரிபுவாதங்கள் கூருகின்றன. பௌத்தம் உயிர்க்கொலையை மறுக்கவில்லை, தடுக்கவில்லை. புத்தரே 81 வயதில் பன்றி கறி சாப்பிட்டதால் தான் உயிழக்க நேர்ந்தது[9]. பௌத்தர்களில் பெரும்பாலோர் மாமிசம் உண்பவர்களே. விவசாயம் இல்லாமல் இருந்திருந்தால், யாருக்கும் உணவு கிடைத்திருக்காது. இந்தியர்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவர்கள் என்ற சரித்திரத்தை மறைத்து இவர்கள்வைத்தகைய கதைகளைக் கட்டி வருகிறார்கள். டி. என். ஜா போன்றவர்களும் சரித்திர உண்மைகளை பாதியாக, அரைகுறையாக வெளியிட்டு குழப்பி வருகிறார்கள். அதனைத்தான் மற்ற சித்தாந்திகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்[10]. அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களின் உயிர்க்கொலைகளைப் பற்றி, அத்தகைய சடங்குகளைப் பற்றி பேசுவது-விவாதிப்பது-எழுதுவது கிடையாது.

© வேதபிரகாஷ்

31-10-2015

[1]  The New Indian Express, Friends sent me photo of Kerala House menu, I put it on Facebook Man who played role in BJP-SNDP tie-up now finds himself at centre of row, Written by Liz Mathew, Delhi,  Updated: October 28, 2015 5:18 am.

[2] http://indianexpress.com/article/cities/delhi/friends-sent-me-photo-of-kerala-house-menu-i-put-it-on-facebook/

[3] http://www.telegraphindia.com/1151028/jsp/frontpage/story_50068.jsp#.VjAtptIrJdg

[4] மாலைமலர், மாட்டிறைச்சி விவகாரம்: டெல்லி கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனைஉம்மன் சாண்டி, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம், பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 4:24 PM IST

[5] தமிழ்.ஒன்.இந்தியா, டெல்லி கேரளா பவனில் நாளை முதல் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும்..., Posted by: Mathi Updated: Tuesday, October 27, 2015, 19:34 [IST]
Read more at: http://tamil.oneindia.com/news/india/kerala-house-drops-buffalo-meat-from-menu-238585.htmlhttp://tamil.oneindia.com/news/india/kerala-house-drops-buffalo-meat-from-menu-238585.html

[6] தினமலர், இறைச்சி அரசியல்‘: பல மாநிலங்களில் தொடரும் தடை, செப்டம்பர்.11, 2015: 12.06. [IST].

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1339869

[8] http://www.vinavu.com/2015/04/15/beef-ban-brahminical-double-speak/

[9] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s
image
, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.
343-354.

[10] http://www.vinavu.com/2012/05/12/myth-of-the-holy-cow/

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

ஒக்ரோபர் 28, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே  சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரை போடும் போலி வேடங்கள்: புளூ கிராஸ் சொசைடி போன்ற நிறுவனங்களும் இவ்விவகாரங்களில் இரட்டைவேடம் போட்டு வருகின்றன. ஏதோ மிருகங்கள் கஷ்டப்படுவதைப் பற்றி, இவர்கள் கஷ்டப்படுவதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள், மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதேபோலத்தான் மற்ற ஜீவகாருண்ய சங்கங்கள், அஹிம்சை போதிக்கும் இயக்கங்கள் முதலியன இத்தகைய ஜீகாருண்யம் மற்றும் இம்சைகளை ஆதரிப்பது போல மௌனம் சாதித்து வருகின்றன. “மாமிசம் இல்லாமல் ஒரு நாள்”, என்று போலித்தனமாக, சாது வாஸ்வானி என்ற இயக்கம் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, வருடத்தில் ஒரு நாள், மிருகங்களைக் கொல்லாமல், மற்ற 364 நாட்களிலும் கொன்று சந்தோஷமாக இருக்கலாம் போலிருக்கிறது. பௌத்தர்கள் அஹிம்சை போதித்தாலும், மாமிசம் உண்டுகொண்டுதான் வாழ்கிறார்கள்.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

பக்ரீத் மிருகவதை கண்டுக்கொள்ளப்படாது: நன்றாக எல்லாவித மாமிசங்களையும் உண்டு வாழும் முகமதியர்களும் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுவதும், வல்லாளார் பெயரில் கூட்டங்களில் கலந்து கொள்வதும் வினோதமாகத்தான் இருந்து வருகின்றன. இவ்வாறுதான் அஹிம்சை மற்றும் மிருகவதை எதிர்ப்பு போன்றவை உள்ளன. இந்த புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரையுள்ள கோஷ்டிகள் மற்ற மிருகவதைகள் நடக்கும் போது கண்டுகொள்ளமாட்டார்கள். பக்ரீத் போது, ஒட்டகம், பசு, ஆடு-மாடு என்று வெளிப்படையாகவே அறுத்து பலியிட்டு, தோலை உரித்து, ரத்தம் ஓடவைத்து பலி கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவ்வப்போது, சில இரக்கமுள்ளவர்கள், நடிகைகள் முதலியோர், ஏதோ பறவைகள் எல்லாம் துன்பப்படுகின்றன, என்று அவற்றை கூண்டுகளிலிருந்து வெளியே சுதந்திரமாக பறக்கவிட்டோம் என்றும் பீழ்த்திக் கொள்வார்கள். ஆனால், இதைப்பற்றி தெரியாதது மாதிரி இருப்பார்கள்.

Beef sale in J and K state - Court ti decide DM

Beef sale in J and K state – Court ti decide DM

பீப் ஈட்டிங் – பசுமாமிசம் உண்ணுதல் பிரச்சினை: சமீப காலமாக மாட்டிறைச்சி விவகாரம் பலவிதங்களில் வெளிப்பட்டு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஊடங்களின் உசுப்பிவிடும் வேலைகள் தான் இதில் அதிகமாக இருக்கின்றன. இந்து சேனா அமைப்பினர் இது தொடர்பாக மாட்டிறைச்சிக்கு தடை பெறுவதில் மும்முரமாக உள்ளனர். இதுவரை, இந்த சேனா எங்கிருந்தது என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. உ. பி., மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக எழுந்த வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  பிறகு, கொல்லப்பட்டவரின் மகன் “லவ்-ஜிஹாதில்” ஈடுபட்டான், அதாவது, ஒரு இந்து பெண்ணை காதல் புரிந்ததால் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் காஷ்மீரில் மாட்டிறைச்சி பார்ட்டி நடத்திய சுயேச்சை எம்.எல்.ஏ. ரசீத் என்பவர் சட்டசபையில் தாக்கப்பட்டார். அவர் டில்லி வந்த போது கறுப்பு மை வீசப்பட்டது[1]. சாப்பிடுகிறேன் என்றால் சாப்பிட்டு விட்டு போகலாம், பிரச்சினையே இல்லை, ஆனால், அதனை, விளம்பரப்படுத்தி, ஏன் பிரச்சினையாக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதெல்லாம், தேசிய அளவில் அதிகமாக பேசப்பட்டன. ஊடகங்கள் இவைத்தான் முக்கியமான செய்திகள் போன்று “மாட்டிறைச்சி அரசியல்” என்று தலைப்பிட்டு தினம்-தினம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா?: மாடுகள் வெட்டப்படுவதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என யோகாகுரு பாபா ராம்தேவ் 27-10-2015 அன்று கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவர் ஏன் சொல்லவேண்டும். மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா என்பதனை யார் தீர்மானிப்பது? எதற்காக மாடுகளை வைத்திருக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதனை யார், எதற்காக தீர்மானிக்க வேண்டும் என்று யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்போது கேரள அரசுக்கு மாட்டிறைச்சி விவகாரம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் ஜந்தர் மந்தரில் கேரள பவன் உள்ளது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது இதனை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒரு குரல் போலீஸ் ஸ்டேஷன் போனில் ஒலித்தது[2]. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்[3]. இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் ஏதும் வராமல் இருக்க மாட்டிறைச்சியை நிறுத்தி கொள்ளுங்கள் என கேட்டு கொண்டனர். இப்புகாரை அடுத்து, அங்கு டெல்லி போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்[4]. ஆனால் அங்கு பரிமாறப்பட்டது எருமை மாட்டு இறைச்சி என்று பின்னர் தெரியவந்தது[5]. டெல்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரளா பவன் உணவகம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

ban-on-beef-in-maharashtra-cartoon

ban-on-beef-in-maharashtra-cartoon

மலையாளத்தில் கிறுக்கியதும், ஆங்கிலத்தில் எழுதியதும்: கேரள தலைமைச் செயலாளர் ஜி.ஜி. தாமஸ் டெல்லியில் கூறும்போது, “கேரளா பவன் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமையின் இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் பீஃப் (மாட்டிறைச்சி) என்று கூறப்பட்டுள்ளது” என்றார். “கேரளா பவனில் உள்ளுரை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். டெல்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். எனினும், நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார் ஜி.ஜி. தாமஸ்[6]. ஆனால், இல்லை, நாங்கள் விற்போம் என்று அறிவித்து விட்டது[7]. என்.டி-டிவி தனது செய்தியில், ஒரு மாதிரியாக சொல்வதிலிருந்தே இதில் விவகாரம் இருக்கிறது என்று தெரிகிறது[8]. “Three men who visited the Kerala House canteen yesterday noticed “beef fry” on a handwritten menu on the whiteboard. It was the only dish scribbled in Malayalam, and they wasted no time in calling the police.” நேற்று மூன்று ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள். மெனுவில் “பீப் பிரை” என்று கையினால் எழுதிவைத்ததைப் பார்த்து, நேரத்தை விரயமாக்காமல் உடனடியாக போலீசுக்கு புகார் கொடுத்தனர். மலையாளத்தில் அது கிறுக்கலாக இருந்தது, என்று நக்கலாக விளக்கும் போதே தெரிகிறது. போர்டில் உள்ளது அழகாகத்தான் உள்ளது, கிறுக்கல் ஒன்றும் இல்லை. மீன் கறி, மீன் வருவல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுபோது, அடுத்ததை ஏன் மலையாளத்தில் இருக்க வேண்டும்? அதுதானே “பசு மாமிச வருவல்” என்று அறியப்பட்டது! ஆக, இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

28-10-2015

[1] http://www.ndtv.com/india-news/j-k-lawmaker-engineer-rashid-attacked-with-black-ink-in-delhi-1233954

[2] தினமலர், கேரளா பவனில் மாட்டிறைச்சி மெனு ; இந்து சேனா எதிர்ப்பால் பதட்டம் ,பதிவு செய்த நாள் அக் 27,2015 12:56; மஅற்றம் செய்ய்த நாள். அக் 27,2015 15:56;

[3] http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7809438.ece

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1373708

[5] http://www.maalaimalar.com/2015/10/27162437/Oomen-chandy-Mamata-Kejriwal-c.html

[6] தி.இந்து, கேரளா பவன்மாட்டிறைச்சிவிவகாரம்: டெல்லி போலீஸ்சோதனையும் 10 முக்கிய தகவல்களும், Published: October 27, 2015 13:21 ISTUpdated: October 27, 2015 19:39 IST.

[7] http://www.deccanherald.com/content/508682/beef-back-kerala-house-menu.html

[8] http://www.ndtv.com/india-news/cops-rush-to-kerala-house-after-call-alleging-beef-on-menu-1236740