சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் பாதிரிகளுடன், பிஜேபியில் சேர்ந்த மர்மம் என்ன?

சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் பாதிரிகளுடன், பிஜேபியில் சேர்ந்த மர்மம் என்ன?

எல்லாவித ஆட்களும் பிஜேபியில் சேர்வது ஏன்?: சில தமிழ்.ஊடகங்கள் பிஜேபியைப் பற்றி இப்படி விவரிக்கிறது. தமிழகத்தில் சமீபகாலமாக பாஜக தனது கட்சியை வலுவாக்கும் விஷயங்களை செய்துவருகிறது. சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் நேற்று பேராயர் ஜான் ஜோசப் தலைமையில்கிறிஸ்தவர்கள் சிலர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்[1]. இது பாஜகவின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும், மதசார்பற்ற கட்சி என்ற பெயரை எட்டிப் பிடிப்பதாகவும் அமைந்து வருகிறது[2]. தமிழகத்தில் சமீபகாலமாக பாஜக தனது கட்சியை வலுவாக்கும் விஷயங்களை செய்துவருகிறது[3]. இது ஒரு விவாதத்தையே அரசியல் கிளப்பி வருகிறது. பாஜகவில் தொடர்ந்து நடிகர், நடிகைகள் இடம்பெறுவது வெறும் கவர்ச்சி அரசியலையே பிரதிபலிக்கிறது என்ற கருத்தும் பதிவாகி வருகின்றன[4]. அதேசமயம், “அன்னைக்கு இருந்த பாஜக வேற. வெறும் சினிமாக்காரர்கள் பாஜகவில் இணைகிறார்கள் என்று மட்டும் எப்படி சொல்லலாம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் எல்லா தரப்பு மக்களின் ஆதரவையும்தான் பாஜக பெற்று வருகிறது” என்று பாஜக தரப்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனுபவம் உள்ளவர்கள் பிஜெபியின் போக்கு சரியில்லை என்றுதான் எடுத்துக் காட்டுகின்றனர்.

முருகன், பாதிரியாருக்கு பொன்னாடைப் போர்த்தி மரியாதை செய்கிறார்!
முன்னர் முருகனுக்கு புனித நீர் தெளித்து, ஜெபத்துடன், ஆசிர்வாதம் நடந்தது.

சுயாதீன திருச்சபை என்றால் என்ன?: சுயாதீன திருச்சபை நோக்கம் தேவை – (Indigenization Focus): இந்த புதியதாக நிறுவப்பட்ட திருச்சபைகள் சுயாதீன திருச்சபைகளாக மாற வேண்டும். இந்த கூரிய நோக்கப் பார்வை, திருச்சபைகளை சுயாதீன சபைகளாக மாற்றும். இந்த சுயாதீன திருச்சபைகள் –

1. சுயமாக நிர்வாக திறமை,

2. சுயமராக நிதிநிலைமையை மேற்கொள்வது,

3. சுயமாக சுவிசேஷத்தை அறிவிப்பது –

என்ற இந்த மூன்று நிலைகளை அடைவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த சர்ச்சுகள் பெந்தகோஸ்தே, வகைகளாக இருக்கின்றன.

எல்லாவித ஆட்களும் பிஜேபியில் சேர்வது ஏன் – சித்தாந்தத்தை நீர்ப்பது ஏன்?: ஜாதி-ஜாதியத்தை எதிர்க்கிறோம் என்று பிரச்சாரம் செய்தாலும், மற்ற தமிழக கட்சிகள், திராவிட கட்சிகள் பாணியில், வழியில், பிஜேபியும் பின்பற்றி வருகிறது. அம்பேத்கர் இந்து என்றெல்லாம் சொல்லி, பிறகு “பெரியார் கொள்கைகளைத் தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி பின்பற்றுகிறது,” என்ற அளவுக்கு அவற்றின் தலைவர்கள் பேசினர். பிறகு குற்றவாளிகள், ரௌடிகள், மோசடிக் காரர்கள் எல்லோரும், பிஜேபியில் சேர்ந்தனர். இது பலரை திடுக்கிட வைத்தது. ஏதோ சொல்லி பிஜேபிக்காரர்கள் சமாதானம் செய்யப் பார்த்தனர். இந்த சூழலில்தான், திடீரென திருமாவளவனின் மனுஸ்மிருதி விவகாரம் வெடித்தது. இதற்கு பிறகு திருமாவுக்கு எதிராக இந்துக்கள் பெருகிவிட்டதாக பாஜக தரப்பு சொல்லி வருகிறது. அதற்கேற்றார்போல், சில விசிகவினர் பாஜகவிலேயே இணைந்தும் விட்டனர். மற்றொரு பக்கம் திமுக, அதிமுகவில் இருந்தும் அதிருப்தியாளர்கள் பாஜக பக்கம் தாவி வருகிறார்கள். தற்போது கிறிஸ்தவர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பாதிரிகள் பிஜேபியில் சேர்ந்ததற்கான உறுப்பினர்-அடையாள அட்டைக் கொடுக்கப் பட்டது.

சர்வதேச சுயாதீன திருச்சபை பாஸ்டர்கள் சேர்ந்தது ஏன்?: சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் பேராயர் ஜான் ஜோசப் தலைமையில் பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர், என்று சிறிதளவே செய்தி வந்தது. கமலாயம், பிஜேபி தலைமையகத்தில், நாகராஜன் பைபிளிலிருந்து ஆசீர்வாதம் செய்ய அனுமதிக்க, அருமைநாயகம் பாதிரி, ஜெபித்தார்! ஏதோ ஆர்.எஸ்.எஸ்.காரர் போன்று, ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, “பஞ்சாங்கம்” எல்லாம் படித்து, ஜெபித்தார். சுயாதீன திருச்சபை பேராயர் ஜான் ஜோசப், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் ஆட்கள், தலைவர்கள் இடையே, தேவனை ஸ்தோத்திரம் செய்ய, பரிசுத்த ஆவி இறங்கியது! ஜான் ஜோசப் பற்றி, ஒரு கிருத்துவ பெண்மணி போற்றிப் பேசி, அவருக்கு அகில இந்திய அளவில் பதவி கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்! பேராயர் ஜான் ஜோசப், ஏசுவின் திருநாமத்தில், ஜெபித்து, தாமரை மலர்ந்தே தீரும் என்று தனது உரையை முடித்துக் கொள்ள, பரிசுத்த ஆவி சென்று விட்டது. கர்த்தரின் பெயரால்,பிஜேபி தலைவர் முருகன், தலை மீது, புனித நீர் தெளிக்கப் பட்டு, மெழுகு வர்த்தி தீபத்துடன், ஆசிர்வதிக்கப் பட்டார். பரித்த ஆவி / கர்த்தர் / 2016ல் அதிமுகவுடன் சேர் என்றும் , 2020ல் பிஜேபியுடன் சேர் என்றும் சொல்லுமா? இல்லை கூட்டணி சரியாகுமா?

கமலாலயத்தில் பாதிரிகள்.
2016ல் ஜெயலலிதாவை சந்திக்கும் போது, பவ்யமாக கை கட்டிக் கொண்டு உட்கார்ந்தார்கள்.
சுயாதீன சர்ச்சுகளின் பாஸ்டர்கள் / பாதிரியார்கள் 2016ல் ஜெயலலிதாவை சந்தித்த போது.
2016ல் வெளியே வந்து, ஜெயலலிதாவுக்காக வாக்குதத்தம் கொடுத்தது.

பரித்த ஆவி / கர்த்தர் / 2016ல் ஒன்று சொல்லும், 2020ல் வேறு மாதிரி சொல்லுமா?: இதே பாதிரிகள் மற்றும் இதர சர்ச் கூட்டங்கள், 2016ல், பவ்யமாக, கைகளைக் கட்டிக் கொண்டு, ஜெயலலிதாவைப் பார்த்தனர். எதிரே, இ. பன்னீர்செல்வம் உட்கார்ந்திருந்தார்:

1. மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவரும், இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்றத்தின் நிறுவனத் தலைவருமான பேராயர் டாக்டர் மா. பிரகாஷ் தலைமையில்,

2. Rhema AC Church ICI பொதுச் செயலாளர் போதகர் ஜான் மில்டன்,

3. Siswa Mission இயக்குனர் போதகர் சோல் வின்னர்,

4. Blessing Church Bishop in Chennai பேராயர் ஞானப்பிரகாசம்,

5. Faith in Jesus Mission போதகர் தேவரூபன்,

6. Carmel Pentecostal Church போதகர் வில்சன் ஆகியோர் நேரில் சந்தித்து,

வரும் 2016, சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு இந்திய சுயாதீன திருச்சபை மற்றும் ஏனைய திருச்சபைகளின் சார்பில் முழு ஆதரவை தெரிவித்தனர். அப்பொழுது யாரும் பிரேயர் செய்யவில்லை. ஜெயலலிதா வேறு, பிஜேபி வேறு என்பது தான் காட்டுகிறது. இப்பொழுது 2020ல் பிஜேபிக்கு தாவுகின்றனர் என்றால் எப்படி? பரித்த ஆவி / கர்த்தர் / 2016ல் ஒன்று சொல்லும், 2020ல் வேறு மாதிரி சொல்லுமா போன்ற கேள்விகள் எழுகின்றன.

மூன்றே நாளில் ஒரு பாதிரி பிஜேபியில் சேர்ந்து, விலகுவது ஏன்?: அரசியல் இந்துக்களே, சுயாதீன திருச்சபை என்றால் என்ன [கத்தோல்லிக்கரா அல்லது புருடெஸ்டென்டா / Catholic or Protestant] பேராயர் ஜான் ஜோசப், யார், என்று கேட்டால் பதில் சொல்லவில்லை.மற்றவர் யார்? முகத்தை மறைத்து கொணடிருப்பதால் யார் என்று தெரியவில்லை. இவர்கள் ஏன் பிஜேபியில் சேர்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை. ஆனால், “மூன்று நாட்களுக்கு முன்னர் (12-11-2020) நான் பிஜேபியில் சேர்ந்தது உண்மை, ஆனால், அருமைநாயகம் கேட்டதற்கு, இணங்க, இப்பொழுது, பிஜேபியிலிந்ருது விலகி விட்டேன்,” என்று வீடியோவில் உறுதி செய்யும்[5], இந்த பாஸ்டர் யார் என்று தெரியவில்லை. பாதிரி-பாஸ்டர் போன்று அங்கியும் அணியாமல், ஜோராக புள்ளிகள் கொண்ட பிரௌன் சொக்கா / சர்ட் போட்டுக் கொண்டு, இவ்வாறு பேட்டிக் கொடுத்துள்ளார். வழக்கம் போல, சங்கப் பரிவார் என்று சொல்லிக் கொள்ளும் ஆட்கள் தான் இதையும் பரப்பி வருகிறார்கள். ஆனால், தலைவர் முருகன், இதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

‘கிறிஸ்துவ மிஷினரி அணி’ – மீசோராமின் நிலை தமிழகத்தில் உள்ளதா?: பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்தை மறைக்க, இளைஞரணி, மகளிரணியைப் போல, கிறிஸ்துவ மிஷினரி அணி’ ஒன்றை பாஜக உருவாக்கி இருக்கிறது[6]. பாஜக தலைவர் அமித்ஷாவின் உத்தரவின் அடிப்படையில் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது[7]. மேலும், இந்த மிஷினரிகள் அணிக்கு, மிசோ இன மக்கள் மத்தியில், செல்வாக்குள்ள லால்ஹிரியதெரங்கா என்பவரை தலைவராக பாஜக நியமித்துள்ளது[8]. பாஜகவும் கிறிஸ்தவர்களுக்கு எதிரானதல்ல என்பதைக் காட்டவே இந்த அணி அமைக்கப்பட்டுள்ளது[9].

இந்த அம்மணிதான், ஜான் ஜோசப்புக்கு, அகில இந்திய அளவில் பதவி கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

தமிழகத்தில் அத்தகைய நிலை இல்லை. கன்னியாகுமரி பகுதிகளில் தான், கிருத்துவர்களின் மக்கட்தொகை உள்ளது. அதனால், தமிழகத்தில் அத்தகைய மிஷினரி அணி தேவையில்லை. டாக்டரான ஜெமிலா கடந்த 2015ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார்[10]. அவருக்கு தமிழக பாஜக மகளிரணி மாநில செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளராக பதவிகள் வழங்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால், 2017ல் கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது என்று விலகினார்[11]. சண்முகநாதன் என்ற பழுத்த, திறமையுள்ள தலைவர், கிருத்துவர்களின் சகவாசத்தால், பதவியிழக்க நேரிட்டது. அதாவது, நிச்சயமாக, அடிப்படையில் ஒத்து வராத, இரண்டு சித்தாந்த ஆட்களும், கூட்டாக வருவது, அரசியலுக்கு சகஜம் என்றிருக்கலாம், ஆனால், அது சகஜமாகாது, என்பதை, மூன்றே நாளில் ஒரு பாதிரி மெய்பித்துள்ளது நோக்கத் தக்கது.


© வேதபிரகாஷ்

15-11-2020


[1] தமிழ்.ஒன்.இந்தியா, முருகனைதேடி வந்தஜான் ஜோசப்“.. கூடவே 150 பேரும்.. பாஜகவின் கலர் படு வேகமாக மாறுதே!, By Hemavandhana, Updated: Saturday, November 14, 2020, 10:10 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/nearly-150-christians-join-bjp-403074.html

[3] நக்கீரன், பாஜகவில் இணைந்த 150 கிறிஸ்தவர்கள், நக்கீரன் செய்திப்பிரிவு

பி.அசோக்குமார், Published on 13/11/2020 (15:16) | Edited on 13/11/2020 (15:31).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/150-christians-join-bjp

[5]https://www.youtube.com/watch?v=kHyTiQvp1W4&feature=youtu.be&fbclid=IwAR2oDTN8Xf1Udn0f6OBi6UulyfK82osrMQ0qzRXFDXtRoxqd5r1TmSdwzNQ

[6] தமிழ்.ஏசியா.நெட்.நியூஸ், பாஜகவில் தொடங்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மிஷினரி அணி….. மிசோரமில் அதிரடியாக களம் இறங்கிய அமித்ஷா !!, By Selvanayagam P, Mizoram, First Published 26, Jul 2019, 11:46 PM

[7] https://tamil.asianetnews.com/politics/christain-misinaery-in-bjp-pv9hg5

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மிசோரம் பாஜகவில் கிறிஸ்தவ மிஷினரி அணி உதயம்!, By Mathivanan Maran, Published: Wednesday, July 24, 2019, 12:53 [IST].

[9] https://tamil.oneindia.com/news/india/bjp-sets-up-missionary-cell-in-mizoram-357946.html

[10] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜகவுக்கு நேரம் சரியில்லை.. விலகினார் தமிழக மகளிரணி மாநில செயலாளர் ஜெமிலா!, By Kalaimathi | Published: Saturday, October 21, 2017, 12:09 [IST].

[11] https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-bjp-woman-wing-secretary-jemila-has-resigned-from-299081.html

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக