சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (1)
![Solar scam details - The Hindu - Graphics](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/07/solar-scam-details-the-hindu-graphics.jpg?w=450)
படித்தவர்கள் நிறைந்த கேரளாவில் சூரிய ஒளி ஊழல்: சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று அரசாங்கம் கோடிகளைக் கொட்டி திட்டங்களை வகுத்துள்ளது. இதில் ஊக்கத்தொகை, வரிவிலக்கு, சுங்கவரி விலக்குபோன்ற சலுகைகள் முதலியனவும் கொடுக்கப்படுகிறது. இத்திட்டங்களைப் பற்றி சந்தேகங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன[1]. ஏனெனில், முதலில் அதிகமாக முதலீடு செய்தால், குறைவாகவே பலன் கிடைக்கும். அதாவது ஒரு வாட் மின்சாரத்தின் விலை மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், நெடுங்கால வைப்பு நிதிபோல பணத்தைப் போட்டு வைத்தால் பலன் கிடைக்கும் என்று, பணம் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், கேரளாவில் இதை வைத்துக் கொண்டு கோடிகளில் ஊழல் செய்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
![Chandys two aides arrested](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/07/chandys-two-aides-arrested.jpg?w=450&h=291)
அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் ஊழல் ஈடுப்பட்டுள்ளது: கேரளாவின் அரசியல்வாதிகள் மத்திய அதிகமான தாக்கம் கொண்டிருப்பவர்கள். சோனியா சர்வ வல்லமை படைத்த தலைவராக இருப்பதனால், கிருத்துவர்கள் பெரிய பகுதிகளில் இருக்கின்றனர். இதனால், சாதாரணமான விஷயத்திற்கு கூட தமது அதிகாரத்தை, அரசியல் நெருக்கத்தைக் காட்டிக் கொண்டு வருவர். இந்நிலையில் பிஜு ராதாகிருஷ்ணன் என்பவர், சரிதா நாயர் என்ற பெண்மணியுடன் சேர்ந்து கொண்டு சூரிய ஒளி பெனல் திட்டம் மூலமாக கோடிகளை ஏமாற்றியுள்ளதாக விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. போதாகுறைக்கு கவர்ச்சிகரமான நடிகைகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அந்நடிகைகளுடன் மத்திய அமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்களின் தொடர்புகள்ளும் உள்ளன.
![Saritha-S-Nair - IE photo- Solar scam](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/07/saritha-s-nair-ie-photo-solar-scam.jpg?w=450&h=279)
சரிதா நாயரின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள்: பிஜு ராதாகிருஷ்ணன் டீம் சோலார் ரெநியூபல் எனர்ஜி சிஸ்டம்ஸ் [Team Solar Renewable Energy Systems] என்ற கம்பெனியை தடபுடலாக ஆரம்பித்தார்[2]. அக்கம்பெனியின் கிளைகளும் மந்திரிகள், நடிகைகள் என்று வைத்து ஆரம்பிக்க வைக்கப் பட்டன. ஊடகங்களில் பிரமாதமாக விளம்பரமும் செய்யப்பட்டது. அரசில் தொடர்புள்ள சரிதா நாயர், லட்சுமி நாயர், நந்தினி நாயர் என்று ஆறு பெயர்களை உபயோகப் படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக மும்தாஜ் என்ற பெயரை உபயோகப் படுத்தி, டீம் சோலார் கருவிகளில் முதலீடு செய்யுமாறு கேட்டு வியாபாரப் பேச்சுகளை நடத்தியுள்ளார். வெற்றிகரமாக பணத்தையும் பெற்றுள்ளார். சரிதா அமைச்சர்களை “மாமா” என்றுதான் அழைப்பாராம். அந்த அளவிற்கு நெருக்கம் இருந்தது[3]. யாரிடம் பணம் உள்ளது என்று அறிந்து அவர்களிடம் சென்று சோலார் பெனல் திட்டதில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்வாராம். சிலரிடம் தனது யுக்திகளைப் பயன்படுத்தி மயக்கவும் செய்வாராம். அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்பொழுது ரகசிய கேமரா மூலம் அக்காட்சிகளை படமெடுத்து, அவற்றைக் காட்டி, அவர்களை மிரட்டியும் பணமுதலீடு செய்ய வைத்திருக்கிறார். நிறையபேர் புகார் கொடுக்காமல் இருக்கிறார்களாம். காரணம் அவர்கள் தங்களுடைய கருப்புப் பணத்தை இவ்வாறு முதலீடு செய்து வெள்ளையாக்கலாம் என்று நினைத்தனர்[4]. ஆனால், இப்பொழுது பிரச்சினை பெரிதானவுடன் மைனமாகி விட்டனர். பாதிக்கப்பட்ட சிலரே புகார் அளித்துள்ளனர்[5].
![Salu with Biju - Solar scam-before arrest](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/07/salu-with-biju-solar-scam-before-arrest.jpg?w=450&h=304)
ஷாலு மேனன் – கவர்ச்சிகர வியாபாரம் பெருகியது: ஷாலு மேனன் ஒரு நடிகை, நாட்டியம் ஆடுபவர், கோரியோகிராபர் ஆவர். இவர் பல அமைச்சர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். இதனால் சென்சார் போர்டின் உறுப்பினர் பதவியினையும் பெற்றார். ஜெய கேரளா நடனப் பள்ளி[6] என்ற நாட்டியப்பள்ளியை பதனம்திட்ட மாவட்டம் முழுவதும் பல கிளைகள் வைத்து நடத்தி வந்தார். அங்கு நடனம், பாட்டு எல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டது[7]. டீம் சோலார் கம்பெனியின் எக்சிகியூடிவ் டைரக்டர் என்று பிஜுவால் அறிமுகப்படுத்தி வைக்கப் பட்டார். சரிதா நாயருடன் பிஜு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும், ஷாலுவுடன் இருந்தது மற்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் செய்திகள் வந்துள்ளன[8].
![Solar scam - more names of actresses](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/07/solar-scam-more-names-of-actresses.jpg?w=450&h=227)
உத்திரா உன்னி டீம் சோலாரின் பிராண்ட் அம்பாசிடரா?[9]: உத்திரா உன்னி என்ற இன்னொரு நடிகையின் பெயரும் இவ்விவகாரத்தில் அடிபடுகிறது. சென்னை-தில்லி சென்றுவர விமான டிக்கெட்டுகள் பிஜு-சரிதாவினரால் ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் வாங்கப் பட்டுள்ளன. அவை உத்திரா உன்னி செல்வதற்காக வாங்கப் பட்டுள்ளன. ஆனால், கொடுத்த செக் பவுன்ஸ் ஆனதால், அந்த டிராவல் ஏஜென்சி உத்திரா உன்னி மேல் புகார் கொடுத்துள்ளது. மேலும் பேஸ்புக்கில் உத்திரா உன்னி, டீம் சோலார் கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்திரா உன்னி தான் பிராண்ட் அம்பாசிடர் இல்லை, ஆனால், அக்கம்பெனியின் விளம்பரத்தில் நடித்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். முக்தா என்ற இன்னொரு நடிகையும் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் கொடுத்தார்[10]. இதில் வேடிக்கையென்னவென்றால், ஷாலு மேனனே தன்னை பிஜு ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளது தான்!
![Saritha has contacts with ministers and Chennitala](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/07/saritha-has-contacts-with-ministers-and-chennitala.jpg?w=450&h=304)
அரசியல் தொடர்புகள் விரியும் மர்மங்கள்: டீம் சோலார் ஊழல் வழக்கில் ரஷீக் அலி, மனாகாட், திருவனந்தபுரம் என்ற நபர் கொடுத்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது[11]. இதனையடுத்து ஷாலு மேனன் என்ற அந்த நர்த்தகி மற்றும் நடிகை வெள்ளிக்கிழமை 05-07-2013 கோட்டயத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டிலிருந்து தம்பனூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்[12]. திருவனந்தபுரம் மேஜிஸ்ட்ரேட் ஷாலு மேனனுக்கு ஜாமின் கொடுத்தால் தனக்குள்ள அரசியல் சக்தியினால் சாட்சிகளை களைத்துவிடுவார் என்று அவரது ஜாமினும் நிராகரிக்கப்பட்டது[13]. இடதுசாரிகள் உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த நடிகைக்கும் தொடர்பு உள்ளது என்று கூறிவருகிறது. திரிசூரில் ஒரு பெரிய வீடு கட்டி, கிருகபிரவேஷம் செய்தபோது, அமைச்சர் வந்திருக்கிறார்[14], அதனால், அவர் இந்நடிகையை இவ்வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவி வருகிறார் என்று குற்றஞ்சாட்டி வருகின்றன[15]. ஷாலு மேனன் மற்றும் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் டீம் சோலார் கூட்டத்தில் பங்கு கொண்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன[16]. கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி, எர்ணாகுளத்தில் உள்ள பிஜுவின் வீடு, டீம் சோலார் அலுவலகங்களில் (திருபுனித்துரா, ஆலப்புழா, திரிசூர்) சோதனை நடத்தப் பட்டது. பல ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன[17].
![The office of Team Solar on Chittoor Road in Kochi raided on Sunday 16-06-2013](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/07/the-office-of-team-solar-on-chittoor-road-in-kochi-raided-on-sunday-16-06-2013.jpg?w=450&h=299)
நடிகைகளுடான தொடர்புகள், சேர்ந்து வாழ்தல், கொலை முதலியன: பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயருடன் சேர்ந்து வாழ்வதை அவரது மனைவி ரேஷ்மி எதிர்த்ததால், 2006ல் கொலை செய்தான். சென்ற மாதம் ஜூன் 17 அன்று அதற்காக கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டான்[18]. இப்பொழுது இந்த சோலார் ஊழலில் பிஜு, சரிதா மற்றும் கே.பி. கணேஷ்குமார் என்ற நடிகர்களை இழுத்துள்ளான். கைது செய்யப்பட்டபோது, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சொல்லிக் கொண்டான்[19]. ஏற்கெனவே கணேஷ்குமாரின் மனைவி மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சரிதா நாயரே கணேஷ்குமாரின் முந்தைய மனைவி அல்லது சேர்ந்து வாழ்ந்திருக்கிறார் என்று கேரள ஊடகங்கள் கூறுகின்றன[20]. கே.பி. கணேஷ்குமார் முந்தைய மந்திரியும் கூட. பெண்களைக் கொடுமைப் படுத்தினார் என்பதனால் பதவி விலக நேர்ந்தது. கே. சி. வேணுகோபால், மத்திய அமைச்சரின் தொடர்பும் இதில் காணப்படுகிறது[21]. அவர் தான் என்றுமே உதவியதில்லை என்று மறுத்தாலும், நடுராத்திரி வேளைகளில் சரிதாவுக்கு போன் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[22]. முன்பு கே. சி. ஜோசப் சரிதாவின் கோட்டயம் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார்[23]. இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் தொடர்பு கொண்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளன. சரிதா குறைந்த பட்சம் ஆறு கேரள மந்திரிகளுடன்[24] போனில் பேசியுள்ளதற்கு[25] ஆதாரங்கள் உள்ளன[26].
![Saritha has contacts with ministers and Chennitala2](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/07/saritha-has-contacts-with-ministers-and-chennitala2.jpg?w=450&h=384)
சரிதா பற்றி முதலமைச்சரிடம் பேச வேண்டிய அளவிற்கு என்ன விஷயம் இருக்கிறது?: இன்றைக்கு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் என்பது சிலரின் வழக்கத்தில் வந்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே “மனைவி-துணைவி” என்ற சித்தாந்தங்கள் உள்ளன. இவற்றை தமிழகத்தில் நாத்திகம் என்று சொல்லிக் கொண்டு நடிகர்-முதலமைச்சர் என்று பின்பற்றப் பட்டு வருகிறது. இதெல்லாம் புரட்சி என்று சொல்லிக் கொண்டாலும், சமூகசீரழிவிற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இத்தகைய கூடா தாம்பத்திய உறவுமுறைகள் கேரளாவிலும் உள்ளது போலிருக்கிறது. இங்கு பிஜு, கே.பி. கணேஷ்குமார், சரிதாவுடன் கொண்டுள்ள உறவு பற்றி சாண்டியுடன் ஒரு மணி நேரம் பேசியதாக கூறியுள்ளான்[27]. தான் குற்மற்றவன் என்றும் சரிதாவின் கணேஷ்குமாருடைய தொடர்புகளால் தான் இப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்று பிஜு கூறியுள்ளான்[28]. சாண்டி இதைப் பற்றி ஒன்றும் கூறாவிட்டாலும், காங்கிரஸ் எம்பி எம்.ஐ.ஷானவாஸ் பிஜுவை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததை ஒப்புக் கொள்கிறார்[29]. இதனால் உம்மன் சாண்டி, சரிதா-கணேஷ்குமார் இடையே மத்தியஸ்தம் செய்ய முயன்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது[30]. என்ன இருந்தாலும், தன்னுடன் வாழும் பெண்னைப் பற்றி உம்மன் சாண்டியுடன் பேச வேண்டிய அவசியம் என்ன? மேலும் தனது மனைவியை 2006லேயே கொலை செய்துள்ளான் என்ற பிஜுவுடன் என்ன பேச்சு வேண்டியுள்ளது?
வேதபிரகாஷ்
© 13-07-2013
[3] Allegedly Saritha’s clout in power circles was such that she even used to address one of the LDF ministers as ‘Uncle’
[4] ஶ்ரீஜன் என்ற டைம்ஸ்-நௌ நிருபர் இவ்விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளார். அந்த டிவி செனலும் இதைப் பற்றி அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. “Sleaze, scam and scandal” என்ற நிகழ்ச்சி திரும்ப—திரும்பக் காட்டப்பட்டுகிறது.
[5] CNN-IBN, NDTV, Headlines Today, News-X முதலிய செனல்களில் இதைப் பற்றி அதிகமாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவையும் இங்கு எட்டுத்தாளப்பட்டுள்ளன.
[14] ccording to the latest reports, Home Minister Thiruvanchoor Radhakrishnan is said to have visited the residence of serial actress Shalu Menon. But the visit is said to have been made on an occasion other than the house warming. According to Thiruvanchoor Radhakrishnan, he paid a visit to Shalu Menon’s house, “not on the occasion of her housewarming, but on route to a visit to Amritanandamayi Mutt.” “Party activists who were in the area called me over. Also I know Shalu Menon’s grandfather Tripunithura Aravindaksha Menon. Otherwise there is no way that I know her,” said Thiruvanchoor Radhakrishnan. “When you are a minister, there are occasions like housewarming and marriages, which cannot be avoided. We cannot find out if those persons are involved in any case, before we set out for these functions,” he said. “All I did was spend around two minutes in Shalu’s home. Otherwise there is no other connection. I am not related to her by blood or any other way. In fact there have been other political leaders from other parties too, that day,” he said.
http://www.janamtv.com/news/Thiruvanchoor_Radhakrishnan_has_visited_Shalu_Meno_116274.php
[24] Phone call list of solar cheating scam accused Sarita S Nair made available is sure to give sleepless nights to many ministers. The phone list which first mentioned calls made to the chief minister and the home minister has now extended to some more ministers and KPCC president Ramesh Chennithala. On Thursday, when the phone call list was made available to the media, Ramesh Chennithala and union minister K C Venugopal, state ministers Aryadan Muhammed, K C Joseph, Adoor Prakash, M P Anilkumar, Shibu Baby John and MLAs P C Vishnunath, Benny Behan, Hiby Edin, former minister Moncy Joseph, congress leaders Shanimol Usman, T Sidhique among others figured in the list. The calls were made ranging from a few minutes to a longer duration, according to available documents.
http://www.mathrubhumi.com/english/story.php?id=137684
[28] The prime accused in the solar cheating case Biju Radhakrishnan had revealed to a private TV channel on Saturday that he is innocent and that his wife Sarita S Nair had illegal links with former minister K B Ganesh Kumar and that was the reason for all the present issues. Biju revealed that after the inauguration of his office in Coimbatore, Ganesh and Sarita had stayed together in a hotel. It was the managers who had revealed to him about their relationship. Records revealing the teleconversations between Sarita and Ganesh would be given to P C George later, Biju said.
http://www.mathrubhumi.com/english/story.php?id=137050