Archive for the ‘ஊழல் அரசியல்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

சூரியஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (4)

மார்ச் 11, 2014

சூரியஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல்கேரளாவில் நடக்கும் கூத்துகள் (4)

 

ஏ. பி. அப்துல்லாகுட்டி என்கின்ற கன்னூர் தொகுதி காங்கிரஸ்காரர், கற்பழிப்புப் புகாரில் சிக்கியுள்ளார்[1]. சரிதா நாயர் திருவனந்தபுரத்தில் மஸ்கட் ஓட்டலில் தன்னை கற்பழித்ததாக அல்லது பாலியல் ரீதியில் தாக்கியதாக 03-03-2014 அன்று புகார் கொடுத்ததால், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]. தான் கைது செய்யப் பட்டப் பிறகும் இரவுகளில் போன் செய்து செக்ஸ் ரீதியில் துன்புறுத்தி வந்ததாக கூறியுள்ளார்[3]. அவர் பேசிய சில பேச்சுகள் ஒரு பெண்ணின் பெண்மையினையே அவமானப்படுத்தும் ரீதியில் உள்ளன என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் அவ்வாறு தொடர்பு கொண்டதை வெளியே சொல்லக் கூடாது என்றும் மிரட்டியதாக கஎடுத்துக் காட்டினார்[4]. இந்த பெண் ஏற்கெனவே சோலார் பெனல் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறாள். அப்துல்லாகுட்டி முன்னர் சிபிஎம் கட்சியில் இருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்[5]. சமீபத்தில் மோடியை வேறு புகழ்ந்திருக்கிறாராம்!

 

ஏற்கெனவே, இவ்விவகாரத்தைப் பற்றி, கீழ்கண்டவாறு, பதிவுகள் உள்ளன:

 

சூரியஒளிமின்சாரம், நடிகைகளின்கவர்ச்சிகரவியாபாரயுக்திகள், கோடிகளில்மோசடி, கூடஅரசியல்கேரளாவில்நடக்கும்கூத்துகள் (1)

https://secularsim.wordpress.com/2013/07/14/968-solar-sleaze-sex-scam-scandal-politics-congress/

சூரியஒளிமின்சாரம், நடிகைகளின்கவர்ச்சிகரவியாபாரயுக்திகள், கோடிகளில்மோசடி, கூடஅரசியல்கேரளாவில்நடக்கும்கூத்துகள் (2)

https://secularsim.wordpress.com/2013/07/14/solar-panel-sleaze-sex-scam-scandal-sonia-congress/

சூரியஒளிமின்சாரம், நடிகைகளின்கவர்ச்சிகரவியாபாரயுக்திகள், கோடிகளில்மோசடி, கூடஅரசியல்கேரளாவில்நடக்கும்கூத்துகள் (3)

https://secularsim.wordpress.com/2013/07/21/solar-scam-links-widens-with-politicians-actresses-dons-with-all-shades/

 


[3] In her complaint, Saritha accused the MLA of soliciting her presence at a hotel room, and digitally stalking her by calling her persistently on her mobile phone. She stated some of his phone conversations were of an obscene nature that outraged her modesty as a woman.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/case-registered-against-abdullakutty/article5772335.ece

[4] She told the reporters that the MLA used to call her and send messages even after she was taken into police custody, asking her not to reveal his name. She accused the MLA of inappropriate conversation. No politicians has called her after she got bail.

http://w3.malayalamonline.com/news/congress-mla-abdullakutty-has-invited-me-to-hotel-says-sloar-scam-accused-sarita.html

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)

மார்ச் 6, 2014

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)

 

YSR Catholic Christian family

YSR Catholic Christian family

 

கிருத்துவத்திற்கு  எதிராக  செயல்படுகின்றனர்   என்று   ஆந்திர  மாநில  கிருத்துவ  கவுன்சில்  தடை  விதித்தது: YSR குடும்பம் இப்படி விசுவாசமாக ஊழியம், தொண்டு முதலியவற்றை செய்து வரும் போது, ஊழல் பிரச்சினை வந்தபோது, சோனியா-காங்கிரஸ் சொக்கத்தங்கம், சுத்தமான கட்சி என்றெல்லாம் காட்டிக் கொள்வதற்கு, கடந்த ஜனவரி 2013ல் விஜயம்மா மற்றும் சகோதரர் அனில்குமார் அதாவது மறுமகன் கிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது என்ற செய்தி வந்தது.

State Christian Political Awareness conference announced its decision to ban YS Vijayamma, Brother Anil and KA Paul for indulging in non-Christian activities while holding bible in their hands. While Vijayamma carried bible during campaigning in recent by-polls, there were allegations against Brother Anil and KA Paul for their involvement in corrupt practices. “As the three of them have insulted Christianity by using it for political gains, they were banned from the religion,” said a statement released by the organization[1]. ஆனால் கடந்த ஜனவரி 2013ல் விஜயம்மா மற்றும் சகோதரர் அனில்குமார் அதாவது மறுமகன் கிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது[2]. இது வெறும் நாடகமே என்று தெரிகிறது.

ஜனவரி 2011ல் விஜயவாடாவில், 25 ஜோடிகளுக்கு, சிறுபான்மையினர் துறை பெயரில் / போர்வையில் கிருத்துவமுறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது[3].

கிருத்துவ திருமணம் சாமுவேலின் ஆட்சியில்

கிருத்துவ திருமணம் சாமுவேலின் ஆட்சியில்

2011ல் தேர்தல் சமயத்தில் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் அதுமட்டுமல்லாது, சர்ச்சுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது[4].

இதற்கென

சர்ச்சுகளில் தேர்தல் பிரச்சாரம்

சர்ச்சுகளில் தேர்தல் பிரச்சாரம்

பேருந்துகளில் கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் என்று கூட்டம் வரவழைக்கப் பட்டது. இவ்வாறு விசுவாசமாக இருக்கும் போது தடை விதிக்கப்பட்டது வெறும் நாடகமே, வேறு ஏதோ காரணம் உள்ளது என்பது புலனாகியது. ஆம்னாம், அதுதான் சுரங்க ஊழல்!

 

YSR family.extended

YSR family.extended

YSR  குடும்பத்தின்  கனிம  வள  சுரண்டல்: YSRன் தந்தை ராஜா ரெட்டியே பெரிய கனிமவல சுரண்டல் பேவழி என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் அவர் அந்த சட்டவிரோத சுரங்க தோண்டல், சுரண்டல் முதலிய வேலைகளில் ஈடுபட்டு கோடிகளை சம்பாதித்தார் என்கிறர்கள். தூமலப்பள்ளி என்ற கிராமத்தில் யுரேனிம் உள்ளது என்பதால், இஸ்ரேல் கம்பனிகளுக்கு ஆசை வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் நடக்கும் விவகாரம் என்பதை அறியலாம். தமிழகத்திலும் அத்தகைய விசேஷ கனிமங்கள் கிடைக்கின்றன என்பதினால், அப்பகுதிகளில் கிருத்துவ மதமாற்றம் அதிக இருப்பதை காணலாம். இப்பொழுது, அணுவுலை எதிர்ப்பு என்ற போர்வையில் கிருத்துவ சர்ச்சுகள், என்.ஜி.ஓக்கள் முதலியவை செயல்பட்டு வருவதை காணலாம். அதே முறைத்தான் ஆந்திராவிலும் இருப்பது, YSRன் பாரம்பரியம் எனலாம். அதனால் தான், YSR பய்யாராம் இரும்பு கனிம சுரங்க உரிமத்தை அனில்குமாருக்குக் கொடுத்தார். ரக்ஷா ஸ்டீல்ஸ் என்ற பெயரில் இவர் ஒரு கம்பெனியை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, மகனும் பல கம்பெனிகளை வைத்துள்ளார். Sandur Power, Saraswati Power, Carmel Asia Holdings, Bharathi Cement Corp, Kealawn Technologies Pvt Ltd, Marvel Infrastructure, Classic Realty, Silicon Builders, Swasti Power Engineering Ltd இப்படி இக்கம்பெனிகள் எல்லாமே கனிம சுரங்க வளங்களை சுரண்டும் வகையாக இருப்பதை காணலாம்.

 

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - நியூஸ் கட்டிங் - ஆங்கிலம்

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – நியூஸ் கட்டிங் – ஆங்கிலம்

சோனியா- YSRன் மோதல் – கத்தோலிக்க மோதல் அல்ல கத்தோலிக்க உள்-மோதலே: சோனியா YSRஐ கிருத்துவர் என்ற ஒரே காரணத்திற்காக பதவியைக் கொடுத்தார், ஆனால், YSR இறந்தபிறகு, பணபறிமாற்றம் விசயங்களில் பிரச்சினை ஏற்பட்டதால், மகன் ஜகனால் கருத்துவேறுபாடு தொடங்கிறது. கிருத்துவத்தலைவர்கள் பலமுறைகளில் ஈடுபட்டாலும், அது பெரிதாகி, பிளவில் முறிந்தது. YSR-காங்கிரஸ் தொடங்கியதும் இவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. சிபிஐ ரெய்டுகள், கைது, ஜெயில் வாசம் என்று தொடர்ந்ததன. சோனியா தான் காரணம் என்று ஜகன் வெளிப்படையாகவே கூறினார். ஆனால், இவையெல்லாமும் கிருத்துவ நாடகம் தான், ஏனெனில், இதே கனிமவள சுரண்டல் எல்லா மாநிலங்களிலும் சோனியா ஆதரவில் நடந்து வருவதால், ஆந்திராவில் அது அதிக அளவில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்தார். போதாகுறைக்கு கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபி-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு கமிஷன் கொடுத்து வருகிறார்கள். அதனால், ஊழலில் திளைத்த சோனியா எப்படியாவது திசைத்திருப்பத்தான் இந்த அதிரடி நடிவடிக்கைகள் என்றும் ஆந்திராவில் விவாதிக்கப் படுகின்றன[5].

 

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - புகைப்பட ஆதாரம்.2

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.2

திருப்பதி-திருமலை   அத்துமீறல்கள்  விசயங்களில்  மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன: இந்துக்களின் புண்ணிய க்ஷேத்திரங்களான திருப்பதி-திருமலை கோவில்கள் விஷேசமானவை. இன்று கோடிகளைப் பெற்றுவரும் நிறுவனமாக செக்யூலரிஸ ஆட்கள் பார்க்கின்றனர். அப்பணத்தை எப்படி திசைத்திருப்பி அனுபவிக்கலாம் என்று திட்டம் போட்டு வருகின்றனர். திருப்பதி-திருமலை அத்துமீறல்கள் அம்மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. அதனால் தான் இவ்விசயங்களில் மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன. TDP தலைவர் முட்டு கிருஷ்ண நாயுடு அந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்காததால் ஜகன் விதிமுறைகளை மீறினார் என்று எடுத்துக் காட்டுகிறார். ஜகனின் தந்தையான சாமுவேல் ராஜசேகர ரெட்டியும் திருமலையில் தரிசனம் செய்துள்ளார். பிஜேபி ஜகன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுள்ளது[6]. ஆனால், வருடாவருடம் ஜகன் இப்படியே செய்து கொண்டிருப்பார், கட்சிகளும் அப்படியே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால், பாதிக்கப்படுவது யார்?

 

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - புகைப்பட ஆதாரம்.3

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.3

2006  மற்றும்  2012  ஆண்டுகளில்  பிரச்சாரம்  முடிக்கி  விடப்பட்டது  ஏன்?[7]: கிருத்துவர்களைப் பொறுத்தவரையில் கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவும் இல்லாமல், அவர்கள் செய்து வரும் அநியாயங்கள், அக்கிரமங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் மறைத்து, அத்தகைய குற்றங்கள் செய்தவர்களை, “தியாகிகள்” என்றே திரித்து எழுதி வந்து பிரச்சாரம் செய்வது கேவலமானதாகும். போதாக்குறைக்கு “இந்து தீவிரவாதிகள்” கிருத்துவர்களைத் தாக்குகிறர்கள் என்றும் பொய்மாலங்களை வெட்கமில்லாமல் பரப்பி வருகிறார்கள்[8]. முதலில் கிருத்துவர்கள் க்ஷ்செய்து வரும் அயோக்கியத்தனத்தை இந்த மாய்மாலக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிநெது தெரியாதத் போல இவ்வாறு செய்வது என்பது குற்றங்களை உக்குவிப்பது, குற்றவாளிகளைத் தூண்டிவிடுவது, ஆதரிப்பது என்ற செயல்களுக்கு ஒப்பாகிறது. இதிலிருந்தே, இவர்களது யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அமைதிக்கு ஊறுவிளைக்கும் காரியங்களாகும் என்றும் அறியப்படுகின்றது.

 

அனில்குமார் மதப்பிரச்சாரம். பேனர்

அனில்குமார் மதப்பிரச்சாரம். பேனர்

TTDயின் ஊழியர்களே இதில் சிக்கியுள்ளது: ஜூலை 2012ல், ஈஸ்வரைய்யா, கிருஷ்ணம்மா மற்றும் யசோதம்மா என்ற மூன்று TTDயின் சுகாரத்துறை [TTD’s Health Department] ஊழியர்களின் வீடுகளை சோதனையிட்ட போது, கிருத்துவ மிஷனரிகளின் கத்தை-கத்தையான பிரச்சார நோட்டீசுகள், சுவரொட்டிகள் மற்ற இதர பிரச்சார பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, விஜிலென்ஸ் துறையின்சர் கண்டு பிடித்தனர்[9]. கைதும் செய்யப்பட்டனர்[10]. அவர்கள் வீடுகள் திருமலையில் TTDக்கு சொந்தமான குவாட்டர்ஸில் இருந்தன என்பதால், அவை எப்படி எல்லா சோதனைகளையும் மீறி இவை மலைக்கு மேல் ஏறிவந்தன என்று வியப்பாக உள்ளது. இவ்வாறு பொருட்கள், மனிதர்கள், அதாவது கிருத்துவப் பொருட்கள், கிருத்துவ மனிதர்கள், தாராளமாக மைக்கு மேலே வருகின்றன, கோவிலுக்கும் செல்கின்றார்கள் என்றால், நிச்சயமாக இவை பாதுகாப்பு வளையங்களை கடந்து செய்யப்படும் குற்றங்கள் ஆகும். அறிந்து செய்யும் சட்டமீறல்கள் ஆகும். இந்த மூவரும் தாங்கள் TTD யின் ஊழியர்களக இருந்தும் துரோகம் செய்துள்ளார்கள். அதேபோல, ஜகன் மற்றும் அந்த 50 மற்றும் 300 பேர்களில் உள்ள கிருத்துவர்கள் இந்துக்களின் புண்ணியத்தை, புனிதத்தை, பாரம்பரித்தை மதிக்காமல் இருக்கிறர்கள், தூஷிக்கிறார்கள் எனும் போது, அச்செயல்கள் இந்திய குற்றாவியல் சட்டங்கள் மற்றும் அர்சியல் நிர்ணய சட்டத்தின் பிரிவுகளையும் மீறுகின்றன. மேலும் செக்யூலரிஸத்தைப் பின்பற்றுகிறோம் என்றுள்ள இந்நாட்டின் அரசியல் மேதைகள், தலைவர்கள், முதலியோர் இத்தகைய சட்டமீறல்களுக்கு, அதே செக்யூலரிஸ போர்வையில் துணை போகிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது.

 

© வேதபிரகாஷ்

06-03-2014


[2] The ban imposed on YSR Congress honorary president YS Vijayamma and his son-in-law Brother Anil by a Christian organization came as a bitter shock to YSR family. In the conference, The members of the organization appealed to vote for only those who would strive for the betterment of Christian community. If few more organizations follow the same path, Jagan will be in big trouble and Christian community is the backbone of YSR Congress party.

http://www.gulte.com/news/17987/Christian-Organization-bans-Vijayamma-Br-Anil

[3]  the mass marriages were performed as part of the 15-point programme being implemented by the Central and State Governments. He said efforts would be made to provide reservation to Dalit Christian Minorities. The Minister presented wedding rings and ‘thali bottu’ to the couples. He also gave away some basic items of daily need for the couples to set up their new households. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/mass-marriages-performed/article1079913.ece

[5] உள்ளூர் தெலுங்குப் பத்திரிக்கைகள், நாளிதழ்களில் வந்துள்ள விவரங்களின் தொகுப்பாக இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

[7] After lying low for some time, the problem of proselytisation has reared up its ugly head once again at Tirumala, the abode of Lord Venkateswara. The issue which rocked the TTD about six years ago, has erupted again as evidenced ……….

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/article3679380.ece

[9] After lying low for some time, the problem of proselytisation has reared up its ugly head once again at Tirumala, the abode of Lord Venkateswara. The issue which rocked the TTD about six years ago, has erupted again as evidenced by the fact that in a raid conducted by the TTD’s Vigilance and Security personnel on three houses in the TTD staff quarters at Tirumala late on Monday night following a tip-off, bundles of religious publications, wall-posters and such other propaganda material belonging to Christian missionaries were reportedly recovered.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/article3679380.ece

[10] TTD staff propagating Christian faith in Tirumala arrested, Published on 24 Jul 2012

http://www.youtube.com/watch?v=cQ1VMAp0gLQ

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)

Narendra Modi and Pachamuthu at SRM convocation 2014.

Narendra Modi and Pachamuthu at SRM convocation 2014.

 

பச்சமுத்து  என்கின்ற  பாரிவேந்தர்  மோடியைப்  புகழ்வது (10-02-2014): சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் குஜராத் மாநிலத்திற்கு சென்றேன். அங்கு டாஸ்மாக் கடை இல்லை. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலைகள் மிக அருமையாக உள்ளன. அங்கு இலவசங்கள் எதுவும் இல்லை. அங்கு 3–வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி மிகவும் நல்லவர். நாணயமானவர். ஊழலற்ற ஆட்சியை குஜராத்தில் தந்து தொடர்ந்து முதல்வராக உள்ளார். நான் பல கல்வி நிறுவனங்களை தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நிறுவி ஆண்டுக்கு 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்று தருகிறேன். இதோடு போதும் என்று நின்று விடாமல் நமது மக்களுக்கு ஏதாவது நல்லது நம்மால் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜனநாயக கட்சியை ஆரம்பித்தேன்[1]. இதெல்லாம் இவருக்கு முன்னர் தெரியாமல் போயிற்றா அல்லது இப்பொழுது தான் அறிந்து கொண்டாரா என்று ஆராய்ச்சி செய்யவேண்டும்.

Narendra Modi at SRM convocation 2014

Narendra Modi at SRM convocation 2014

பாரதிய ஜனதா கூட்டணி: “இன்று பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 2 தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்”, இவ்வாறு பாரிவேந்தர் பேசினார். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் டி.பி.பச்சமுத்து, அமைப்பு செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்[2]. மோடி கூட்டத்தில் பேசும் போது, “எனது கல்லூரி விழாவுக்கு மோடியை அழைத்த நான், எங்கள் கட்சியின் பொதுகூட்டத்திற்கும் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். அவர் பாஜக மாநிலத் தலைவரையும் அதில் இணைத்துக் கொள்ளுங்கள்எனக் கூறினார். அப்படி நடைபெறுவதுதான் இந்த கூட்டம்”, என்றார். தமிழக பிஜேபியில் 20-30 ஆண்டுகளாக வேலை செய்துவரும் தலைவர்களுக்குக் கூட சீட் கிடைக்காது என்ற நிலையில், லீமா ரோஸுக்கு சீட் எனும் போது வியப்பாகத்தான் இருக்கிறது. 39 தொகுதிகள் எவ்வாறு பிரிக்கப்படும் என்றும் பார்க்க வேண்டியுள்ளது. பிஜேபி ஜெயிக்கும் என்று ஒரு தொகுதியும் இல்லை. ஆனால், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை என்ற சில இடங்களில் ஒருவேளை கூட்டணி பார்முலாவில் வெல்லலாம். ஆனால், அவை மற்ற கட்சிகளுக்குக் கொடுத்தால் பிஜேபி அம்போதான்! ஆகவே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மோடி பேசியபோது, மோடி ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கலாம். மோடி ஆதரவாளர்கள், அறிவுஜீவிகள் இணைதளங்களில் அதைப் பற்றி புகழ்ந்து போற்றியிருக்கலாம். ஆனால், இந்த கூட்டணி பற்றி அவர்கள் யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

 

பச்சமுத்து கமல் ஹஸன் சத்தியநாராயணன்

பச்சமுத்து கமல் ஹஸன் சத்தியநாராயணன்

வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் சோதனை (2013): பணம் அதிகமாக வரும் போது, குறிப்பாக கணக்கில் வைக்க முடியாத பணம் வரும் போது, ஒரு இடத்திலிருந்து பணம் வந்ததாகவும், மற்ற இடத்தில் அவை செலவழிந்தது போலவும் காட்டுவது சார்டெட் அக்கௌன்டன்ட்களின் வேலை. அவற்றை செய்து வரும் அவர்களை யாரும் ஊழலுக்குத் துணைப் போகிறார்கள் என்று யாரும் விமர்சிப்பதில்லை[3]. அப்படி உருவான நிறுவனமான வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் ரெய்ட் நடந்தபோது அதன் ஒரு பார்ட்னர் காணாமல் போய்விட்டார் என்று செய்திகள் வெளியிடப் பட்டன. எதிர் நீச்சல், தில்லுமுள்ளு போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது. ரெயிடுகளில் கிடைத்த ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது, வாங்கப்பட்ட கொடைப்பணம், அதிக அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது போல காண்பித்து, மீதமுள்ளள பணத்தை டிரஸ்டுகளுக்கு திருப்பி விட்டது தெரியவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து, வருமான வரியை குறைத்துக் காட்ட இம்முறை கையாளப்பட்டதாகத் தெரிகிறது. நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன[4]. கொஞ்ச நாட்களில் இவையெல்லாம் மறக்கப்பட்டன. துப்பாக்கி பட விசயத்தில் கூட பச்சமுத்து பெயர் அடிபட்டது. எஸ்.ஆர்.எம். மருத்துவ மனைக்கு அருகில் கூட பச்சமுத்துவை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து   சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

மருத்துவக்  கல்லூரியில்   சேர்க்க  நன்கொடை  பிரச்சினை (ஏப்ரல் 2013): மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை பெற்றதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். வழக்கு ஒன்றில் சிக்கிய சுங்கத்துறை அதிகாரி ஜம்போ லாலின், தனது மகள் மானசாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை கொடுத்ததாக சிபிஐ-யில் வாக்குமூலம் அளித்ததாக கூறி, அதன் அடிப்படையில் இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருக்கு கடந்த மார்ச் 25 ஆம் தேதி 2013 சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து, முன் ஜாமீன் கோரி மேற்கூறிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாகவும், மனுதாரர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் சிபிஐ அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டபோது, அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது.  இதனிடையே சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான இருவரும் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். பிறகு இதைப் பற்றிய செய்திகள் நின்றுவிட்டன.

 

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து  சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பழைய  நண்பர்களை  மறந்து,  புதியநண்பர்களை உருவாக்கிக் கொண்டார் (1960-1990): 1960களிலிருந்து, கடின உழைப்பில் உயர்ந்த பச்சமுத்து, பணம் வந்ததுடன் மாறித்தான் போனார். அதனால், பழைய நண்பர்களை மறக்க / ஒதுக்க ஆரம்பித்தார். தமிழ்நாடு டுடோரியல்ஸ் (Tamilnadu Tutorials, started in 1967), நைட்டிங்கேல் நர்சரி பள்ளி (Nightingale Nursery School, started in 1969), ஏசியன் இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலாஜி (Asian Institute of Technology, started in 1976) போன்றவற்றில் அவருக்கு உதவியவர்களை மறந்து விட்டார். பழைய மாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறியபோது, இவரும் மாறி விட்டார். முன்பாவது, அதாவது 1980களில் பார்க்க வந்தால், அனுமதித்து வந்தார், ஆனால், இப்பொழுதோ “பழைய நண்பர்கள்” உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை. வெளியே காரியதரிசி என்று சொல்லிக் கொள்ளும் புதிய ஆட்கள், அவர்களைக் கொஞ்சமும் மதிக்காமல் அனுப்பி விடுவது பழக்கமாகியது. ஆனால், புதிய நண்பர்கள் அவருக்காக உழைப்பது போல காட்டிக் கொண்டு, தாங்களும் தங்களை உயர்த்திக் கொண்டனர். மார்ச் 2005ல் அப்படியொரு புகாரை அவரே அளித்தார். தனக்குக் கீழ் வேலை செய்துவந்த சுப்ரமணியம் என்ற ஆடிட்டர், சில ஆவணங்களை உபயோகித்து, ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக பச்சமுத்து புகார் கொடுத்தார்[5]. இதுவும் ஒரு உதாரணத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

© 15-02-2014


[2] தினத்தந்தி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்தொகுதிகளைபா.ஜனதாவிடம்கேட்டுள்ளோம்.இந்தியஜனநாயககட்சிதலைவர்பாரிவேந்தர்தகவல், பதிவு செய்த நாள் : Feb 11 | 03:45 am

[3]அரவிந்த கேசரிவாலும் இதே போலித்தனத்தைக் கடைபிடித்து வருகிறார். வருமானவரித்துறையிலிருந்து வந்துள்ள அவருக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவ்வாறு நடித்து வருகிறார்.

[4] According to the sources, the searches were also conducted in the premises of Vendhar Movies and TV news channel ‘Puthiya Thalaimurai’. One of the partners of Vendhar Movies is absconding since Tuesday. The recent hits of Vendhar Movies are Ethir Neechal and Thillu Mullu. The search led to confiscation of documents which indicated receipt of donations, inflated expenditure, diverting funds of trusts and evasion of income tax for the last few years. Jewels have been seized and kept in sealed conditions.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/it-raid-on-srm-group-yields-unaccounted-cash-of-rs-675-crore/article4830954.ece

[5] Auditor arrested on cheating charge, By Our Staff Reporter; Thursday, Mar 31, 2005http://www.hindu.com/2005/03/31/stories/2005033112710300.htmCHENNAI, MARCH 30. The police have arrested the auditor of Valliammal Society, which runs the SRM Groups of Institutions, following a complaint by the society’s chairman T.R. Pachamuthu.Mr. Pachamuthu told police that his auditor of over a decade, Subramaniam, had cheated him by misusing the institution’s property documents to get loans from private financiers of over Rs.2.5 crores. Speaking to The Hindu over phone, Mr. Pachaimuthu said the signatures in the promissory notes that Mr. Subramaniam had handed over to the financiers could either be forged or signed by him by mistake. “He has been managing the finances of my institutions for more than a decade and I trusted him. He might have tricked me into signing some of the papers,” he said.

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

ஒக்ரோபர் 19, 2013

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

Modi releasing the book of Arun Shourie

சென்னையில் மோடி எதிப்பு: சென்னைக்கு மோடி வருவதும், போவதும், முஸ்லிம் அமைப்புகள் மற்ற முகமூடிகள் அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், சென்னைவாசிகளுக்கு ஒன்றும் புதியதல்ல. அவர் வந்து கொண்டே இருக்கிறார், சென்று கொண்டே இருக்கிறார், கலாட்டா செய்பவர்கள், செய்து கொண்டே இருக்கிறார்கள். “துக்ளக்” விழாக்களுக்கு வந்தபோது, முஸ்லிம் பெண்கள் “கம்யூனிஸ” போர்வையில் கலந்து கொண்டது அந்நாட்களில் பேருந்துகளில் சென்றவர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் 18-10-2013 அன்று வந்தபோது, நிச்சயமாக பலருக்கு “மோடி சென்னைக்கு வந்திருக்கிறார்” என்று தெரியவந்துள்ளது, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகக் கண்டு கொள்ளாமல் இருந்த பொது மக்கள் கூட, “மோடி எதிர்ப்பு” என்பதில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை உணர வைப்பதாக உள்ளது. ஏதோ சில மாணவர்கள் உள்நோக்கத்தோடு எதிர்ப்பு தெரிவித்ததை வைத்துக் கொண்டு, “தி ஹிந்து” செய்திகளை பாரபட்சமாக வெளியிட்டுள்ளதை படித்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனெனில், ஆதரவாகக் கூட மாணவ-மாணவியர் இத்தகைய ஆர்பாட்டங்களை நடத்தலாம். ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் வன்முறைகளை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அமைதியாக இருக்கிறார்கள்.

Cho receiving a copy of the book released 2014

“மதவெறி” மோடியை எதிர்த்து “செக்யூலரிஸ” முகமூடிகளின் எதிர்ப்பு மனு:  தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மற்றும் உரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்”, என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்[1]. நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாக சில நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன[2].

Modi - Madras University visit 18-10-2014

கிரிமினல்வழக்கைசந்திக்கும்ஒருநபர்ஒருதனியார்அறக்கட்டளைக்காகபல்கலைக்கழகத்துக்குள்வந்துஉரையாற்றுவதுஏற்கத்தக்கதல்ல: முன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல[3]. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் [ Amina Wadud, an Islamic scholar] உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்[4].

Modi opposing radical Communist students

மோடி கூட்டம் நடைபெற்றதே இவையெல்லாம் நாடகங்கள் என்றாகி விட்டன: சட்டப்படி, நீதிப்படி என்று பேசுகின்ற நிலையில், அவையெல்லாம் எல்லோருக்கும் பொறுந்து என்பதை, இதே சித்தாந்திகள் மறந்து விடுகிறார்கள் அல்லது அறிந்தும் அறியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேலையில் சன்-நியூஸ் தொலைக் காட்சியில் விவாதம் நடந்து கொண்டிருப்பதில் கம்யூனிஸம், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சிந்தாதிகள் எவ்வாறு பிஜேபிக்கு எதிராக பொய்களை பேசிக் கொண்டு பிரச்சார ரீதியில் செய்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஊழலைப் பற்றி, பிஜேபி-அல்லாத கட்சிகளின் மத-சார்பற்ற நிலையைப் பற்றி உண்மை நிலையை மறைத்து, பிஜேபியை தொடர்ந்து மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, தங்களுக்கு தாங்களே “செக்யூலரிஸ” சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகத்தையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

Narendra Modi received at Chennai Airport.1சென்னையின் மீது “நமோவின் தாக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பாடுபட்டு எல்லா ஏற்பாடுகளையும், அமைப்புகளை செய்துள்ளனர். திருச்சியில் 26ம் தேதி நடக்கவிடருக்கும் பொது கூட்டத்திற்கு முன்னதாக இந்த வரவிருப்பதால், அதனை முழு அளவில் உபயோகித்துக் கொள்ள வேலை செய்துள்ளனர்[5]. அன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India’s China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார். “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வழக்கம் போல “கைது, டிராபிக் ஜாம், மக்களுக்கு தொந்தரவு” என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்துள்ளது[6]. “எதிர்ப்பு-சித்தாந்தம்” ரீதியில் கம்யூனிஸ சார்புள்ள ஊடகங்கள் இவ்வாறு, ஜனநாயகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நடுநிலையில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த முயற்சிகள் வெளிப்பட்டன. தமிழக அரசு மோடி விஜயம் தொடர்பாக பாதுகாப்பு உரிய முறையில் செய்துள்ளது[7]. ஏற்கெனவே, அத்வானி கொலை முயற்சி வழக்கில் பல தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதால், இந்த பாதுகாப்பு தேவையாகிறது என்று போலீசார் கூறியுள்ளனர்[8].

Narendra Modi received at Chennai Airport.2புரட்சிகர மாணவர்,  இளைஞர் முன்னணி,  இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முதலியோரின் எதிர்ப்பு: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்[9]. சுமார் 6,000 போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்[10].

Narendra Modi received at Chennai Airport.3பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்: அக்.18 வெள்ளிக்கிழமைஇன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் “இந்தியாவும் உலகமும்” என்ற தலைப்பில் சென்னையில் நானே பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி[11]. நானே பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில், பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவும், தொடர்ந்து நரேந்திர மோடியின் உரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Narendra Modi received at Chennai Airport.4மோடியின் விமர்சனம்: அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்[12].சென்னை விமான நிலையத்தில் மோடி பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தின் அலை நிலவுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கலவில்லை. காங். அல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர்,’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது[13]. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது[14]. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல், உபி.யில் தங்க புதையலை தோண்ட உத்தரவிடுகிறது மத்திய அரசு[15]. மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.,’ என்று கூறினார்[16].

Narendra Modi received at Chennai Airport.5தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய முறை: தீவிரவாதத்தைப் பொறுத்த வரைக்கும், இந்தியா தான் உலகில் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இப்பொழுதைய யுத்தமுறைகள் மாறியுள்ளதால், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு முறையும் மாற்றிக் கொள்ளப் படவேண்டும். சைபர்வெளியில் நிறைய “நெருப்பு சுவர்கள்” இருக்கின்றன. சைபர் உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு “நெருப்பு சுவர்கள்” தேவையில்லை, ஆனால், “மனித இதயங்கள்” தாம் தேவைப்படுகின்றன[17].

Narendra Modi received at Chennai Airport.6மோடியைகடவுள்அனுப்பிவைத்திருக்கிறார்: தற்போதைய சூழலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் அருண் ஷோரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் சோ ராமசாமி, மோடியை நமக்காக கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார். தற்போதைய தேர்தல் நரேந்திர மோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது- எங்களது 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டிருக்கிறார்.. எங்களிடத்தில் மிகுந்த அன்பை மோடி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் துக்ளக்கில் எழுதினால் அவர் உடனே எங்களுக்குப் போன் செய்து நன்றி தெரிவிப்பார் என்றார்.

அருண்ஷோரியின் உரை: இந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் அருண் ஷோரி, இது நரேந்திர மோடியில் இளைஞர் கல்வி முகாம். என்னுடைய புத்தகத்தை நரேந்திர மோடி வெளியிடுவதன் மூலம் என்னுடைய புத்தகம் அதிக விற்பனையாகும் என்பதை நான் அறிவேன். நரேந்திர மோடிதான் நமக்கு புதிய நம்பிக்கை.. புதிய பாதை.. நம்முன் உள்ள உடனடி பிரச்சனை பாகிஸ்தான்தான். ஆனால் அதை எதிர்கொள்ளலாம். சீனாதான் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்று கூறியதுடன் சீனா எப்படியெல்லாம் நமக்கு எதிராக இருக்கிறது என்று விவரித்தார்[18].

மோடிவிழாதடுக்கமனுக்கள்போடும்எதைக்காட்டுகிறது?: சென்னையில் மோடி எதிப்பு விசயமாக மனு தாக்கல் செய்தது போன்ற போக்கு மற்ற இடங்களில் காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நாளை பாஜக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள 127 விவசாயிகள் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விழாவிற்கு தடைவிதிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது[19].

© வேதபிரகாஷ்

19-10-2013


[8] The Crime Branch CID of the Tamil Nadu police has developed a computer-aided portrait of Abubakar Siddique, the alleged brain behind the plot to blow up the convoy of senior BJP leader L.K. Advani near Madurai in 2011. Since the police have only a very old photo of Siddique, investigators took the assistance of other suspects arrested in the case and developed his portrait from different angles, agency sources said. Besides the images of Siddique, other absconding accused persons wanted in extremist activities in the State were circulated to police personnel deployed at the venue, airport, railway stations, bus stands etc. Several teams of the Special Investigation Division of the CBCID have also been deployed as part of the security arrangements, the sources said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/security-blanket-over-chennai-for-modis-visit/article5244322.ece?ref=relatedNews

[9] Their protest was part of a series of agitations involving over 300 persons belonging to the Democratic Youth Federation of India(DYFI), Students Federation of India(SFI), All India Democratic Women’s Association(AIDWA), and Revolutionary Students Youth Federation(RSYF) at various locations in the city.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/modis-visit-to-chennai-faces-protest/article5247862.ece

[17] “Terrorism needs a special mention. No country has suffered more than India. It is central to foreign policy as it is driven from abroad,” he said. Modi also emphasised that modern warfare will be fought in the cyber world. “We need to have strong walls against it. Firewalls are not going to be enough. Walls made up of human hearts are going to be needed,” he said.

http://www.indianexpress.com/news/cant-allow-china-to-dominate-india-narendra-modi/1184413/

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)

மே 11, 2013

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)

ரெயில்வேதுறைமீது கண் வைக்கும் கட்சிகள்: ரெயில்வேதுறை எந்த அளவிற்கு லஞ்சம் மலிந்த துறையாக உள்ளது என்பதனை பவன் குமார் பன்சால் வெளிப்படுத்தி விட்டார். இதனால், முந்தைய ரெயில்வே அமைச்சர்கள் இவரை சபித்துக் கொண்டிருப்பர் என்பது திண்ணம். கட்சிகள் மாறி-மாறி இத்துறைக்கு வந்து கொள்ளையிட்டுள்ளதும் தெரிகிறது. ராம் விலாஸ் பாஷ்வன், நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ்[1], மம்தா பானர்ஜி[2], இப்படி பெயர் சொன்னாலே போது என்ற அளவிற்கு இருந்துள்ளார்கள்.

ஊழலில்திளைக்குரெயில்வேயும், பாதிக்கப்படும்மக்களும்: ஒரு கான்ட்ராக்ட், ஆர்டர், டெண்டர் கிடைக்கவேண்டுமானால், கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்றால், கொடுப்பவர் எந்த அளவிற்கு அந்த வேலையிலிருந்து சம்பாதிப்பார் என்பதும் வெளிப்படுகிறது. முடிவு தரக்குறைவான பொருட்கள், சேவைகள் தாம் அந்த லஞ்ச-ஊழல் பேர்வழிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் முடிவாக பாதிக்கப் படுவது, நுகர்வோர்கள் தாம் – அதாவது கோடிக்கணக்கில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள்தாம்[3].

சோனியாஏன்மன்மோஹன்வீட்டிற்குச்செல்லவேண்டும்?: ஊடகங்கள் தான் தான் தலைவி – பாஸ் என்று மெய்பித்து விட்டார்[4], சோனியா சொல்கிறார்-மன்மோஹன் செய்கிறார்[5] என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருந்தன. ஆனால், சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்றார் என்பதில் தான் நாடகம் வெளிப்படுகிறது. “வா” என்றால், வந்து கும்பிடு போடும் மன்மோஹனுக்கு அப்படியென்ன முக்கியத்துவம், தைடரியம் அல்லது வேறேதோ ஒன்று வந்து விட்டது? பெரிய பதவிக்கான நியமனம் பி.எம்.ஒ.அலுவலகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதனால், பிரதம மந்திரியின் தொடர்பும் உள்ளது, அதாவது, பொம்மையை ஆட்டிவைக்கும் சோனியாவின் பங்குதான் முடிவாக உள்ளது.

ஊடகங்களின்மழுப்பல்பன்சால்பதவிநீக்கம்செய்யப்பட்டார்என்றது, பிறகுஅறிவித்ததுராஜினாமா!: ஊடகங்களின் மழுப்பல் – பன்சால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றன[6], பிறகு அறிவித்தது ராஜினாமா என்றன. சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்ற சில நிமிடங்களில் ஊழல் மந்திரி பன்சால் தூக்கப்பட்டார்[7], கோணியில் போடப்பட்டார்[8], தூக்கியெறியப்பட்டார், என்றெல்லாம் ஆங்கிலத்தில் வர்ணித்துக் கொண்டிருந்தன. ஆனால், பிறகோ அல்லது அதே செய்தியிலோ, பன்சால் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யத் தூண்டப்பட்டார், செய்து விட்டார் என்று கூட்டிச் சொல்லின[9].

பதவிநீக்கம்செய்தபிறகு, அலுவகத்திற்குவந்து, கோப்புகளில்கையெழுத்துப்போட்டுசென்றாராம்: பதவி நீக்கம் செய்தபிறகு, அலுவகத்திற்கு வந்து, கோப்புகளில் கையெழுத்துப் போட்டு சென்றாராம்! அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தாராம். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்தாராம், பன்சால் வெள்ளிக்கிழமையன்று திடீரென வந்தாராம், பரபரப்பு ஏற்பட்டதாம், அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டாராம், பைசல் செய்தாராம், பின்னர் பதவியை ராஜினாமா செய்தாராம்[10]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[11]. அப்படியென்றால், முந்தய நாட்கள் தேதியிட்டு கையெழுத்துப் போட்டார் என்றாகிறது. பிறகு, இதெல்லாம், சொல்லிவைத்து தானே அரங்கேற்றம் செய்கிறார்கள்.

லஞ்சத்தைவிதைத்துஅறுவடைசெய்வதில்கில்லாடியானகுடும்பம்: பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலியவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து அந்த பணத்தை வைத்துக் கொண்டு கம்பெனிகளை உருவாக்கி, அதற்கும், கடன் என்ற பெயரில், வங்கிகளினின்று பணம் வாங்கி, அப்பணத்தை மறுபடியும் மறுமகன் மூலமாக பன்சாலுக்கே கொடுக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, லஞ்சத்தை விதைத்து லஞ்சத்தை அறுவடை செய்து, லஞ்சத்தை முதலீட்டாக்கி, லஞ்சத்தை முதலீட்டாக மாற்றி, லஞ்சத்தை லாபமாக பெறும் கில்லாடியான குடும்பமாக பன்சால் குடும்பம் இருக்கிறது. அது கீழ்கண்ட கம்பெனிகளை வைத்துக் கொண்டு, லஞ்சப்பணம் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தது.

  1. தியோன் பார்மேசுகல்ஸ் லிமிடெட் (Theon Pharmaceuticals Limited),
  2. ஐவா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் (Iva Healthcare Private Limited),
  3. சிசிஸ் பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட் (Isis Packaging Pvt Ltd) மற்றும்
  4. பன்சி ரௌனக் எனர்ஜி குரூப் லிமிடெட் (Bansi Raunaq Energy group Limited).

நிலமாகக்கொடுக்கப்படும் / பெறப்படும்லஞ்சம்: குறிப்பிட்ட நபர், தனது 21.26 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 30,000/- தருவதாக ஒப்பொக்கொண்டு, குத்தகைக்கு என்று மித்தன் லால் சிங்க்லா (விஜய்சிங்க்லாவின் தந்தை) மற்றும் இத்ர உறவினர்களுக்கு எழுதி வைத்தார். ஆனால், பத்திரப்பதிவு செய்யப்பட்டபோது, “33 வருடங்கள்” என்பது “99 வருடங்கள்” என்று மாற்றப்பட்டிருந்தது கண்டு திகைத்துப் போய் விட்டார். வெளியே சொல்ல பயந்ததால், யாரோ ஒருவர் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளார். அதாவது, “33 வருடங்கள்” என்பதை “99 வருடங்கள்” என்று ஆவணங்களில் திருத்தியிருக்கிறார்கள் என்பது திண்ணம்[12].

சோனியா, மன்மோஹன்சிங், ஊழல்: சோனியாதான் தலைவி-பாஸ், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ஊழலில் திளைத்தும், சந்தோஷமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் என்றால், அவரது திறமை அலாதியானது தான். மன்மோஹனை கைப்பாவையாக வைத்து ஆட்டி வைக்கும் போது, கால்வருடி அடிமையாக செயல்படும் போது, அவர்தான் சோனியா வீட்டிற்கு வந்து சலாம் போட்டிருப்பார். ஆனால், ஊழலையும் “கார்பரேட்” பாணியில் லாவகமாக செய்து வரும் அவர், தனக்கு நல்ல பெயர் உண்டாக்கிக் கொள்ளவே அப்படி இடம் மாறி சென்று நாடகம் ஆடியுள்ளார். இது 2ஜி, 3ஜி போன்ற ஊழல்களையும் மிஞ்சியது, ஆட்சிக்கே உலை வைப்பது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அரசாங்க்சத்தில் இதைப் பற்றிய ஆவணங்கள் ஏகப்பட்டர்து இருக்கும். அனைத்தையும் ஒழித்து புனிதராக வேண்டும் என்றால், சிறிது காலம் தேவைப்படும். தமது ஆட்களை வைத்துக் கொண்டே சுத்தப்படுத்துவது சுலபம். அதைத்தான் சோனியா செய்து வருகிறார். சோனியாவின் நாடகம்[13] பலே, பலே!

© வேதபிரகாஷ்

11-05-2013


[1] மாட்டுத்தீவனத்திலேயே கோடிகளை அள்ளிய, இவருக்கு காங்கிரஸ் இப்பதவியை அளித்தது. கேட்க வேண்டுமா, பீகாரிகள் தேர்வு எழுத இந்தியா முழுவதும் ரெயில்களில் சென்று வர பாஸ் கொடுத்தாராம், இன்று அரசு அலுவலகங்களில் பீகாரிகள் பெரும்பாலும் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

[2] மம்தாவின் ஊழல் மேற்கு வங்காள சிட்டுக் கம்பெனி ஊழலில் நாறுகிறது. அப்பாவி மக்களைக் கொன்று வருகிறது, அதாவது, பணம் போட்ட ஏழை மக்கள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். இருப்பினும், மம்தாவிற்கு இரக்கமே இல்லை என்ற விதத்தில் நடந்து கொண்டு வருகிறார்.

[3] “அந்நியன்” படத்தில் வர்வது போன்று, எத்தனை “அம்பிகள்” வந்தாலும், இந்த ஊழல் கொம்பன்களை ஒன்றும் செய்யமுடியாது, இந்த விஷயத்தில் தான், சோனியா அனைவரையும் மிஞ்சிவிட்டார் எனலாம்.

[6] PK Bansal sacked after TIMES NOW expose10 May 2013, 2040 hrs IST, TIMES NOW — Union Railway Minister Pawan Kumar Bansal’s nephew arrest – was just the tip of the iceberg – TIMES NOW’s investigation team, knew there was much more to Railgate – slowly but steadily our investigations led us to Bansal’s doorstep. First we – exposed the meteoric rise of Bansal family fortunes along with his political ascent. Then – after thorough research and painstaking investigation – we raised a clear case of conflict of interest against the Railway Minister. And what seems to have sealed Bansal’s fate, is his first, clear, direct link to Railgate exposed first on TIME NOW . By Friday morning – TIMES NOW’s investigation team laying its hands on the critical details of super explosive tapes – which contained sensational details of Minister’s direct link. And within minutes of TIMES NOW’s expose, Sonia Gandhi heading towards Prime Minister’s residence – the decision was conveyed – Bansal had to go.

http://www.timesnow.tv/INDIA/PK-Bansal-sacked-after-TIMES-NOW-expose/videoshow/4427166.cms

[9] Railway Minister Pawan Kumar Bansal and Law Minister Ashwani Kumar were on Friday night forced to resign by the Congress and the Prime Minister as the government’s image continued to take a severe battering over allegations of corruption and interference with graft probe.

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்!

மே 9, 2013

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

ஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].

ஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].

ஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].

ஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].

பெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].

இந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].

பிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா?

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்?

“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.

ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.

© வேதபிரகாஷ்

09-05-2013


தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

மே 6, 2013

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.

கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன.  கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்து இயக்கங்களில்  ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும் பிளவு பட்டுள்ளன. இந்த வேலையை திமுக மற்றும் அதிமுக கட்சிகளே செய்துள்ளன. இதனால், சில இந்து இயக்கங்கள், இந்து போர்வையில் செக்யூலரிஸ பாணியில் வேலை செய்து வருகின்றன.  குறிப்பிட்ட விஷயங்களில் சும்மா இருந்துவிடலாம், அல்லது கருத்தைக் கூட வெளியிடாமல் இருக்கலாம், ஆனால், ஊடகங்களின் ஆதரவு, விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காக, கொள்கையை விடுத்து, இந்து நலன்கள் பாதிக்கும் முறையில் நடந்து கொள்கிறார்கள். ஆட்சி மாறும் போது, அத்தகைய திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள், குறிப்பிட்ட கோணத்திலேயே வேலை செய்து வருகின்றன.

முஸ்லீம் இயக்கங்கள் பிரிந்துள்ளவை போன்று இருந்தாலும் இஸ்லாமில் ஒன்றாக இருக்கின்றன: முஸ்லீம் இயக்கங்களும் திராவிடக் கட்சிகளினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறாக தோன்றினாலும், தங்களது மதநலன்களை விட்டுக் கொடுக்காமல் வேலை செய்து, சாதித்து வருகின்றார்கள். இணைதளங்களில், தனிப்பட்ட முறையில், மண்டபங்களில் எதிர்த்துப் பேசி, அறிக்கைகள் விட்டுக் கொண்டு எதிர்கள் போலிருப்பார்களே தவிர, இஸ்லாம் என்று வரும்போது, ஒன்றாகத்தான் செயல்படுகின்றனர். இதை திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள் புரிந்து கொள்வதில்லை.

ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது: தமிழ்நாடு, கர்நாடகாவில் நடக்கும் நிகழ்சிகளைக் கூர்ந்து கவனித்தால், பிஜேபிக்கு எதிராக நடத்தப் படும் செயல்கள், கங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதைக் காணலாம். மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதா முதலமைச்சாரக உள்ளார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் பேசியும், நடந்து கொண்டும் வருகின்றனர். ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இல்லாத பட்சத்தில் அதிமுக வரவேண்டும் என்ற ஆசை, அதே நேரத்தில் பிஜேபி கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்ற தீவிரம். இதில் இந்து அமைப்பினரைத் தாக்கினால், ஜெயலலிதாவின் மீது பிஜேபிக்கு கோபம் வரும், கர்நாடகா-தமிழகம் இணைப்பை ஏற்படுத்தினால், மத்தியிலிருந்தும் அழுத்தம் வரும், அதே நேரத்தில் கர்நாடக தேர்தலில், பிஜேபியை தூக்கி விடலாம் என்ற திட்டத்தில் செயல்படுவது போலத்தான் தெரிகிறது. மேலும், குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், செய்த குற்றத்தை மறுபடியும் செய்யும் போக்கு, பல இடங்களில் இருப்பது போல அலிபி உண்டாக்கும் தந்திரம் முதலியவை இவற்றை எடுத்துக் காட்டுகின்றன. ஆக ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது என்பது தெளிவாகிறது.

கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்: கர்நாடகத்தில் மதப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளாமல், காங்கிரஸ் ஜாதிப் பிரசினையை எடுத்துக் கொண்டு விளையாடி உள்ளது. இதனால், ஜெயலலிதா அமைதியாக இருக்கிறார். எடியூரப்பாவின் நண்பரான கருணாநிதியும் இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், மத்திய அமைச்சர்கள் இதில் மிக்க கவனமாக செயல்படுவதை காணலாம். ஆகவே, ஒருவேளை கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்ற யேஷ்யத்தில் காங்கிரஸ் உள்ளது. எடியூரப்பாவை சரி கட்டினது மாதிரி, பெங்களூரில் நடக்கும் வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்தால், பதிலுக்கு கூடணிக்கு வந்து விடலாம் என்ற கணக்கிலும் காங்கிரஸ் உள்ளது.

© வேதபிரகாஷ்

06-05-2013

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)

மே 4, 2013

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)

 

ராஜிவ்காந்திதூண்டிவிட்டகலவரம்: அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[1]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[2]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[3]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[4].

 

29 வருடம்கழித்துநீதிமன்றம்சஜ்ஜன்குமாரைவிடிவித்தது: 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

 

சோனியாவீடுமுன்புகொடும்பாவிஎரிப்பு: இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும் சோனியா காந்தியின் இல்லத்தை முற்றுகையிட மான்சிங் சாலை அருகே தில்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சீக்கியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்[6]. அதையொட்டி அக்பர் சாலை-மான்சிங் சாலை சந்திப்பில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், போலீஸாரை தள்ளிவிட்டு, தடுப்புகள் மீது ஏறி குதித்து அக்பர் சாலையில் பலர் நுழைந்தனர். அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனங்களில் ஏறிய சிலர் சோனியா ஒழிக, காங்கிரஸ் அரசு ஒழிக என்று கோஷம் எழுப்பினர். சோனியா வீட்டு முன்பாக சஜ்ஜன் குமாரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்[7]. அதனால், சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், போலீஸ் உயரதிகாரிகள் சீக்கிய குருத்வாரா பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். அதன் பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

உள்துறைஅமைச்சர்வீட்டின்முன்பும்ஆர்பாட்டம்: இதற்கிடையே, ஒரு பிரிவு சீக்கியர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே இல்லம் அமைந்துள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். இதை அறிந்த போலீஸார், அந்தச் சாலையை இணைக்கும் அனைத்துச் சந்திப்புகளிலும் தடுப்புகளை அமைத்தனர். கிருஷ்ண மேனன் மார்கில்தான் முன்னால் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் இல்லம் அமைந்துள்ளது. அதனால், அப்பகுதி வழியாக நாடாளுமன்றச் சாலை, இந்தியா கேட் செல்ல வேண்டிய வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

 

பிந்தரன்வாலேமரணஅறிவிப்பு 25 ஆண்டாகியும்வெளியாகவில்லை: பொற்கோவிலில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக ராணுவம் மேற்கொண்ட “ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையின் போது, பிந்தரன்வாலே கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தரப்பிலோ, அதிகாரப்பூர்வமாக, 25 ஆண்டுக்கு பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை[8]. அப்போதைய டம்டாமி தக்சல் தலைவராக இருந்த பிந்தரன்வாலேயின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தும் கூட, அவரது மரணம் குறித்து அரசு பகிங்கர அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், பொற்கோவில் நடவடிக்கையில் பிந்தரன்வாலே தப்பித்து, பாகிஸ்தான் சென்றுவிட்டதாக வதந்திகள் கூட உலவின.

 

பிந்தரன்வாலேஇறக்கவில்லை: சீக்கிய மதத்தவர்களில் ஒரு பிரிவினர் மத்தியில், குறிப்பாக கிராமப்புரத்தை சேர்ந்தவர்கள் மத்தியில், பிந்தரன்வாலே இன்னும் இறக்கவில்லை என்றும், அவர் தகுந்த நேரத்தில் திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை நிலவியது. பிந்தரன்வாலே மரணத்தை அவர் தலைமை வகித்த தக்சல் அமைப்பும் கூட, அவரது மரணத்தை அங்கீகரிக்கவில்லை. இதன் புதிய தலைவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்வரை நியமிக்கப்படாமலேயே இருந்தார்.

 

பிந்தரன்வாலேஇறந்ததைஏற்றுக்கொண்டபப்பர்கல்சா:  பிந்தரன்வாலே இறந்ததை ஏற்றுக் கொண்ட ஒரே அமைப்பு பப்பர் கல்சா அமைப்பு மட்டுமே. 1989ம் ஆண்டு இதை அங்கீகரித்த இந்த அமைப்பு, பிந்தரன்வாலேவை வீரதியாகியாக அறிவிக்கும்படி வலியுறுத்தியது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பிந்தரன்வாலே, 1984ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல், ஜூன் 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் போலீஸ் குழுவினரால், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் மருத்துவக் கல்லூரி அதிகாரிகளிடம், ராம்பாக் போலீஸ் நிலைய துணை எஸ்.ஐ., மூலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கி குண்டுகளின் காயம் மற்றும் அதிர்ச்சி காரணமாக பிந்தரன்வாலே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் உள்ள அனைத்து 14 காயங்களும் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அது தவிர விலா எலும்புகளில் இரண்டு உடைந்திருந்தன. பிந்தரன்வாலேயின் உடல், அவரது கூட்டாளியின் உடலுடன், ஜூன் 8ம் தேதி அமிர்தசரசில் குருதுவாரா சகீதா தகன மைதானத்தில் எரிக்கப்பட்டது. 203 பேரின் சாம்பல்களுடன், பிந்தரன்வாலேயின் சாம்பலும், ரோபர் மாவட்டத்தில் உள்ள கிரட்பூர் சாகிப்புக்கு எடுத்து செல்லப்பட்டு, சட்லஜ் நதியில், அமிர்தசரஸ் ஜில்லா பரிஷத் செயலர், மற்றும் நிர்வாகி மாஸ்டிரேட் ஆகியோரால் கலக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையின்போது, பிந்தரன் வாலே இறந்து போனதாக அவரது குடும்பத்தினர் கூட எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எஸ்.ஜி.பி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, பிந்தரன்வாலேயின் மரண சான்றிதழ் கோரி, அவரது மகன் இஷார் சிங், மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.

 

சோனியாவின்அரசியல் நாடகம் ஆபத்தானது: சீக்கியர்கள் இப்படி தன் வீட்டின் முன்பாக ஆர்பாட்டம் செய்யும் வேளையில், சோனியா தந்திரமாக கர்நாடகத்திற்கு வந்து, தேர்தல் கூட்டங்களில், பிஜேபியைக் கடுமைகயாகப் பேசி வருகிறார். புதன்கிழமை அன்று ரெய்ச்சூரில் பேசினார்[9]. கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், வரும், 23ம் தேதி முதல், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.கர்நாடகாவில், அடுத்த மாதம், 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம், ஏற்கனவே, சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. வரும், 25ம் தேதி, சிக்மகளூர் மற்றும் மங்களூரிலும்; ஏப்ரல், 30ல், குல்பர்க்கா மற்றும் பெல்காமிலும்; மே, 2ம் தேதி, மைசூரு மற்றும் பெங்களூருவிலும், சோனியாவின் பிரசாரம் செய்கிறார்.வரும், 23ம் தேதி, ராய்ச்சூர் மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களிலும், வரும், 26ல், கோலார், தும்கூர் மற்றும் ஹாவேரி மாவட்டங்களிலும், மாண்டியா, ஹசன் மற்றும் ஷிமோகா மாவட்டங்களில், மே, 1ம் தேதியும், ராகுல் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், 29ம் தேதி, ஹூப்ளி மற்றும் பெங்களூரில் பிரசாரம் செய்கிறார்[10]. பெங்களூரு பேலஸ் மைதானத்தில் சோனியா 02-05-2013 அன்று பேசியபோது, நிறைய நாற்காலிகள் காலியாக இருந்தன[11].

 

வேதபிரகாஷ்

04-05-2013


[1]. According to the CBI the police were co-conspirators as the officials did not register cases and did not pick up dead bodies from the streets. The CBI referred to a speech senior Congress leader Sajjan Kumar had made in Delhi’s Raj Nagar where he incited the mob and said that not a single Sikh should survive and those sheltering Sikhs should be set ablaze. The CBI also pointed out that police control room records don’t have details of any of the major incidents of violence. In fact the police asked those residing in the Raj Nagar Gurdwara to surrender their weapons and hours later mobs came and attacked them. No damage to houses other than those of Sikhs were reported from the area.

[2] While there have been documented reports of voter-lists and school registration forms being distributed amongst the rampaging hooligans to specifically identify the Sikh families and destroy them, it is also a proven fact that during the same period, at a massive rally in Delhi, while reacting to the killings, Rajiv Gandhi had stated that ‘Once a mighty tree falls, it is only natural that the earth around it shakes‘.

[4] The killing of people in the Delhi Cantonment area during the 1984 anti-Sikh riots was the result of a well executed conspiracy, the Central Bureau of Investigation (CBI) said on Monday as the agency finished its arguments in the 1984 anti-Sikh riots in the Delhi Cantonment area case. The CBI said that people belonging only to a certain community were targeted with the pattern and scale of operation indicating that the action wasn’t a spontaneous reaction but a well organised operation, which had the backing of the police and patronage of the system.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

ஏப்ரல் 24, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

Bangalore blast - graphical figure

அமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர்.  ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:

 

PM condemns Boston bombings

The Prime Minister, Dr. Manmohan Singh condemned the Boston terrorist attack and expressed his solidarity with the American people in the struggle against terrorism. In a message to President Obama the Prime Minister assured all help in the investigations.

The text of PM’s message is as follows:

“I am deeply shocked and saddened by the outrageous terrorist attack in Boston yesterday. This senseless and cowardly act of violence has struck a city that has long stood as the symbol of openness, learning, innovation and enterprise.

The people of india join me in condemning the attack in the strongest terms. We stand in solidarity and sympathy with the bereaved families, the injured and the people of the United States.

The attack serves as a tragic reminder of the evil of terrorism that still threatens our nations and lurks in our cities. At the same time, it redoubles our resolve to remain unrelenting in our efforts to defeat terrorism and to defend and uphold the values that define our nations.

Mr. President, in keeping with the excellent cooperation between India and the United States to combat terrorism, we offer you our full support for the investigations into the attack.

 

17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:

PM condoles the loss of lives in the earthquake in Pakistan

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Pakistan.

Dr. Manmohan Singh sent his condolence message to President Zardari of Pakistan.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“I was deeply saddened to learn of the damage and loss of life caused in Pakistan following the earthquake that struck the eastern region of Iran yesterday. While the reported magnitude of the earthquake is large, it is our sincere hope that its impact has been minimal. Our thoughts and prayers are with all those who have lost their dear ones, sustained injuries or suffered damage to their property. I am confident that under your leadership, your government and the people of Pakistan will come together to respond quickly and effectively to the natural disaster and help people rebuild their lives.”

 

 

அதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:

PM condoles the loss of lives in Iran earthquake

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Iran.

Dr. Manmohan Singh in a message, to President Ahmadinejad of Iran, offered all possible assistance to Iran in the relief efforts.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“It is with deep sorrow that I learnt about the earthquake that struck the eastern region of Iran today.

The people of India join me in conveying our deepest condolences for the the loss of life, injury and destruction of property as a result of this natural disaster. Our thoughts and prayers are with the people of Iran. I am confident that with the support of your government, the people of Iran will respond to this tragedy with their characteristic resolve and resilience and will succeed in restoring normalcy quickly.

We are prepared to provide all assistance within our means to support your efforts to provide relief to the affected people.”

 

அடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:

 

PM greets people on the occasion of Ram Navami

The Prime Minister, Dr. Manmohan Singh, has greeted the people on the auspicious occasion of Ram Navami.

In a message, the Prime Minister described the festival as a celebration of Lord Ram’s life of righteousness and truth.

We should  renew our commitment to these ideals on this occassion, the Prime Minister added.
 

 

ஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.

Manmohan-tweets-not-for-India

இதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன்? மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.

Rahul in party mood during Mumbai attack2

வருங்காலபிரதமமந்திரிராஹுல்என்னசெய்துகொண்டிருந்தார்?: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

Rahul in party mood during Mumbai attack

எப்.பி..யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில்  சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும்.  எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா?

ied-cutout01

மத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

IED - cycle bombs placed - locations

மத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12].  இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.

manmohan-singh-scam

சோனியாஏன்காங்கிரஸ்கரர்களைபொம்மைகளாகவைத்திருக்கிறார்?: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.

 

வேதபிரகாஷ்

23-04-2013


[7] During and after 26/11, Rahul Gandhi took an active role in the efforts of the government to contain the fallout of one of India’s worst-ever terror attacks, said Milind Deora.

[10] Chiding the BJP government for its alleged role in illegal export of iron ore, Gandhi said, “your iron ore is being sold to China and they (BJP government) are earning crores of Rupees.” ….”But this (resource) is yours. Steel factories should be established here. It is steel which should go to China. Instead they are looting this (iron ore) to sit in Vidhan Sabha”.

http://timesofindia.indiatimes.com/india/BJP-has-looted-Karnataka-Rahul-Gandhi/articleshow/19694585.cms

[11] Noting that the Ammonium Nitrate Rules 2012 has been put in place to check its illegal trafficking and stockpiling, Union Home Minister Sushil Kumar Shinde told the Lok Sabha that misuse of the chemical could not be stopped, unless the states law-enforcement officials kept track of it more effectively.