மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)!
எம்.கே.நாராயணனை செருப்பால் அடித்து, என். ராமை வசைப்பாடியக் கூட்டங்களில், இடதுசாரிகள் அதிகமாக இருந்தது வேடிக்கையாக இருந்தது. பசு மாமிசம் உண்ணும் விசயத்தில், ராமும், தி ஹிந்துவும் பாரபட்சமாக நடந்து கொண்டனர் என்று அவர்கள் வாய்க்கு வந்தபடி வசைபாடி, பதாகைகள் மூலமும் அத்தகைய கருத்துகளை தாராளமாக வைத்து பிரச்சாரம் செய்து குற்றஞ்சாட்டியுள்ளனர். மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் “தி இந்து நாளிதழ்”, தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[1] என்று அவர்கள் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்தி ஆர்பாட்டம் செய்ததும் விசித்திரமாக இருந்தது.
- “அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
- “பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
- ஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,
- “உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
- “பார்ப்பன வெறியன் இந்து ராம்”,
- “பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,
- “பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”
- “மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.
காம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதனை அறிந்து கொள்ள, கம்யூனிஸ்டுகளின் ஆரம்பம், பிளவு, சிதறல்கள் முதலிய விவரங்கள அறிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது கூட, “இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் அவற்றை ஜனநாயகப் பூர்வமான முறைகளில் வெளிப்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்குப் பதிலாக, வன்முறையில் ஈடுபடுவது சரியான அணுகுமுறையல்ல. எம்.கே.நாராணயன் தாக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது”, என்று வெளியிட்டுள்ளது நோக்கத்தக்கது[2]. இதெல்லாம் வெறும் சம்பிரதாய வெற்றுவார்த்தைகள் தான் என்று அறிந்து கொள்ளலாம். ஏனெனில், அவர்களால், அத்தகைய செருப்படியைத் தடுக்க முடியவில்லை என்பதுத்தான் உண்மை.
என். ராம் கம்யூனிஸ்டு, ஆனால் மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, மாவோயிஸ்டா?: பொதுவாக என். ராம் மார்சிஸ்ட் கம்யூனிஸ ஆதரவாளர், உறுப்பினர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது, குறிப்பிடப்படுகிறார். ஆனால், 2009ல், அவர் சைனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று திபெத்திய விடுதலைப் போராளிகள் குற்றஞ்சாட்டினர்[3]. 2011ல் என். ரவியை பதவி நீக்கம் செய்தபோது, அவரது கடிதத்திலும், அது எடுத்துக் காட்டப்பட்டது[4]. ஜாங் யான் நவம்பர்.27, 2009 அன்று ராமை சந்தித்தது, சைன இணைதளமே படங்களுடன் செய்தியை வெளியிட்டது[5]. சாய்நாத் மற்றும் ப்ரவீன் சுவாமி, என்ற இரு பத்திரிக்கையாளர்கள், அங்கு வேலைசெய்கின்ற சூழ்நிலை சரியில்லை என்றும், போல்போட் அரசு போல யதேச்சதிகாரத்துடன் அடந்து கொள்கின்றனர் என்றும் கூறி, ஜூலை 2014ல் தி இந்துவிலிருந்து ராஜினாமா செய்தனர்[6]. இவ்வாறு சித்தாந்த போராட்டங்கள் நடைபெறுவது, அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம், ஆனால், சாதாரண இந்திய மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பு என்பது புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட விவகாரங்களால், என். ராம் கம்யூனிஸ்டு, ஆனால் மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, மாவோயிஸ்டா என்ற கேள்வி எழுகின்றது அல்லது பொது எதிரியை தாக்க, கம்யூனிஸ்டுகள் ஓன்றாக வேலைசெய்ய வேண்டும் என்ற திட்டமா என்று கவனிக்கவேண்டும்..
தி இந்து மற்றும் என்.ராமை ஏன் இருவகைப்பட்ட எதிர்–சித்தாந்தவாதிகளும் எதிர்க்கின்றனர்?: 1992க்குப் பிறகு[7] சங்கப்பரிவார் ஆதரவாளர்கள், வயதான இந்துக்கள், பாரம்பரிய “தி இந்து” வாசகர்கள் (காலையில் காப்பியுடன் இந்து பேப்பர் படிக்கும் கோஷ்டி), “தி இந்து”வில், தொடர்ந்து இந்து-விரோத செய்திகள், தலையங்கங்கள், கட்டுரைகள், பேட்டிகள், கடிதங்கள், என்று வந்து கொண்டிருப்பதும் மற்ற எல்லாவற்றிலும் அத்தகைய இந்து-விரோதம், இந்து-தூஷணம், இந்து-காழ்ப்பு முதலியவை வெளிப்பட்டதால், பலர் அதற்கு கண்டிப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். பேப்பரை வாங்கி, திருப்பி அனுப்பியும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்; வாங்குவதை நிறுத்தினர்[8]; அலுவலத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தினர். ஆனால், அப்பொழுது ஆசிரியராக இருந்த என். ராம் மசியவில்லை. அதனால், அவரை இந்து-விரோதி என்றும் கூற ஆரம்பித்தனர். அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூட விமர்சித்தனர். ஆனால், இப்பொழுது அதே என். ராம் மேற்குறிப்பிடப்பட்டபடி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். ஆனால், எதிர்ப்பதோ கம்யூனிஸ்டுகள் தாம். சில இந்துத்துவவாதிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்[9], மற்றவர்கள் கூர்மையாக, சிரத்தையுடன் கவனித்து வருகின்றனர். ஏனெனில், அவர்களது, இந்த குழப்பவாதங்களிலும் தாக்கப்படுவது – இந்துமதம், இந்துமத நம்பிக்கையாளர்கள், முதலியன. இருப்பினும் எல்லாமே “செக்யூலரிஸம்” என்ற போர்வையில் நடத்தப்படுகிறது. காம்ரேடுகள், காம்ரேடை குற்றஞ்சாட்டுவது, தூஷிப்பது, படத்தை எரிப்பது முதலியன எந்த சகிப்புத்தன்மையில் வரும் என்று தெரியவில்லை.
சிகப்புப் பரிவாரங்கள் இந்தியாவில் வளர்ந்த விதம்: “கம்யூனிஸம்”, “பொதுவுடமை” என்றால், எல்லோரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், எல்லோருக்கும் ஒரே சட்டம், அதனால் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு, அரசு தமக்கு வேண்டியவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ளும் என்று தான் பொதுவாக மக்கள் ஆரம்ப காலத்தில் புரிந்து கொண்டனர். ஆனால், கம்யூனிஸ்டுகள் சிபிஐ [CPI] மற்றும் சிபிஎம் [CPI (M)] என்று பிளவு பட்டுள்ளதை அறிந்து கொண்டனர்[10]. 1925ல் ஆரம்பித்த அக்கட்சி, இன்று அடையாளம் தெரியாமல் பலவித சித்தாந்தங்களுடன் உலாவி வருகிறது எனலாம்[11]. தங்களது பலவீனத்தை உணர்ந்த அவர்கள் இடதுசாரி ஒற்றுமை பேசு அளவுக்கு அவர்கள் பேரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்[12]. அவர்களது சித்தாந்த, ஊக்குவிக்கும் மற்றும் ஆட்டுவிக்கும் சக்திகள் சைனா மற்றும் ரஷ்ய நாடுகளில் உள்ளன என்பதனையும் அறிந்து கொண்டார்கள். மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், கம்யூனிஸத் தலைவர்கள் முதலாளிகளாக, முதலாதித்துவக் கொள்கைகளுடன் தான் லாபங்களை ஈட்டி வந்தார்கள். தொழிற்சாலைகள், வியாபாரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு சொத்துக்களைக் குவித்து வந்தார்கள்[13]. தமக்கு இல்லாதவற்றையெல்லாம் அவர்கள் / தொண்டர்கள், குறிப்பாக யூனியன் தலைவர்கள் போன்றவர்கள் வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அதாவது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், என்பது பொய் என்று அறிந்து கொண்டார்கள். இதனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மேன்மேலும் உடைய ஆரம்பித்தன. புரட்சி, தீவிரவாதம், ஆயுதப் புரட்சி, தேர்தல் புறக்கணிப்பு என்று அவை கிராமங்களில், நகர்ப்புறங்களில் தங்களது சித்தாந்தங்களைப் பரப்பி, வளர ஆரம்பித்தனர். இருப்பினும் ஒருநிலையில் இவர்கள் சேர்ந்து செயல்பட்டு வந்தார்கள். இவ்வாறுதான் சிகப்பு பரிவாரங்கள் இந்தியாவில் பல பகுதிகளில் ஊன்றி வளர்ந்தார்கள்.
© வேதபிரகாஷ்
06-11-2015
[1] http://www.tamilwin.com/show-RUmtzBTYSVfx2B.html
[2] http://theekkathir.in/2015/11/06/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/
[3] A card-holding member of the Communist Party of India (Marxist) who had been to China and occupied-Tibet at least fifteen times in junkets mostly arranged by the Chinese Embassy in New Delhi, N Ram is also the mastermind behind ‘India-China Association of Journalists’, an embassy-sponsored organisation specialising in arranging pleasure trips for Indian journalists
http://www.friendsoftibet.org/save/
[4] http://archive.tehelka.com/story_main49.asp?filename=Ws210411JOURNALISM.asp
[5] http://in.china-embassy.org/eng/embassy_news/2009/t631131.htm
[6] http://www.firstpost.com/living/p-sainath-praveen-swami-quit-the-hindu-citing-unpleasant-working-conditions-1620013.html
[7] டிசம்பர்.6, 1992ல் சர்ச்சைக்குரிய பாப்ரி கட்டிடம் இடிக்கப்பட்டப் பிறகு, அதிரடி பிரச்சார ரீதியில், இடதுசாரி அற்விஜீவிகளைக் கொண்டு, பிரம்மாண்டமான பிரச்சாரத்தை என். ராம், “தி இந்து” மூலம் மேற்கொண்டார். விமர்சன கடிதங்களைக் கூட போடாமல், எதேச்சதிகாரமாக செயல்பட்டார். Sri K. RAMANI, Ex-President, Vigil, Retd. Accounts Officer, P&T Telecom Circle, Chennai என்பவர் இதனை எடுத்துக் காட்டியுள்ளார். செக்யூலரிஸம் பற்றிய கருத்தரங்கத்தை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய போது, மணி சங்கர் ஐயர், தான் பாகிஸ்தானில் பிறந்த பசு மாமிசம் உண்ணும் இந்து என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்பொழுது, என். ராம் தனது மனைவி-குழந்தையுடன் வந்திருந்தார்.
[8] இந்த 25 ஆண்டுகளில் தி இந்துவின் விற்பனை குறைந்து விட்டது என்பதனை அது நடத்திய சர்வேயிலேயே புரிந்து கொண்டது. டெக்கான் ஹெரால்ட், டைம்ஸ் ஆப் இந்தியா போண்றோர் நுழைந்து விட்டனர். “தமிழ் இந்து” மூலம் சரிகட்டப் பார்க்கிறது.
[9] கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளைத் தாக்குவது பற்றி சமூகவளைத்தளங்களில் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
[10] 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு இந்தி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தி கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட்] என்று இரண்டாகப் பிரிந்தது.
[11] On December 26, 1925, a few ardent young patriots moved by the urge to free the motherland from colonial bondage, inspired by the Great October Socialist Revolution and fired with revolutionary zeal, braved imperialist persecution and came together in the city of Kanpur, to form the Communist Party of India with a view to fight for national independence and a future of socialism.
https://sites.google.com/a/communistparty.in/cpi/brief-history-of-cpi
[12] The split in the CPI has adversely affected the Indian Communist and Left Movement, as also its position in India’s political life. The CPI has been putting forward the need for the unification of the Communist Movement, in particular of the CPI and the CPIM on a principled basis. Differences persist between the two parties.
https://sites.google.com/a/communistparty.in/cpi/brief-history-of-cpi
[13] மார்க்ஸ் குறிப்பிட்ட குடும்பம், சொத்து உதலிய சித்தாந்தங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டன.