காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?
காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ்மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.
சைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2]. அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.
முஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது[3]. இதை எதிர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.
“முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்”: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.
காஷ்மீரப் போர்வையில் இந்து பெண்களின் உரிமைகளைப் பரிக்க எடுத்து வரப்பட்ட மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்! அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான்! இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு!
© வேதபிரகாஷ்
12-06-2016
[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ச ட்டசபையில் மெகபூபா – உமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST
[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.
[3] http://www.dailythanthi.com/News/India/2016/06/06165811/Mehbooba-Omar-in-war-of-words-over-Sainik-Colony-issue.vpf
[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=222249
[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By ஸ்ரீநகர், First Published : 10 May 2016
[6] http://indianexpress.com/article/india/india-news-india/sadhvi-prachi-make-india-muslim-free-2839903/
[7]http://www.dinamani.com/india/2016/05/10/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article3424409.ece
[8] http://scroll.in/latest/809537/its-time-to-rid-india-of-muslims-sadhvi-prachi-says-in-communal-strife-torn-roorkee
[9] Furthermore this controversial speech was made while she was speaking in Uttarakhand’s Roorkee, where at-least 32 people were injured last week as a part of a clash between two communities over forcible evacuation of a scrap dealer’s shop.
http://www.storypick.com/sadhvi-prachi-rant/;
[10] https://www.youtube.com/channel/UC9G9oq-mPIo9_Y6iEvTn72wtps://youtu.be/BOZOCYHpeSs
[11] http://www.news18.com/news/politics/time-to-make-india-free-of-muslims-sadhvi-prachi-1253346.html
[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST
[13]http://www.dinamani.com/india/2016/06/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/article3474687.ece
[14] http://www.indianexpress.com/news/sc-pulls-up-jandk-for-bid-to-justify-ex-gratia-policy/1170131/