Archive for the ‘கிறிஸ்தவர்’ Category
ஜூன் 26, 2017
எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

எல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர். எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1]. ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.

இந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.

வள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம். இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.

மதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின் “சரித்திரங்கள்” எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

திருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy] முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.
© வேதபிரகாஷ்
26-06-2017

[1] மலர் மன்னன், , http://puthu.thinnai.com/?p=11110
[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
[3] ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524
[4] Sir Walter Elliot came to Madras in 1821 and worked till 1860, as a Member of the Council of the Governor of Madras. He was a life long and devoted student of Oriental Studies inBotany, Zoology, Indian languages, Numismatics and Archeology. He rescued the Amaravathi Marbles, which are now housed in the British Museum along with his coin collection and collection of other artifacts.. His work, ‘Coins of Southern India’, formed part of the famous series ‘Numismata Orientalia’, published in 1884
[5] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .
Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.
[6] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.
- First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
- De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
- Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
- Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
- In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.
Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.
குறிச்சொற்கள்:அதியமான், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வா, உப்பை, உறுவை, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏணி ஏற்றம், ஔவை, கனகமணி, கற்பம் முன்னுறு, குரு நூல், குறள், ஞானவெட்டியான், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருக்குறள், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளி, வள்ளுவன், வள்ளுவர், வாத சூத்திரம்
அதியமான், அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, ஏணி ஏற்றம், கனகமணி, கற்பம் முன்னுறு, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிறிஸ்து, குரு நூல், ஞானவெட்டியான், தாமஸ், திருக்குறள், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளுவர், வாத சூத்திரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஜூன் 20, 2017
தெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை–திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்–இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்! (5)

கிருத்துவர்களின் ஆராய்ச்சிகள் எல்லைகளைக் கடப்பது: இங்கு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட விசயங்கள் எதுவும் அலசப்படவில்லை. ஊடகங்களில் வந்தது மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிந்த, அறிந்த மற்றும் சரிபார்த்த விசயங்களை வைத்து தான் இவை தரப்படுகின்றன. கிருத்துவர்களுக்கு தங்களது நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், அதே நேரத்தில், மற்ற நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் புறம்பாக எதுவும் செய்ய முடியாது. ஆனால், தாமஸ் கட்டுக் கதையினை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் போது, அதன் பின்னணியை ஆயும் போது தான், இவ்வளவு விவரங்கள் வெளிவருகின்றன. ஆரம்பித்திலிருந்தே, ஜான் சாமுவேல் கிருத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர். ஆனால், முருகனை வைத்து அவ்வாறு செய்ததால் தான் பிரச்சினை உருவானது. பிறகு அவர்களது தொடர்புகளால், பிரச்சினை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை, எல்லாவழிகளிலும் மெய்ப்பிக்கப் படாமல் இருக்கிறது.

ஜான் ஜி. சாமுவேல் யார்? [1998 முதல் 2001 வரை நடந்த பிரச்சினைகள்]: ஜான் சாமுவேல் ஒரு கிருத்துவர், “Institute director John Samuel, an Indian Christian, increased the last percentage, opining a nonmysticaland subtly antiHinduview that most scholars, including himself, believe Murugan was elevated from a historical person”, அதனால், முருகனை ஒரு மனிதனாக பாவித்து, பிறகு கடவுளாக உயர்த்தப் பட்டதை, இந்து-விரோதமானது என்று “இன்டுயிஸம் டுடே” வர்ணித்தது[1]. முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் ஒருவர் புகார் 1998ல் கொடுத்தார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி[2] அவரது பணம் கையாடலை விசாரித்தது. விசாரணையில் அவர் சுமார் ஒன்பது லட்சம் கணக்குக் காட்டமுடியவில்லை. அதனால், பணம் கையாடஉறுதி செய்யப் பட்டதால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார். பதிலுக்கு கொடுமுடி சண்முகம்[3] என்பவர் அமர்த்தப் பட்டார். விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை மே.7, 2001 அன்று ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர். இவையெல்லாம் அப்பொழுதைய தினசரிகளில் செய்திகளாக வெளிவந்தன[4].

அனைத்துலக ஸ்கந்தா–முருகா மாநாடு [1998, 2001, 2003]: அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை, கம்பனி சட்டம், பிரிவு 25ன் கீழ் ஆரம்பித்து, ஷேர்களை பங்குகளை / விற்க முயற்சித்தார். மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. முன்பு, ஏப்ரல் 2001ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில் பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது. மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது. ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்காகத்தான். தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டார் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார். பிறகுதான் அவரது நண்பர்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்தது.

ஸ்கந்த–முருக இயக்குனர்கள் அதிர்ந்தது, நண்பர்கள் ஒதுங்கியது: ஒரு ஈரோடு மருத்துவர் எம்.சி. ராஜமாணிக்கம்- நொந்தேப் போய்விட்டார். ஜே. ஜி. கண்ணப்பன் ஒதுங்கி விட்டார். வி. பாலாம்பாள் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல நடித்தார். ஜே. ராமச்சந்திரன், டாக்டர் ராம்தாஸ், ராஜு காளிதாஸ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் திடீரென்று தனது கிருத்துவ புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தெய்வநாயகம் போலவே இவனும் அந்த தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டார். நியூயார்க்கில் ஒரு மாநாடு, பிறகு சத்யபாமா காலேஜில் (ஜேப்பியார் உபயம்). இப்பொழுது, இந்த செம்மொழி மாநாட்டில் அடக்கம்! இந்த கூட்டத்தைப் பாருங்களேன் – மணவை முஸ்தபா, அப்துல் ரஹ்மான், …………..இப்படி முஸ்லீம்கள், அன்னி தமசு (தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிக்கு உதவியவர், சவேசுவின் மனைவி என்று சொல்லப்படுகிறது), சாமுவேல்……….கிருத்துவர்கள், மற்ற நாத்திகர்கள்………………….தயானந்த பிரான்சிஸ் தாமஸ் கட்டுக்கதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார், அதனை வீ. ஜானசிகாமணி குறிபிடுவார்; பிறகு, இருவரும் சேர்ந்து எழுதுவார். ஜே.டி. பாஸ்கர தாஸ் எழுதும் போது, தைக் குறிப்பிடுவார். இப்படித்தான், அவர்களது ஆராய்ச்சி வளரும்.

2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது. இப்பொழுது பிஜேபி ஆட்சி வந்துள்ளதால், இவர்களது வேலை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். கேரளாவில் செரியனின் பட்டனம் ஆராய்ச்சியும், இதே தாமஸ் கட்டுக்கதையினை நோக்கி வந்துள்ளதை கவனிக்கலாம். பி.எஸ். ஹரிசங்கர் என்பவர், ஒரு புத்தகத்தை எழுதி [B S Harishankar’s ‘Pattanam: Constructs, Contexts and Interventions’] மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது[5].

2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[6]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[7]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது[8].
© வேதபிரகாஷ்
20-06-2017

[1] http://www.hinduismtoday.com/modules/smartsection/print.php?itemid=4380
[2] The Institute of Asian Studies is non-profit research centre was registered as an autonomous Society in 1982 and it is governed by a team of members in the capacity of the Board of Governors. Eminent personalities from various walk of life – judiciary, education, government, culture – who evince a keen interest in Asian culture, language, and literature form the Boar d of Governors which is headed by Justice V.R. Krishna Iyer.
[3] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419 E-mail : kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, காலமகிவிட்டார் என்று தெரிகிறது.
[4] “……………பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம். பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்”, என்று குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது, தினத்தந்தி, மாலைமுரசு, தினமணி போன்ற தமிழ் செய்திதாள்களிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் விவரங்கள் வந்துள்ளன. இப்பொழுது, கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.
[5] http://www.newindianexpress.com/states/kerala/2017/jun/05/questioning-efforts-to-connect-myth-with-history-1612964–1.html
[6] Second International Conference Seminar on the History of early Christianity in India (14th to 17th January 2007, http://www.xlweb.com/heritage/asian/christianity-conference2.htm
[7] Third International Conference on the History of Early Christianity in India and the Middle East (September 2008)
[8] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/
குறிச்சொற்கள்:கட்டுக்கதை, கிருஷ்ண ஐயர், கொடுமுடி சண்முகம், செரியன், ஜான் சாமுவேல், ஞானசிகாமணி, தயானந்த பிரான்சிஸ், தாமஸ், தெய்வநாயகம், பட்டணம், பட்டனம், மாயை, மோசஸ் மைக்கேல் பாரடே
ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிருஷ்ண ஐயர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சந்தோசம், சாமி தியாகராசன், செக்யூலரிசம், செக்யூலரிஸம், ஜான் சாமுவேல், திராவிட சான்றோர் பேரவை, தேவகலா, நாச்சியப்பன், மொரிசியஸ், மோசஸ் மைக்கேல் பாரடே, வி.ஜி.சந்தோசம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
ஜூன் 19, 2017
எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)

வி.ஜி.சந்தோசம் யார்?: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.

அனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.

சுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…கிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].

முருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:
1. ஜி. ஜான் சாமுவேல்.
2. டி. தயானந்த பிரான்சிஸ்[9].
3. ஜார்ஜ் மெனசேரி
4. வி. தெய்வசிகாமணி.
5. மோசஸ் மைக்கேல் பாரடே[10].
6. பி. தியாகராஜன்.
7. ஜி. ஜே. பாண்டித்துரை
8. பி. லாசரஸ் சாம்ராஜ் |
9. தன்ராஜ்.
10. ஜே. டி. பாஸ்கர தாஸ்.
11. வொய். ஞான சந்திர ஜான்ஸான்.
12. ஜாலி செபாஸ்டியன்.
13. டி. யேசுதாஸ்.
14. ஜொனாதன் சான்டியாகோ
15. லாரன்ஸ் வின்சென்ட்.
16. எர்னெஸ்ட் பிரதீப் குமார். |
இப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.

விஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.

கிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்?: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.
© வேதபிரகாஷ்
19-06-2017

[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.
[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.
[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.
[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.
[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.
[6] http://www.instituteofasianstudies.com/board_governors.html
[7] For further details on the Conference, please contact: Dr. G. John Samuel, Founder-Director, Institute of Asian Studies, Chemmancherry, Sholinganallur P.O.
http://www.instituteofasianstudies.com/christianity_conference.html
[8] G. John Samuel (General Editor), Early Christianity in India : (with parallel developments in other parts of Asia), editors, J.B. Santiago, P. Thiagarajan, International Centre for the Study of Christianity in India, Institute of Asian Studies, 2008, Chennai.
[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.
[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.
[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.
குறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வம், இந்துத்வா, ஊழியம், ஏசு, கட்டுக்கதை, சந்தோசம், சாமுவேல், சிலை, சேவை, ஜான் சாமுவேல், தாமஸ், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, புரட்டு, போலி, மாயை, முருகன், வி.ஜி.எஸ்.பரத், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ், விருது
அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிலை, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தாமஸ், திராவிட சான்றோர் பேரவை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, நாச்சியப்பன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூன் 16, 2017
திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)

“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:
- திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.
- ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு?]
- “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.
- “எல்லீசர்” அறக்கட்டளை விருது.
அப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா? செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:

நிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- இதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.
- திரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.

திரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது? தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா? திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.

- VHP R.B.V.S. மணியன்ஜி,
- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,
- G.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்
அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.

2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்?: பி.ஆர். ஹரண், தமிழுக்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிஅ பங்கு என்ற கட்டுக்கதை, என்ற கட்டுரையில், “Misinformation campaigners project missionaries such as G.U. Pope, Constantine Joseph Beschi, Robert Caldwell, Barthalomaus Ziegenbalg, Francis Whyte Ellis and Dr. Samuel Green et al as great champions of Tamil and magnificent contributors to its development, including the introduction of “prose” writing. Of these, Francis Whyte Ellis or ‘Ellis Durai’ in Tamil, was a Madras-based civil servant in the British government and Samuel Green a doctor in Sri Lanka; both supported missionaries in evangelical causes,” என்று எழுதினார்.
“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.
“Ironically, A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages cannot be termed his own work as he allegedly took lots of passages from Francis Whyte Ellis, who wrote Dravidian Language Hypotheses.. To understand why Caldwell resorted to “research” South Indian languages, one should read Dr. K. Muthaia’s article, Caldwell Oppilakkanaththin Arasiyal Pinnani (“The Politics Behind Caldwell’s Comparative Grammar”), published in the April 1997 issue of the Tamil monthly magazine Kanaiyaazhi.”
“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.

ஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்?: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்?
- எல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன?
- “எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்?
- திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்?
- எல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்?
- யார் பணம் கொடுத்தது?
இதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா?
© வேதபிரகாஷ்
16-06-2017

[1] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil, Posted on August 2, 2010.
https://bharatabharati.wordpress.com/2010/08/02/myth-of-christian-contribution-to-tamil-%E2%80%93thamizhchelvan/
[2] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 1, Posted on July 21, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1324
Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 2, Posted on July 22, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1325
Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 3, Posted on July 23, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1326
Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 4, Posted on July 22, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1327
Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 5, Posted on July 25, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1328
[3] https://www.facebook.com/jayaraman.v.o/posts/10154585311106709?hc_location=ufi
குறிச்சொற்கள்:இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்
அடையாளம், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சமயசார்பு, சமயம், சாமி தியாகராசன், திராவிட மாயை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், ராதாகிருஷ்ணன், ராவ், விழா, வேதபிரகாஷ், ஹரண், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
ஜூன் 19, 2016
சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்!

இந்துத்துவவாதிகளின் சலசலப்பு[1]: 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது, என்றதால், அவர்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்[2]:
இந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது:
- ஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையில், மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளுவமாகுமா?
- இந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா?
- இறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன?
உண்மையில் இக்கேள்விகளில் காழ்ப்பு, வெறுப்பு, கோபம், முதலியவைத்தான் வெளிப்படுகின்றன. 27.08.2015 அன்று சிலையை வாங்கிக் கொண்டார் என்றால், 16-08-2015 அன்றே, சிலைவைக்கும் நிகழ்சியை அரசியலாக்கி, பரஸ்பர விருப்பங்களை வெளிப்படுத்தி விட்டார்.

செக்யூலரிஸமயமாக்கப் பட்ட சிலை விவகாரம் (ஆகஸ்ட்.2015): ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16, 2015 அன்று லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்[3]. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்[4]. ஆக, இது அனைத்துக் கட்சி சமரச நிகழ்சியாகி விட்டது. உடனே, தில்லியில் “திருவள்ளுவர் விழா” ஏற்பாடாகிறது.
அரசியலாக்கபட்ட சிலை விவகாரம் (17-12-2015): திருக்குறளை போற்றும் வகையில் 17-12-2015 அன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்[5]. திருக்குறள் அறிஞர் ராமசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பு செய்தார். பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோரும் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் புதியபார்வை ஆசிரியர் எம்.நடராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பரத்வாஜ், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை ஹம்ஸத்வனி அமைப்பின் செயலாளர் ஆர்.சுந்தர், டெல்லி தமிழ் சங்க துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள், வெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் ராகவன் நாயுடு, பணிக்கர் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு பணிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே.வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குரூஸ்சுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கப்பட்டது. தெய்வநாயகத்தைத் தான் கூப்பிடவில்லை போலும்! ஆக, இதுவும் சமத்துவ, சமரச, அனைத்துக் கட்சி விழாவானது.

திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்”, திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் என்றெல்லாம் திடீரென்று முளைத்துள்ளது[7]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[8]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[9]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[10], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[11]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.
© வேதபிரகாஷ்
19-06-2016

[1] தமிழ்.தினசரி, கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம்!, பதிவு செய்தவர் : பால. கௌதமன், 17/06/2016.
[2]http://www.dhinasari.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/9353-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html
[3] தமிழ்.இந்து, ஹரித்வார் கங்கை கரையில் அமைப்பதற்காக மாமல்லபுரத்தில் தயாராகும் திருவள்ளுவர் சிலை, Published: August 19, 2015 08:28 ISTUpdated: August 19, 2015 08:29 IST
[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article7556712.ece
[5] தினத்தந்தி, பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா கவிஞர் வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள் தமிழகத்தை சேர்ந்த 133 மாணவ–மாணவிகள் பங்கேற்பு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 3:38 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 5:45 AM IST
[6] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf
[7]தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது, என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..
https://www.facebook.com/search/results.php?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&init=public
[8]http://www.dinamani.com/india/2015/08/23/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5/article2988276.ece?service=print
[9] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf
[10]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
[11] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.
கண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.
குறிச்சொற்கள்:அரசியல், இந்துத்துவம், கங்கை, கன்னியாகுமரி, கல், குறள், சிற்பி, சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், நாமக்ககல், பாஜக, பிஜேபி, வள்ளுவர், விஜய், வைரமுத்து, ஹரித்வார்
கட்டுக்கதை, கலாட்டா, கிருஷ்ணமூர்த்தி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சரித்திரம், சிலை, தருண், தருண் விஜய், திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திருக்குறள், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 9, 2013
ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

ராகுல் தனது “கேர்ல் பிரன்ட்” பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின.
அதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].

Was Rahul Gandhi detained by FBI?
By Our Special Correspondent in “The Hindu” dated Sunday, September 30, 2001
http://www.frontlineonline.info/thehindu/2001/09/30/stories/02300003.htm
NEW DELHI, SEPT. 29. With the U.S. security agencies leaving nothing to chance after the September 11 terrorist strikes, sleuths of the Federal Bureau of Investigation (FBI) “detained” Mr. Rahul Gandhi, son of the former Prime Minister, Rajiv Gandhi, and the Leader of the Opposition, Ms. Sonia Gandhi, for about an hour at the Boston airport early this week, sources here said.
According to sources, Mr. Gandhi, reportedly travelling from Boston to Washington, was detained by the FBI agents who would not let him go even after checking his travel documents thoroughly. They checked his baggage, despite being told that he was the son of a former Indian Prime Minister.
Sources here maintain that only when the news reached 10, Janpath, and the Congress president, Ms. Sonia Gandhi, reportedly spoke to the Indian Ambassador in the U.S., Mr. Lalit Mansingh, Mr. Gandhi was able to proceed with his onward journey.
Though official circles were silent over the incident, Congress sources said they were concerned. Mr. Gandhi’s movement should have been known to the U.S. security agencies because he is a Special Protection Group protectee. And, under the security drill, any movement of a SPG protectee abroad is communicated in advance to their counterparts in that country.
`Envoy did not intercede’
Meanwhile, Sridhar Krishnaswami reports from Washington, quoting well-placed diplomatic sources, that media reports of Mr. Mansingh having been brought into the picture to allow Mr. Gandhi to proceed on his onward journey from Boston to Washington “are simply not true.”
The sources also said since Mr. Gandhi did not get any security protection here, the U.S. agencies were not under any obligation to inform the Indian Embassy of any contact they may have had with him.
In fact, some Embassy officials here have no knowledge of Mr. Gandhi’s trip from Boston to Washington. “But reports of Ms. Sonia Gandhi calling the Indian Ambassador and asking him to intercede with authorities on the `detention’ of Mr. Rahul Gandhi are simply not true,” a senior Indian diplomat told The Hindu.
Diplomats are pointing to the heightened security precautions in the U.S. in the aftermath of the terrorist attacks. Besides different layers of security check at airports, many are subjected to some intense questioning by the Federal Bureau of Investigation and other investigative agencies. But for official purposes, in the case of the movement of VVIPs – and in some cases VIPs – the Embassy notifies Diplomatic Security for necessary courtesies. |

இந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].

அமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின, தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].

அயல் நாட்டு சதி உள்ளது என்று சிபிஐ கூறியதால் விசாரித்து அறிக்கை வெளியிட சுப்ரீம் கோர்ட் ஆணை (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
சோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும். மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

வேதபிரகாஷ்
© 09-08-2013
[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.
[10] October 18, 2012 – ITEM NO.1A COURT NO.12 SECTION II (For Judgment) – S U P R E M E C O U R T O F I N D I A – RECORD OF PROCEEDINGS – CRIMINAL APPEAL NO. 1406 OF 2012 – KISHORE SAMRITE Appellant(s) – VERSUS – STATE OF U.P. & ORS. Respondent(s); Date: 18/10/2012 This Appeal was called on for pronouncement of Judgment today.
http://www.indiankanoon.org/doc/75923839/
[11] The CBI shall continue the investigation in furtherance to the direction of the High Court against petitioner in Writ Petition No. 111/2011 and all other persons responsible for the abuse of the process of Court, making false statement in pleadings, filing false affidavits and committing such other offences as the Investigating Agency may find during investigation. The CBI shall submit its report to the court of competent jurisdiction as expeditiously as possible and not later than six months from the date of passing of this order.
[13] The CBI also claimed that the petitioner, Kishore Samrite, who filed a case against Rahul Gandhi, in the Allahabad High Court, had received foreign funds. The agency told a Supreme Court bench that it had seized chits showing Samrite had received foreign money for paying lawyers’ fees. The CBI said the abduction victim did not exist and the woman was conjured up in reports and uploaded on three foreign websites, which Samrite used with an ulterior motive. According to it, the victim woman was non-existent, her address fictitious and there was no record whatsoever with the Uttar Pradesh government or local bodies.
Read more at: http://indiatoday.intoday.in/story/foreign-hand-behind-bid-to-malign-rahul-gandhi-cbi-tells-sc/1/222107.html
குறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தரங்கம், அந்நியன், அமேதி, இத்தாலி, ஊடல், ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, காதலி, காதல், காந்தி, கிஷோர் சம்ரிட்டே, குடும்பம், கூடல், சகோதரி, சதி, சமஜ்வாடி, சிபிஐ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், நாகரிகம், நேரு, பணம், பண்பாடு, பிரம்மச்சரியம், பிரம்மச்சாரி, பிராமணன், பிரேசில், புகார், மனைவி, முன்னேற்றம், முலாயம், ரஷ்யா, ராகுல் காந்தி, வழக்கு, விருப்பம், விவாதம்
ஃபிரோஷ் காந்தி, ஃபிரோஷ் கான், அதிகாரம், அத்தாட்சி, அத்தை, அந்நிய நாட்டவன், அந்நியன், அமேதி, உடல், உரிமை, உறவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பழிப்பு புகார், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், காதலி, காதல், காந்தி கணக்கு, காமம், கிருத்துவ காதல், கிருத்துவம், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிஷோர் சம்ரிட்டே, செக்யூலரிஸம், செக்ஸ், சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொடர்பு, பிராமின், பிரியதர்சினி, பிரியதர்ஷினி, பிரிவு, புகார், மீடிங், முத்தம், ராகுல், ராஹுல், வென்ரிகோ இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
ஓகஸ்ட் 9, 2013
ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

பிரமச்சாரியாக இருந்து தியாகம் செய்யவே திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகியின் புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].

குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சிமுறையைத் தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5]. பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].

वाल्मीकि ने प्रेस कॉन्फ्रेंस में राहुल गांधी को लेकर दावा किया, ‘वह महान आदमी हैं और उन्होंने काफी बलिदान दिया है। यही वजह है कि उन्होंने शादी न करने का फैसला किया है। यहां तक कि अटल बिहारी वाजपेयी ने भी शादी नहीं की थी।’ हालांकि, जब उनसे पूछा गया कि क्या खुद राहुल गांधी ने शादी न करने की बात उनसे कही है तो वाल्मीकि ने यू-टर्न ले लिया। वाल्मीकि ने कहा, ‘मैं राहुल गांधी से नहीं मिला हूं। मैंने ये बातें अखबारों में पढ़ी हैं। यह बात गलत भी हो सकती है।’
|

மோடியும் பிரமச்சாரி தானே?: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ? இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன.
நிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.

கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் ராகுலே இத்தகைய விளக்கம் கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?
வேதபிரகாஷ்
© 09-08-2013
[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு, பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST
குறிச்சொற்கள்:அந்தப்புறம், அந்தரங்கம். ராஜாங்கம், அனுமதி, அழகி, இத்தாலி, இந்திரா, இளவரசன், உறவு, ஒழுக்கம், கல்யாணம், காதலி, காதல், கார்டெல்லி, கூடல், சோனியா, டேடிங், துணைவி, நடிகை, நேரு, பாஸ்டன், பிரம்மச்சரியம், பிரியங்கா, பிரிவு, பிரேசில், மனைவி, ராகுல், ராபர்ட், ராஹுல், வதேரா, வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli
அனுஷ்கா, ஆணவம், ஆதாரம், இத்தாலி, இலக்கு, இளமை சோனியா, இளைஞர், உடல், உண்மை, உரிமை, உறவு, கவர்ச்சி, காதலி, காதல், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், செக்ஸ், தோழி, பாஸ்டன், ராகுல், ராஹுல், வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
ஏப்ரல் 20, 2013
இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்?

11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.

கௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:
Hindu a thief of sorts: KarunanidhiTNN | Oct 25, 2002, 10.04 PM IST – Times of India.
CHENNAI: It was the DMK chief’s strongest pitch against Hindutva. Talking at a public meeting on Thursday evening, organised by minority communities to protest the religious conversion ordinance, M Karunanidhi said, “Who is a Hindu? You must ask Periyar EVR. A good man would say the word Hindu means a thief[8]. I don’t think of the Hindu in such demeaning terms. I’d prefer to say the term means someone who steals the heart.” He, however, did not explain the source of his claim. What is pertinent to note is that DMK is a key constituent of NDA. |

கௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].
கருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்!
19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].
குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.
23-04-2013 அன்று என்ன நடக்கும்?: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.
- திராவிட சித்தாந்தத்தில் கட்டுண்டு,
- திராவிட மாய வலையில் சிக்குண்டு,
- பகுத்தறிவில் உழன்று,
- சாதியில் மூழ்கி,
ஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,
- தொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,
- மனசாட்சியை நிர்வாணமாக்கி,
- மரத்துப் போக செய்ததில்
இத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே, 23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –
- கருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.
- சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்.
- கண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.
- அதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.
- இல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.
இந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்!
வேதபிரகாஷ்
20-04-2013
குறிச்சொற்கள்:இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, திராவிட ஜிஹாதி, திராவிட ஜிஹாதிகள், திராவிட பித்தம், திராவிட வெறி
அடையாளம், அமைதி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, இலக்கு, இஸ்லாம், உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, எதிர் இந்து, கடவுள், கட்டுக்கதை, கம்யூனிஸம், கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காஃபிர், காங்கிரஸ், காபிர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திராவிட பித்து, திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திரிபு வாதம், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நாத்திகம், நிலுவை, நீதி, நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பண்டாரம், பரதேசி, பாரத விரோதி, பாரதம், பிஜேபி, பிரச்சினை, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், மாம்பலம், முஸ்லீம், வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஏப்ரல் 20, 2013
இப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.
சட்டத்தை மீறும் நீதிகள்
கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!
சங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.
குற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.
அங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.
மகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.
அதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.
|
ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.
அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:
- அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
- தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
- அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
- அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
- மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
- நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
- அரசுதரப்பில் தாமதம் செய்வது,
- சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
- ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது /…
View original post 285 more words
குறிச்சொற்கள்:இந்து, உயர்நீதி மன்றம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சட்டம், சாட்சி, தாமதம், திருடன், நம்பிக்கை, நாத்திகம், நீதி, நீதித்துறை, நேர்மை, பண்டாரம், பரதேசி, பிரதிவாதம், பிரதிவாதி, முன்மாதிரி, முறையீடு, வக்கீல், வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், வாதம், வாதி, ஹிந்து
இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்கள், உண்மை, கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், கலாச்சாரம், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, ஜெயலலிதா, தாமதம், திராவிடன், திரிபு வாதம், திருடன், தீர்ப்பு, துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நிலுவை, பகுத்தறிவு, பகுப்பு, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், முஸ்லீம், ராஜிவ், வகுப்புவாத அரசியல், வஞ்சகம், வழக்கு, வாதி, விசாரணை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 20, 2013
சட்டத்தை மீறும் நீதிகள்
“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்‘ என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.
இந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா?: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்‘ என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].
ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…
View original post 576 more words
குறிச்சொற்கள்:அநீதி, அரசியல், அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து சுதந்திரம், சமதர்ம தூஷணம், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், திருடன், தூண்டு, தூண்டுதல், நிலுவை, நீதி, நீதித்துறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், முஸ்லீம், வழக்கு, Indian secularism, secularism
அடையாளம், அந்நியன், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், காழ்ப்பு, கிறி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திருடன், தீந்து விரோதி, துரோகம், தேசத் துரோகம், நக்கீரன், நாத்திகம், நீதி, பகலில் சாமி, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பாசிஸம், பௌத்தம், மதுரை ஆதினம், மந்திரம், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜிவ், வஞ்சகம், வெறி, ஹிந்து, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »