Archive for the ‘எல்லீஸர் அறக்கட்டளை’ Category

திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய தமிழக ஆளுனர் – திராவிடத்துவ மற்றும் இந்துத்துவவாதிகள் எதிர்த்த மற்றும் ஆதரித்த நிலைகள் – பாதிக்கப் பட்டது இந்துக்கள் தாம்! (2)

மே 26, 2024

திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய தமிழக ஆளுனர்திராவிடத்துவ மற்றும் இந்துத்துவவாதிகள் எதிர்த்த மற்றும் ஆதரித்த நிலைகள்பாதிக்கப் பட்டது இந்துக்கள் தாம்! (2)

முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனிய வர்ணாசிரமத்திற்கு எதிரான கருத்துடைய திருக்குறள்: முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனிய வர்ணாசிரமத்திற்கு எதிரான கருத்துடைய திருக்குறளை ஆரிய வயப்படுத்திட ஆளுநர் இரவி தொடர்ந்து செய்து வரும் சூழ்ச்சிச் செயல்பாடுகளை மானமுள்ள தமிழர்கள் அனைவரும் கடுமையாகவே கண்டித்து வந்திருக்கின்றனர். ஆனாலும், ஆர் எஸ் எஸ் இன் வேலை திட்டத்தை ஆளுநர் இரவி விடுவதாக இல்லை. அவருடைய தனிப்பட்ட கருத்தாக கருத்தரங்கில் பேசிக் கொள்வதையோ, நூல்கள் எழுதி வெளியிடுவதையோ நாம் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டு அரசின் இலச்சினைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு அரசின் அறிவிப்புப் போல் ஆளுநராக இருந்து கொண்டு கருத்தறிவிப்பதும், திருவள்ளுவரைப் பட்டை போட்டுக் காவி உடை அணிவித்து விழா எடுப்பதாக அறிவிப்பதும் கடுமையான கண்டனத்திற்குரியது. அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பின்மைக்கும் இது எதிரானது[1]. தமிழ்நாடு அரசு இதைக் கண்டித்தாக வேண்டும் எனக் கீழ்க்காணும் அறிஞர் பெருமக்கள், இயக்கப்பொறுப்பாளர்கள், தலைவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து வலியுறுத்துகிறோம்”என்று கூறப்பட்டுள்ளது[2].

திராவிடக் கழகம் முதல் மற்ற அமைப்புகள்: ஆளுநர் ரவியைக் கண்டித்து விரைவில் அனைத்துக் கட்சி கண்டன போராட்டம் நடைபெறும்  என்று திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்[3]. அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து மாபெரும் கண்டனப் போராட்டத்தை நடத்திட கழகம் முயற்சிகளை மேற்கொள்ளும்[4]. முன்னதாக ஜனவரி மாதம் 2024 திருவள்ளூவர் விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, “ஆன்மிக பூமியான தமிழ்நாட்டில் பிறந்த திருவள்ளூவர், சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான ஞானி என்றார். இந்தக் கூற்றுக்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது[5]. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்ட அறிக்கையில் சமத்துவ மண்ணான தமிழ்நாட்டில் சமத்துவ சமயக் கோட்பாடுகளைத் தொடர்ந்து திருடி ஸ்டிக்கர் ஒட்டும் வேலை நடந்து வருவதாக கூறியுள்ளார்[6]. அய்யா வைகுண்டர், வள்ளலார் தொடங்கி இன்று திருவள்ளுவர் வரையில் இது தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இருஎதிர்சித்தாந்திகள் மோதிக்கொள்ளும் பொழுது, பாதிக்கப் படுவது இந்து மதமே: ஆகவே இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்து விரோத திராவிடத்துவவாதிகளும், இந்துத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் ஏதோ சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது போல தோன்றினாலும், இறுதியில் பாதிக்கப்படுவது, தாக்கப்படுவது –  இந்து மத சின்னங்கள், இந்து மத சம்பிரதாயங்கள், இந்து மத நம்பிக்கைகள், ஏன் இந்துக்கள் தான் என்பது வெட்டவெளிச்சமாகிறது. இங்குதான் உண்மையான பிரச்சனை இருக்கிறது. இவர் மாறுபட்ட எதிர் துருவங்களாக இருக்கும் அரசியல் கட்சிகள், தங்களது அதிகாரம், ஆட்சி போன்றவற்றிற்காக ஒன்றுக்கு ஒன்று சண்டை போட்டுக் கொள்ளலாம், ஜனநாயக ரிதியிலும் மோதலாம், மேடைகளில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இதில் இந்து மதம் என் தாக்கப்பட வேண்டும், இதற்கு இந்துத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏன் துணையாக போக வேண்டும் என்பது தான் முக்கியமான கேள்வி.

நெறியற்றவர்கள் ஏன் ஒன்றாக செயல்பட வேண்டும்?: இவ்வாறு எதிர் சித்தாந்த வாதிகள் – இந்து மதத்தை எதிர்க்கும் மற்றும் ஆதரிக்கும் அரசியல்வாதிகள், கட்சிகள் ஏதோ தங்களை தாமே விமர்சித்துக் கொள்கின்றன, அதனால் இவ்வாறு திருவள்ளுவரை, திருக்குறளை வைத்து அரசியல் செய்வது என்றெல்லாம் செய்யப்படுகிறது என்று நினைத்து இருந்துவிட முடியாது. ஏனெனில் இந்த இரு கூட்டங்களுக்கும் உண்மையாகவே திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீது எந்த காதலும், அன்பும், இலக்கிய நேசமும், எதுவும் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். இதே கட்சிகள், இதே நபர்கள், இதை ஆராய்ச்சியாளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு, 20 ஆண்டுகளுக்கு முன்பு, 30 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது கவனிக்கலாம். நிச்சயமாக அவர்கள் அந்த இதில் எந்த நாட்டுமும் காட்டவில்லை. ஆக, திடீரென்று இப்பொழுது ஒரு கட்சி ஆதரவினால் ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ஒரே நோக்கத்துடன், திடீரென்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, இவ்வாறு நடிக்க துடிக்கிறார்கள், நடிக்கிறார்கள், துடித்து ஊழல்கிறார்கள் எனும்போது, அதில் தான் நியாயமோ, தர்மமோ, எந்த நெறியும் இல்லை.

வழக்கம் போல, மனதில் எழுந்த விசயங்கள்:

  1. இந்த வருடம் எல்லீஸர் விருதை இந்துத்துவ வாதிகள் யாருக்குக் கொடுத்தனர்? திருவள்ளுவர் விழா கொண்டாட்டம் 2024!
  2. 2017ம் ஆண்டிற்குப் பிறகு கொண்டாடும் இந்த இந்துத்துவ வாதிகள் கவர்னரை வைத்து கும்பிட வைத்த மர்மம் என்னவோ?
  3. திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் பிறகு, யாரும் தகுதியுடன் இல்லையா?
  4. எல்லீஸர் பிறகு, எல்-சடையான் போன்ற விருதுகளை உருவாக்கி, திருக்குறளைக் கரைத்துக் குடிக்கும் இந்துத்துவ வாதிகளுக்குக் கொடுக்கலாமே?
  5. திருக்குறள், திருவள்ளுவர் இருக்கும், ஆனால், அவற்றை வைத்து செய்யும் வியாபாரம், அரசியல் முதலியவை தற்காலிகமானவை, .. மறைந்து விடும்.
  6. இந்துவிரோதிகளும், இந்துத்துவவாதிகளும் அவற்றையே செய்கின்றனர் எனும்பொழுது, அதில் அரசியல்-சித்தாந்தாம் தான் வெளிப்படுகின்றன!
  7. ஒரு கட்சியை / தலைவனை ஆதரித்தால் தான் இந்து, அவ்வாறே நாங்கள் தான் சான்றிதழ் கொடுப்போம் என்பது இந்துத்துவமா?
  8. இந்துமத விசயங்கள் அரசியல் வைத்து தீர்மானிக்கப் படுகின்றன என்றால், அதற்கு கோவில்கள், சம்ஸ்காரங்கள் போன்றவை தேவையில்லை!
  9. கட்சி, சின்னம், தலைவனுக்கு ஜே என்று கோஷம் போட்டு, கும்பல் கூட்டி, அரசியல் நடத்தலாம், ஆனால், இந்து மதம் காக்கப் படாது!
  10. அதனால் தான், இந்துமதம் சனாதனமாக நிலைத்துத் தொடர்கிறது. பலவித சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு தழைக்கிறது.

© வேதபிரகாஷ்

26-05-2024


[1] கலைஞர் செய்திகள், “திருவள்ளுவரை ஆரியக் காவிக்குள் அடக்க வேண்டும் என நினைக்கும் ஆளுநர்” : உலகத் தமிழர் கழகம் கண்டனம்!, Praveen, Updated on : 25 May 2024, 06:29 PM.

[2] https://www.kalaignarseithigal.com/politics/2024/05/25/tamil-movement-condemns-the-governor-who-thinks-that-tiruvalluvar-should-be-buried-in-saffron

[3]  விடுதலை, மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட  திருவள்ளுவர் படத்துக்கு மாறாக காவி சாயம் பூசுவதா?, Published May 24, 2024; Last updated: May 24, 2024 2:48 pm.

[4] https://viduthalai.in/62951/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/

[5] சமயம், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் ஆளுநர் ஆர்.என்.ரவி? அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு!, Authored By மரிய தங்கராஜ் | Samayam Tamil24 May 2024, 3:09 pm

[6] https://tamil.samayam.com/latest-news/state-news/archakar-trained-students-association-protested-against-the-release-of-a-photograph-of-thiruvalluvar-wearing-saffron-by-the-governor-house/articleshow/110391967.cms

திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய தமிழக ஆளுனர் – திராவிடத்துவ மற்றும் இந்துத்துவவாதிகள் எதிர்த்த மற்றும் ஆதரித்த நிலைகள் (1)

மே 26, 2024

திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய தமிழக ஆளுனர்திராவிடத்துவ மற்றும் இந்துத்துவவாதிகள் எதிர்த்த மற்றும் ஆதரித்த நிலைகள் (1)

திருவள்ளுவர் திருநாளை கொண்டாடிய தமிழக ஆளுனர்: திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு குறிப்பிட்டவர்களே அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது. யார் அழைக்கப் படக் கூடாது- வரக்கூடாது என்று தீர்மானிக்கப் பட்டது தெரிகிறது. அரசியல் அப்படித்தான் வேலை செய்யும், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் பிறந்ததாக கருதப்படுகிறது. அந்நாள் அனுஷ்டிக்க படும் நிலையில், அவரின் திருநாளை கொண்டாடுவதாக ஆளுநர் மாளிகை தரப்பு தெரிவித்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை போன்றவை ஏன் அத்தகைய உற்சாகத்தை, வேகத்தை 20024ல் காட்டவில்லை என்று அவற்றின் முக்கியஸ்தர்களைத் தான் கேட்டறிய வேண்டும். கவர்னர் மாளிகை செய்தி வெளியீடு எண்.25 தேதி 24-05-2024 இதை விளக்குகிறது. கவர்னரே இந்த நிகழ்ச்சியை நடத்தியதால், தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை வைத்துக் கொண்டு, நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது.

திட்டத்துடன் நடத்தப் பட்ட நிகழ்ச்சி: கவர்னர் செய்தி வெளியீடு மூலம் குறிப்பிடப்பட்டுள்ள, அழைக்கப்பட்ட விருந்தாளிகளின் பெயர்களைக் கவனிக்கும் பொழுது அவற்றில் பெரும்பாலோர் அறியப்படாதவர்களாகவே இருக்கின்றனர். முன்னர் இத்தகைய விவகாரங்களில் சமந்தப் பட்டுள்ளதாகவும் தெரியவில்லை. குறிப்பிட்ட நபர்கள் திருவள்ளுவர் திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை போன்ற முன்னால் குறிப்பிட்ட சர்ச்சைக்குள்ள அமைப்புகள் என்று தெரிகிறது. எனவே, குறிப்பிட்ட இந்துத்துவாதிகள் சேர்ந்து உட்கார்ந்து தீர்மானமாக முடிவு செய்த நிகழ்ச்சி தான் இது என்பது நன்றாக தெரிகிறது. அதனால் தான் முன்னமே குறிப்பிட்டபடி, நிகழ்ச்சியில் யார் பங்கு கொள்ள வேண்டும் என்பதை விட, யார் பஙகு கொள்ளக்கூடாது, அழைக்கப்படக்கூடாது, ஏன் அவர்களுக்கு தெரியவும் கூடாது என்ற திட்டத்தில் இருந்து செயல்பட்டு இருக்கிறார்கள். இப்போக்கு, முந்தைய திருவள்ளுவர் சிலை மற்றும் அருண் விஜய் விவகாரங்களிலும் நன்றாகவே கவனிக்கலாம்.

விழாவில் இந்த நிலையில், மின்னணு திருப்பு புத்தகத்தை வெளியிட்டது: விழாவில் டி.கே. ஹரி மற்றும் டி.கே. ஹேமா ஹரி ஆகியோர் எழுதிய “திருவள்ளுவர் – தமிழ்நாட்டின் புரவலர் துறவி” என்ற மின்னணு திருப்பு புத்தகத்தை கவர்னர் ஆர்.என் ரவி வெளியிட்டார்.  அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் இங்கு கவர்னராக வீற்றிருப்பதைவிட திருவள்ளுவரின் சீடனாக, மாணவனாக அமர்ந்திருப்பதிலேயே பேருவகை கொள்கிறேன். எனது பள்ளி பருவத்தில் திருவள்ளுவர் பற்றி முதன்முதலில் அறிந்தேன். 1964-ம் ஆண்டு ஒரு சரஸ்வதி பூஜை அன்று பள்ளி நூலகத்தில் இந்தி புத்தகம் ஒன்றில்,பாரதத்தின் தென்கோடியில் ஒரு மகான் இருந்தார். அவர் திருவள்ளுவர் என்று அதில் போடப்பட்டு அவர் எழுதிய குறளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் கவர்னராக பணியாற்றுவதால், திருக்குறளை ஆழமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது[1]. திருக்குறளில் மகத்தான, ஆழமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன[2].

ஆராய்ச்சியில் இந்துத்துவவாதிகளும், திராவிடத்துவவாதிகளும்: அவ்விசயத்தில் கருணாநிதி அரசியல் செய்தலால், மற்ற குழுக்களும் இதில் இறங்கின. திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை என்றெல்லாம் திடீரென்று உருவாக்கி கலாட்டா செய்தனர். ஆனால், தமது போலித்தனத்தைத் தான் வெளிப்படுத்திக் கொண்டனர். “சேம் சைடில் கோல் போடும் வேலையை” செய்தது, பலர் கண்டுகொண்டனர். ஆனால், பொதுவாக, “இந்துத்துவவாதிகள்” என்று கூறிக்கொள்பவர், இவ்விசயத்தில் திடீரென்று தோன்றி, தமது அரசியல், ஆதிக்கம், பலம் முதலிய காரணிகளால், தமது சக்தியைக் காண்பித்து, பிறகு மறைந்து விடுவர். இதுதான் கடந்த பத்தாண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. அரசியல், ஆதிக்கம், பலம் முதலியவை இல்லையென்றால் இருக்கும் இடம் கூட தெரியாமல் இருப்பர். இப்பொழுது, கவர்னர் இல்லாமல், இவர்களால், இவ்வேலைகளை செய்ய முடியாது எனும் பொழுது, ஆராய்ச்சி எனும் பொழுது, முறையாக செய்திருக்க வேண்டும். இப்பொழுதும் இந்துவிரோதிகள் ஒன்றாக சேர்ந்து எதிர்க்கிறார்கள். ஆனால், இந்த்த்துவவாதிகள் இந்துக்களையே ஒதுக்குகிறார்கள்.

மூலங்களை ஏற்று தெரிவிக்க தைரியம் இல்லாத போலி இந்துத்துவ ஆராய்ச்சியாளர்கள்: பூணூல் விசயத்தில் ஆய்வுக்கருத்து என்றும் செய்தி வெளியிடப் பட்டுள்ளது[3]. இதில் எல்லோருமே அரைவேக்காட்டுத் தனமாக விளக்கம் கொடுத்திருப்பது தெரிகிறது[4]. திடீரென்று முளைத்துள்ள இந்த ஆராய்ச்சியாளர்கள் முறையோடு, ஆராய்ச்சி செய்வதாகத் தெரியவில்லை. பத்து புத்தகங்களைப் படித்து, ஒரு கருத்தை உருவாக்கி, அதுதான் தீர்மானிக்கப் பட்ட முடிவு என்று பிடிவாதம் பிடிக்கும் போக்குத் தான் தெரிகிறது. இவர்கள் தங்களைத் தாங்களே ஆராய்ச்சியாளர், முனைவர், சரித்திராசிரியர் …என்றெல்லாம் பிரகடனப் படுத்திக் கொள்வதையும் கவனிக்கலாம். ஏற்கெனவே, பி.எஸ். சுப்ரமணி சாஸ்திரி, ராகவ ஐயங்கார் போன்றோர்களின் ஆராய்ச்சிகளை மறைத்து, இப்பொழுதுள்ளவர்கள் ஏதோ தாங்களே கண்டுபிடித்தது போலக் காட்டிக் கொள்வதால், ஒரு நிலையில் உரிய விளக்கத்தை அவர்களால் கொடுக்கமுடியாமல் முழிப்பது தெரிகிறது.

தமிழக ஊடகங்களும் நடுநிலையற்ற தன்மையில் தான் உழலுகின்றன: திருவள்ளுவர் திருநாள் விழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[5]. அதாவது, ஊடகங்கள் அவ்வாறு செய்ய தீர்மானத்துடன் இருக்கின்றன. அதன்படியே, அபாரமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் திருவள்ளுவருக்கு தொடரும் காவி உடையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. இதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[7]. பொதுவாக இவர்கள் எல்லோருமே திக, திமுக, மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தான் என்பதை கவனிக்கலாம். ஆளுநரின் செயலர் பெயரில் அந்த விழாவும் அழைப்பும் அமைந்திருக்கிறது[8].

கவர்னரை எதிர்க்கும் திட்டம் தொடர்கிறது: கேரளா, மேற்கு வங்காளம் போன்று, எப்பொழுதும் கவர்னருடன் தகராறு செய்வது என்று ஆளும் திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனால், அத்தகைய பிரச்சாரத்தை இவ்விசயத்திலும் ஊடகங்கள் மேற்கொள்வதை கவனிக்கலாம். ஒவ்வொரு முறையும், ஆளுனர் செயல்பாட்டை வைத்து, இந்த இந்துவிரோதிகள் இவ்வாறு சரித்திர ஆதாரம் இல்லாத ஆரிய-திராவிட இனவாதம், பார்ப்பன காழ்ப்பு-துவேசம், என்றெல்லாம் தாராளமாக பேசி விவரித்து, இந்துக்களைத் தாக்குகின்றன என்பதனை கவனிக்கலாம். இதோ அவை சொல்வது [வீரமணி அறிக்கை] –   ஆர்.என். இரவி, தான் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கடந்த 2021 தொடங்கி திருவள்ளுவரை எப்படியாவது ஆரியக் காவிக்குள் அடக்கி விட வேண்டும் என்பதற்காக எண்ணற்ற புளுவுகளையும் புனைவுகளையும் தொடர்ந்து பேசி வருவதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் பரவி இருக்கிற தமிழர்களும் அறிவார்கள்[9].

© வேதபிரகாஷ்

26-05-2024


[1] ஐபிசி.தமிழ்நாடு, வள்ளுவரின் சிஷ்யன் நான்; திருக்குறள் மொழிபெயர்ப்பு ஒரு தலைபட்சமானதுஆர்.என்.ரவி!, ஸ்வேதா, 25-05-2024.

[2] https://ibctamilnadu.com/article/governor-rn-ravi-about-thirukural-translation-1716618394

[3] தமிழ்.இந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் கிளப்பிய திருவள்ளுவர் காவி உடை சர்ச்சைஆய்வுகள் சொல்வது என்ன?, நிவேதா தனிமொழி, Published : 24 May 2024 09:05 PM, Last Updated : 24 May 2024 09:05 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1253344-thiruvalluvar-saffron-dress-controversy-stirred-up-by-the-governor-again-what-the-studies-say-4.html

[5] தினகரன், மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்: ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் சர்ச்சை, 03:36 pm May 23, 2024

[6] https://m.dinakaran.com/article/News_Detail/1374138

[7]தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், திருவள்ளூவர் நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சம், காவி உடை: மீண்டும் வெடித்த சர்ச்சை!, WebDesk, 23 May 2024 16:41 IST.

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvalluvar-was-dressed-in-saffron-in-the-invitation-card-distributed-by-the-tamil-nadu-governors-house-4598305

[9]  உபயோகப் படுத்தப் பட்டுள்ள சொல்லாடல்களை வைத்தே எவ்வாறு வெறுப்பு அரசியல், பார்ப்ப எதிர்ப்பு பெயரில், இந்து எதிர்ப்பு வெளிப்படுத்தப் பட்டுள்ளது என்பதை கவனிக்க்கலாம்.