மத்திய அரசு விளம்பரத்தில் இடம்பெற்ற பாக். முன்னாள் விமானப்படைத் தளபதியின் புகைப்படம்
First Published : 24 Jan 2010 02:55:39 PM IST; Last Updated : 24 Jan 2010 03:00:16 PM IST
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=187032&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
முழுபக்க விளம்பரத்தில் பாகிஸ்தானிய முந்தைய விமான தளபதியின் படம் வெளியாகி உள்ளது! |
![பாகிஸ்தான்-air-chief-tanvir-ahmed பாகிஸ்தான் விமானப்படை திகாரி தன்வீர் அஹமது](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2010/01/e0aeaae0aebee0ae95e0aebfe0aeb8e0af8de0aea4e0aebee0aea9e0af8d-air-chief-tanvir-ahmed.jpg?w=450&h=240) பாகிஸ்தான் முந்தைய விமானப்படை அதிகாரி தன்வீர் அஹமது |
புதுதில்லி, ஜன.24, 2010 : தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் குறிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட முழுபக்க விளம்பரம் ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பாகிஸ்தானின் முந்தைய விமானப்படையின் முன்னாள் தளபதியின் புகைப்படம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரத்தில் விளையாட்டு வீரர்கள் கபில் தேவ், வீரேந்திர சேவாக் மற்றும் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கான் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா திராத், இந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். பிரதமரின் புகைப்படத்துடன் பாகிஸ்தான் விமானப்படைத் தலைவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் அலுவலகம், இந்தத் தவறு குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த விளம்பரம் அரசு அனுமதியுடந்தான் வெளியியப்படுகின்றன. ஆகவே, எல்லா நிலைகளிலும் வேண்டுமென்றே அத்தகைய “இமாலயட்த் தவறை” செய்திருந்தாலொழிய அப்புகைப்படம் வெளியாகி இருக்கமுடியாது. என்ன இருந்தாலும், இந்தியர்களின் துரோகச் செயல்கள், அரசு அலௌவலகங்களில் இருக்கும் ஒற்றர்கள், தேச விரோதிகள் முதலியவற்றைத்தான் இது காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி என்னவேண்டுமானாலும் காரணங்கள் கொடுக்கலாம். ஆனால் நாட்டுப்பற்றே கேலிக்குரிய விதத்தில் நடந்துகொள்ளும்போது, இந்தியர்களும் அத்தகைய மரத்துபோன நிலையில்தான் இருப்பார்ள். இதுவே பாகிஸ்தானில் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்?
இதுவே பாகிஸ்தானத்தில் நடந்திருந்தால் என்னவாயிருக்கும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கு இந்தியக் கொடியை எரித்து பாகிஸ்தானியர் ஆர்பாட்டம் செய்ததை நேற்றைய டிவிக்கள் காட்டின. இதே மாதிரி ஒன்று பாகிச்தானில் நடக்கும் என்ரு நினகித்துப் பார்க்க முடியுமா? முடியாது – பிறகு எப்படி இந்தியாவில் நடக்கிறது? அதுதான் காங்கிரஸ் நடத்தும் செக்யூலரிஸ நாடகம். இந்தியர்களை ஏமாற்றி கொல்லும் கொடொய நோய்.
இந்திய எல்லைகளை, இந்தியாவை மதிக்க பாகிஸ்தானிற்கு என்றுமே எண்ணம் இல்லை. இந்தியாவின் வரைப்படத்தையே சரியாகக் காண்பிக்கப்படுவதில்லை! இந்நிலையில், இந்திய அடிமைக்கூலிகள் இவ்வாறு கேவலாமாக செய்திருப்பது சாதாரணமான விஷயமாகக் கருத முடியாது. நேற்றுக் கூட, பாகிஸ்தானின் அதிபர் தையமாகச் சொல்கிறன், இந்தியாவில் மறுபடியும் மும்பை 26/11 ,மாதிரி தீவிரவாதச் செயல் நடக்காது என்று வாக்குறிதி தரமுடியாது என்கிறான்! இந்தியாவின்மீது வான்வழி தாக்குதல் நடக்கும் என்று கெடுபிடி செய்கிறர்கள். விமானங்கள் சோதனையிடப்படுகின்ரன! அந்நிலையில் எப்படி பாகிஸ்தானின் விமான அதிகாரி படம் வரும்?
13.060416
80.249634
குறிச்சொற்கள்: இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல்
This entry was posted on ஜனவரி 24, 2010 at 1:36 பிப and is filed under அரசின் பாரபட்சம், இந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான், இந்திய அரசு விளம்பரம், சமதர்மம், சமத்துவம், சர்வதர்ம சமபாவம், செக்யூலரிஸம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
பின்னூட்டமொன்றை இடுக