"செக்யூலரிஸம்" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..
ஜே.எஸ்.எஸ்பப்ளிக்ஸ்கூலுக்குபள்ளிக்கல்வித்துறைமூலம்நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.
அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.
சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.
சித்தராமையா, கருணாநிதிஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.
மதுரையில்உள்ளமக்கள்சமூகநீதிபேரவைசெங்கோல்கொடுக்கதீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].
மதச்சார்பற்றஆட்சியைநடத்துவதால்மதசார்புள்ளசின்னமானசெங்கோலைவாங்கமுடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல்என்பதுஅரசமரபைபோற்றும்ஒன்று. அதனாலேயேபாஜக, நாடாளுமன்றத்தில்செங்கோல்வைப்பதைநாங்கள்எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].
10 கிலோஎடையுள்ளஇந்தபெரியார்தலை, முகம், உருவம்பொறிந்த, செங்கோலையார்செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
அம்பேத்கர்–பெரியார்–திப்புசுல்தான்சின்னங்கள்செக்யூலார்ஆகாது, செக்யூலரிஸம்என்றும்சொல்லிக்கொள்ளமுடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஊடகக்காரர்கள்ஊதிவிடும்செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார்சிலைபொறித்தசெங்கோலைவாங்கமறுத்தசித்தராமையா – காரணம்என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST), Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).
[7] தமிழ்.வெப்துனியா, பெரியார்முகம்பொரித்தசெங்கோலைவாங்கமறுத்தமுதலமைச்சர்.. என்னகாரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).
கருத்துசுதந்திரம்எப்படிமற்றமதவிசயங்களில்சுருங்கிவிடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே? நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –
ஷா பானு வழக்கு,
சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,
சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,
உஸைன் சித்திரங்கள்,
பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,
தேசிய கீதம் பாடுவது,
அதற்கு மரியாதை கொடுப்பது,
மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்)
என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
Marx, Lenin, Mao- trinity of Communism
சித்தாந்தங்களை, சித்தாந்தரீதியில்எதிர்ப்பதுஎப்படி?: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:
“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.
நாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்!
“பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன!
குடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.
பொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது!
நாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்!
சமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்?
என் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா?
சம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.
வகுப்புகள்போன்றுநடத்திபயிற்சிஅளிக்கவேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.
கடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
அதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.
குறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.
ஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.
சித்தாந்தம், சித்தாந்திகளைமுறையாகஎதிர்கொள்வதுஎப்படி?: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.
சூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?
திராவிடகழகங்களும், சுவாமிவிவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன?” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..
திக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது?: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2]. ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.
“விவேகானந்தரின் 150 ஆம்ஆண்டுஎன்றபோர்வையில்தமிழ்நாட்டில்உள்ளபார்ப்பனசக்திகள், சங்கப்பரிவார்க்கூட்டத்தினர்ஒருதிட்டமிட்டவேலையில்இறங்கியுள்ளனர். சென்னையில்உள்ளஅனைத்துக்கல்விநிறுவனங்களுக்கும்விவேகானந்தர்ரதம்செல்லுகிறதாம் – அரசின்அனுமதியோடு; இதுஒருதவறானமுன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].
“சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது?”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது! பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.
இதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.
விவேகானந்தர் – அவர்இறைச்சிஉணவுஅருந்தக்கூடியவர், புகைபிடிக்கக்கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தைஎடுக்கப்போவதில்லையே, ஏன்இவ்வளவுநேரம்பேசஇடம்கொடுத்தாய்என்றுகேட்பீர்கள். விவேகானந்தர்பற்றிநம்தலைவர்கள்எல்லாம்பேசிக்கேட்கவேண்டும்என்பதற்காகத்தான். விவேகானந்தரைப்பற்றிபேசிரொம்பநாளாகிவிட்டதுஎன்பதற்காகவும், மூடநம்பிக்கைகளைச்சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர்இறைச்சிஉணவுஅருந்தக்கூடியவர், புகைபிடிக்கக்கூடியவர். இவையெல்லாம்மனம்சுத்தமாகஇருந்தால்தன்னைஒன்றும்செய்யாதுஎன்றுஎண்ணிசீர்திருத்தநோக்கங்களோடுசெயல்பட்டவர். அவரதுபெயரால்உள்ளமண்டபத்தைஇடிக்கப்போகிறோம்என்றுசிலர்எழுதியிருக்கிறார்கள். இடிக்கக்கூடியஅளவுஅதுவலுவிழந்தமண்டபமா? இல்லை. அதையாரும்இடிக்கவிரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப்பக்கம்திரும்பவும்இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].
“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்?: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.
Swami Vivekananda is a “Paraiah” – Shudra from Kayasth community. When he became a Sanyasi, some social reformers challenged him as to how a Shudra could become a Sanyasi. He gave them suitable reply with supporting evidences from scriptures proving that Shudras were nothing but Kshatriyas: “I am not all hurt if they call me a Shudra. It will be a little reparation for the tyranny of my ancestors over the poor. If I am a Paraiah, I will be more glad, for I am the disciple of a man, who – the Brahmn of Brahmins – wanted to cleanse the house of a Paraiah”[9].
சூத்திரன் யார்? – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.
He started Sri Ramakrishna Mission only to liberate oppressed and suppressed: “From the Math will go out men of character who will deluge the world with spirituality…………The Shudra caste will exist no longer – their work being done by machinery”[10]. He defines “Shurahood” as the status of people “engaged in serving another for pay”. Then, perhaps most of the higher castes are “Shudras” and the real shudras are not, as they work for themselves and not for others to get any pay.
திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல!
சாமியார்களைப்பார்த்தால், எல்லாமே, காவிகட்டியநாத்திக, கிருத்துவஅல்லதுகிருத்துவர்களுடன்உடன்போன / போகும்சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],
“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.
குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது!
ஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்!
சதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்!
போதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது!
அதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது!
கருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.
மொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”
எம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:
Yesterday (27-12-2008), there had been a VHS- 2008 conference at Hotel Ashoka, wherein, one of the ‘controversial samiyars’ appeared to have participated.
He was questioned by other delegates and R.B.V.S. Manian, who inagurated the Conference, condemned the duplicity of Mutukumaraswamy Thampiran (he had not attended this conference, but was there with the “controversial one” in another “Hindu conference” held on 25-12-2008 at Thevar Mantapam, Chennai), who hobnobbing with the mylapore bishop (who has been aiding and abetting the thomas frauds) and other christians.
It is ironical how such duplicities and christian agents are infiltrating other conferences surreptiously, that too, masquerading as ‘Hindu samiyars’!
The above report only proves how the masqueraders have been roaming in India cheating Hindus.
The Sufis had / have been doing such nonsense and therefore, Hindus should expose such masquerades and cheats!
They also asdopt / adapt suffixes like “IYER”, and thus in Tamilnadu, we have ‘many christian iyers’. Not only the bishops / catholic bishops are addressed as ‘iyer’, but also folling pastors / prechers who roam with such names e.g, Mani Iyer of Annanagar. He has been fooling in spite of being a christian. His booklet was distributed by the Deivanayagam before the Kapakleswarar Temple. Though, a complaint has been lodged bty Ramagopalan, no action seems to have been taken.
தமிழர்சமயம்மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர்! ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.
நான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:
Muthukumaraswamy Thambiran (7.54 to 8.12): (He was the only person who talked sitting). First recited several verses from Tevaram, Tiruvacakam etc., and then compared certain practices of Tamils and Jews. Abraham’s native place is mentioned as “Ur” and there is no other language other than Tamil gives the meaning “the (native) place” / “the place (of belonging)” and therefore Abraham was a Tamil / Dravidian[6][46]. Take the practice of Muslims going to Haj wearing unstitched white cloths worshipping Ka’ba, and it is a Tamil practice. Only there, Muslim women are taken by men and they can worship. We know that “bible” is a European book, but it is actually mentioned as an “oriental book”. In fact, Buddha[7][47], Mahavira and other religious heads were also “Tamil-not-knowing Dravidians” only. The belief in previous birth and karma are known to Jesus, as he asks his disciples pointing a blind as to whether his blindness had been due to his sins committed this in this life or earlier birth. The westerners or Christians may not be knowing the meaning of Jesus’ words, “Take the bed and go away”, but Tamils know. As Jesus knew the Tamil practice, he said so. Only Tamils could take their bed and walk away, as they used to use mat made of reeds for sleeping and it could be folded and taken away after sleep. As Tamils follow different types of “seclusions (Tittugal), Jews also follow: the usage of Vibuthi; ear-boring practice; etc. It is believed that Tirumular lived for 3000 years to compose his work – each song for a year. This need not be thought as impossible. If thousands of names and numbers could be stored in hand, none would have believed say 10 years back, but now in a every hand, cell phone is there, as a proof. Therefore, people have to believe (that Tirumular lived for 3000 years). Adam and Eve are nothing but Adhan and Avvai. Similarly, “Pitha-Sudhan-Parisuddha Avi” (Father, Son and Spirit) are nothing but “Shiva-Parvatrhi-Murugan”. Thus, there have been many similarities between Jews and Tamils, and Tamils and Christians.
24 ஜனவரி 2009 அன்றுநடந்த “உலகத்தமிழ்ச்சமயக்கோட்பாடுகள்” மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா? அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே? “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள்? இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை? “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்!
உறுதிகொண்டபணிதொடர்ந்துநடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.
[6][46] His full speech has been rhetoric only. Though, the audience was laughing, it is not known as to whether they accept his rhetoric or ridicule him.
[7][47] We do not know how the Buddhists would respond to it, as they have been very fond of “Arya” title very often as reflected in the Pali scriptures, inscriptions etc.
குறிப்பு: இந்துக்கள் தங்களை சுயநிர்ணயம் செய்துகொள்ளவும்,
இறையியல் நுணுக்கங்களை அறிந்து செய்ல்படவும்,
சித்தாந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நலம்விரும்பிகளை அடையாளங்கொள்ளவும், மற்றும்
எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும்,
சுய-சோதிப்பு முறையில் வெளிப்படுத்தும் எண்ணங்கள் இவை.
திருக்குறள்என்றுவைத்துக்கொண்டு, பிஜேபிக்காரர்கள்செய்யும்கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்று ஒன்று திடீரென்று முளைத்துள்ளது[1]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[2]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[3]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[4], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[5]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.
திராவிடத்துவம், இந்துத்துவம், திராவிடத்துவஇந்துத்துவம்அல்லதுஇந்துத்துவதிராவிடத்துவம்: திருக்குறள் எல்லோருக்கும் சொந்தம் என்றெல்லாம் கொண்டாடலாம், ஆனால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஞாபகத்தில் வரும், என்.டி.ஏ ஆட்சியில் இருந்தால், திடீரென்று ஒரு கூட்டம் கிளம்பும், பிறகு மறைந்து விடும் என்றிருப்பது “திருக்குறள்” காதல் இல்லை, மோகம் இல்லை. கடந்த 60 வருடங்களாக திருக்குறளை எதிர்த்தபோது, கேவலப்படுத்தியபோது, எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். “தமிழ்” மீது பற்றிருந்தால், அது தொடர்ந்திருக்க வேண்டும். அவசியம், தேவை, அரசியல் இருந்தால் இருக்கும், இல்லையென்றால் இருக்காது என்றிருக்கக் கூடாது. இது திருக்குறளை மனப்பாடம் செய்து, பரிசு வாங்கிக் கொண்டு, பிறகு மறந்துவிடும், சிறுபிள்ளை விளையாட்டல்ல, பள்ளிப்பருவ ஆர்வக்கோளாறல்ல. இல்லை, “திராவிடத்துவ இந்துத்துவம்” ஒன்றை உருவாக்குகிறோம் என்று முயன்றால், அது தமிழகத்தில் எடுபடாது. கடந்தகால சரித்திரத்தை அறிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளாமல், சிலைகளை நிருவினால், விழாக்களை நடத்தினால், திருக்குறள் பக்தி வராது.
தினமணியில்வெளியானஇரண்டுபுகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா! முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[6] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[7] இருந்தனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்!
முத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். “மூவர் முதலிகள் முற்றம்” என்ற தலைப்பில், தமிழ் இந்துவில் 2008ல் வெளியான ஒரு கட்டுரை உள்ளது. அப்பொழுது, எம். நாச்சியப்பன் இவ்வாறு கேட்டிருந்தார்[8]:
1. Whos is “மூவர் முதலிகள் முற்றம்”?
2. Can you give its address and the contacts – phone no, e-mail etc.
3. The mentioned mutt heads are useless according to my opinion as they cannot matach the propaganda or the manipulative skills of of the christians or mohammedans. Had it been so, the position would not be like this.
5. Real Hindus, in the sense, who have guts should conduct the conference. The Hindus with other motives would only produce negative results, that would further harm the interests of the Hindus.
அவர்களுடைய முகவரி, போன் நெம்பர், இ-மெயில் முதலியவை தரமுடியுமா?
அந்த மடாதிபதிகளையெல்லாம் பார்த்தால், இப்பணிக்கு அவர்கள் உதவமாட்டார்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்-முகமதியர்களுக்குண்டான திறமை இவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது. இருந்திருந்தால், அவர்கள், இவ்வாறு இருக்க மாட்டார்கள்.
மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலஎது கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது.
உண்மையான இந்துக்கள், இந்த மாநாட்டை நடத்த வேண்டும். வேறு விருப்பங்களை வைத்துக் கொண்டுள்ள இந்துக்களால் நடத்தப் பட்டால், எதிர்மறையான விளைவுகள் தாம் ஏற்படும், அது இந்டு நலன்களை பாதிக்கும்.
ஶ்ரீ வேதபிரகாஷ் எடுத்துக் காட்டியபடி, ஓம்காரானந்தா என்பவர், அவர்களது மாநாட்டை தானே நடத்துகிறேன் என்று முன்வந்தார்.
எப்படியிருந்தாலும், இந்துக்களிடம் ஒற்ருமை இருக்க வேண்டும். தயவு செய்து கேட்ட விவரங்களைக் கொடுக்கவும்.
உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[10]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது].
[5] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.
[9]G T Aditya on December 11, 2008 at 9:31 am என்பவர் இதற்கு இவ்வாறு பதிலளித்தார்:
I want to furnish the address of Muvar Mudali Mutram, which follows: Prof Swamy Thiyagarajan, 14, Handi Building, New Railway Station Road, Near Flyover, Kumbakonam – 612001. Cell no 94435 18004. He is making efforts to initiate action against the said M Deivanayagam and others for publishing a titled Irulil Oli, which contained defamatory and derogatory materials. Another two gentlemen connected with this is Sri Panneer Selvam – 9443408446 & Sri K Kannan – 9443222257. Please contact any one the three gentlemen for further information.
Samantha Cameron opted for an elegant sari as she joined her husband and Prime Minister Narendra Modi backstage at Wembley
மோடிவரவேற்க்கப்பட்டது, மூன்றுநாள்நிகழ்ச்சிகள்வெற்றிகரமாகநடந்துமுடிந்தது: இனி மோடியை வரவேற்றவர்களைப் பற்றிப் பார்ப்போம். பொருளாதார முதலீடு மற்றும் அந்நிய நாட்டு நட்புற மேன்பாடு என்ற ரீதியில் வந்த மோடியை வரவேற்க ஏற்பாடுகள் சில மாதங்களாக நடந்து முடிந்தன. இதற்கான பிரத்யேக இணைதளத்தில் எல்லா விவரங்களும் கொடுக்கப்பட்டன[1]. தீபாவளி நேரத்தில் வருவதால், சிறந்த வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற விதத்தில் ஏற்பாடுகள் நடந்தன[2]. இரு நாட்டு நல்லுறவு மேன்பட அவை உறுதியாக இருந்தன. “ஐரோப்பிய இந்திய போரம்” என்ற அமைப்பால், “யு.கே வெல்கம்ஸ் மோடி” நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன[3]. எண்ணிக்கையில் 414 என்று பல்வேறு நிறுவனங்கள், இயக்கங்கள் வரவேற்கும் குழுக்களில் இருந்தனர்[4]. இங்கிலாந்தில் உள்ள 1.6 மில்லியன் இந்தியா வம்சாவளியினர், இந்நிகழ்ச்சியை கொண்டாட ஆவலாக இருந்தனர். அவ்வாறே வெற்றிகரமாக செய்து முடித்தனர். துரதிருஷ்ட வசமாக, அதே 13-11-2015 அன்று மாலையில், பாரிஸில் தீவிரவாத தாக்குதல் நடந்ததால், இவை அமைதியாக நடந்து முடிந்தன. 15-11-2015 அன்று மோடி துருக்கிற்கு ஜி-20 கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.
Samantha Cameron dazzled in a patterned sari as she joined her husband and prime minister Modi to greet performers backstage
பிஹார் தோல்விக்குப் பிறகும் இப்பிரச்சாரம் தொடர வேண்டிய அவசியம் என்ன?: மோடியின் லண்டன் விஜயம் முன்னரே தெரிந்த விசயம். மோடி-எதிர்ப்பு குழுக்களை சட்டப்படிக் கட்டுப்படுத்த, லண்டனில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்பாட்டம் நடத்த உரிமையுள்ளது என்பதனால், குறிபிட்ட இடத்தில் நின்று கொண்டு ஆர்பாட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படியே, அவர்கள் நடத்தி முடித்தனர். ஆனால், மோடி-ஆதரவு கூட்டம் என்பதை விட, உண்மையிலேயே, மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். கேமரூனின் மனைவி சமந்தா, இந்திய பெண்மணியைப் போன்று நெற்றியில் பொட்டு, ஜாக்கெட்-புடவை கட்டிக் கொண்டு வந்தார். இந்திய-இந்து பெண்களே அசந்து போகும் வரையில் வந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 60,000 இந்திய வம்சாவழியினர் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்தனர். வாணவேடிக்கைக்குப் பிறகு கலைநிகழ்ச்சி நடந்தது. கேமரூன் சமந்தா தம்பதியர் கலைஞர்களை பாராட்டினார். பிறகு, மோடி வழக்கம் போல பேசி, அனைவரையும் கவர்ந்தார். நிச்சயமாக அந்த அவாஸ் கோஷ்டிகளே வெட்கப்படும் அளவிற்கு நடந்தது. இருப்பினும், நவம்பர் முதல் வாரம் நடந்த விருது திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தைப் பற்றியும் அலச வேண்டியுள்ளது.
Bihar elections – September to October 2015
விருதுகள்திருப்பிக்கொடுக்கும்பிரச்சாரம் – செப்டம்பரில்ஆரம்பித்துஅக்டோபர்உச்சத்தைஅடைந்து, நவம்பரில்முடிந்தது: செப்டம்பர் 4, 2015 அன்று உதய் பிரகாஷ் [Uday Prakash], என்ற இந்தி எழுத்தாளர், தனது சாகித்திய விருதைத் திருப்பியளித்தார்[5]. பிறகு நயந்தாரா ஷெகால் [Nayantara Sahgal], அஷோக் வாஜ்பேயி [Ashok Vajpeyi] விருதைத் திருப்பிக் கொடுத்தனர். கிருஷ்ண சோப்தி, [Krishna Sobti], சஷி தேஷ்பாண்டே [Shashi Deshpande]. இவ்வாறு அக்டோபர் மாதம் வரை 33 பேர் திருப்பிக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன[6]. இதில் வார்யம் சிங் சந்து [Waryam Singh Sandhu] என்பவர் அவசரநிலை பிரகடன காலத்தில் காங்கிரஸ் அரசால் சிறையிடைக்கப்பட்டவர். அக்டோபரில் இந்த “திரும்பக் கொடுக்கும் சடங்கு” உச்சத்தை அடைந்தது. நவம்பரில், திடீரென்று அடங்கி விட்டது. அவசரநிலை பிரகடனம், 1984 சீக்கியப் படுகொலைகள், 1989 பகல்பூர் கலவரங்கள், யு.பி.ஏ கோடானு கோடி ஊழல்கள் முதலிவை நடந்த போது இவர்களில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய முரண்பாடுகளை பலரும் எடுத்துக் காட்டினர்.
Introducing Mr Modi to the thousands of people packed into the stadium, Mr Cameron described the night as a -truly historic moment
எதிர்-கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது: அனுபம் கேர் தலைமையில், விருதுகள் திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தை எதிர்த்து, அதாவது அதன் போலித்தனத்தை எடுத்துக் காட்டி கூட்டம்-ஊர்வலத்தை நடத்தினார். அதில் நூற்றுக்கணக்கில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். அரசிடம் விருது வாங்குவது என்பது ஒரு “திரும்ப செய்யும் முறை அல்லாத விசயம்மாகும். ஏனெனில், விருதை திரும்ப கொடுத்து விடுவதால் அதன் மூலம் பெற்ற பெயரையும், புகழையும் திரும்பக் கொடுப்பதாகாது[7]. பலனை அனுப்பவித்தது அனுபவித்தது தானே? சாகித்ய அகடாமி, தன்னாட்சி பெற்ற தனி அமைப்பு. அதன் செயல்பாடுகளில் அரசு தலையிடுவதில்லை அதே போல் அரசின் செயல்பாடுகளில், சாகித்ய அகடாமியும் தலையிடுவதில்லை. இதற்கு முன் எத்தனையோ பிரச்னைகள் நடத்திருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தாளர் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் ஆதரவு இருக்கும் எழுத்தாளர்கள், பரிந்துரைகளின் மீது விருது கொடுக்கப்படுகிறது என்பதும் உண்மைதான்.
A woman proudly shows off her ticket to the event, which saw crowds of supporters descending on Wembley this evening
பிஹார்தேர்தல்செப்டம்பரில்ஆரம்பித்து, நவம்பரில்முடிந்தது: பீஹாரில் தேர்தல் நடக்கவிருந்தது, தெரிந்த விசயமே. முதல் கட்டத்திற்கு செப்டம்பர் 16 அன்று அறிவிப்பு வெளியானது. கடைசி கட்ட ஓட்டளிப்பு நவம்பர் 5ம் தேதி முடிந்தது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் கல்பர்கி கொலை எதிர்ப்பு போராட்டம் (ஆகஸ்ட் 30 கொலை), சாகித்திய விருதுகள் திருப்பிக் கொடுத்தது, மாட்டிறைச்சி பிரச்சினை, தாத்ரி விவகாரம் என அனைத்தும் நடந்துள்ளன. இந்நிகழ்ச்சிகளும் காங்கிரஸ் மற்றும் சமஜ்வாடி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தன. அதனால், அவை எப்படி நடந்தன, கொலையாளிகளை ஏன் பிடிக்கவில்லை, சட்டம்-ஒழுங்கு நிலை என்னவாயிற்று என்றெல்லாம் யாரும் கேட்பதாக இல்லை. ஆனால், இவற்றிற்கெல்லாம் “இந்துத்துவ” சக்திகள் தாம் காரணம், குறிப்பாக மோடிதான் காரணம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
David Cameron and his wife, Samantha
ஆகஸ்ட்.2013லிருந்து, செப்டம்பர் 2015 வரைசாகித்தியவிருதுபெற்றவர்களுக்குஎந்தஉணர்வும்வரவில்லை: ஆகஸ்ட்.2013ல் மஹாராஷ்ட்ராவின் “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்ற மூடநம்பிக்கை அழிப்பு சமிதி என்ற இயக்கத்தைத் துவக்கியவரான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார். அப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருந்த மாநில மற்றும் மத்திய அரசுகளின் மீது சந்தேகம் வரவில்லை. காங்கிரஸ் தான் காரணம் அல்லது அதன் தலைவி சோனியா தான் மூலகாரணம் என்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை. பிப்ரவரி மாதம் 2015ல் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே என்பவர், “சிவாஜி கோன் ஹோதா” என்ற தலைப்பில், மஹாராஷ்ட்ர வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அவதூறாக எழுதியதால், அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது சோனியா தான் காரணம் என்று யாரும் அடையாளம் காணவில்லை. ஆக, ஆகஸ்ட்.2013 முதல் பிப்ரவரி 2015 வரைக்கூட, சாகித்திய விருது பெற்றவர்களுக்கு திரும்பகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
Dr Kalburgi was a leading scholar and a well-known rationalist thinker – BBC photo
செப்டம்பர் 2015லிருந்து உணர்ச்சிகள் பீரிட்டது எப்படி, ஏன், எதற்காக?: கல்பர்கி பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார். இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது கருத்தூரிமை உள்ளவர்களுக்கும், அக்கருத்துரிமையால் பாதிக்கப்படும் மக்களுக்கும், வெவேறு சட்டங்கள் உள்ளன போலும்! ஆகஸ்ட்.30, 2015 அன்று கல்பர்கி கொல்லப்படுகிறார். இப்பொழுதுதான் உணர்ச்சி திடீரென்று பீரிடுகின்றது.
[2] With the Prime Minister of India, Shri Narendra Modi, due to visit the United Kingdom later this year, the largest Indian diaspora in the world is eagerly waiting in anticipation to deliver the loudest, greatest and most vibrant welcome he has seen outside of India. UKWelcomesModi will bring together individuals from the 1.6 million-strong Indian community in Britain- from all backgrounds, generations and regions – to celebrate two great nations with one glorious future. It is the Diwali event for the family this year- with a cultural showcase featuring the best of Indian and British talent; a landmark speech to be delivered by Prime Minister Modi and a grand finale featuring the biggest fireworks display in the whole country.
[3] UKWelcomesModi pays tribute to the deep ties between India and the UK, highlighting the formidable contribution made by members of the Indian diaspora in all walks of British life. Prime Minister Modi’s already iconic leadership has made waves across the world. UKWeclomesModi is honoured to host this new global visionary who will give us a glimpse of India in years to come as it forges new paradigm of growth and success for not just Asia, but the rest of the world too. Organised by the Europe India Forum and in partnership with Indian cultural and community organisations across the country, the event is set to be the highlight of 2015. The Europe India Forum is a not for profit organisation promoting Europe-India relations for communities, by communities.
பிரதமர்மோடியின்வருகைக்குஎதிர்ப்புதெரிவித்துஇங்கிலாந்தில்நூற்றுக்கணக்கானோர்போராட்டம்[1]: 13-11-2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள டவ்னிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன[2] என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், அவ்வாறு ஏற்பாடு செய்பவர்கள் யார்? மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக லண்டன் நகரில் உள்ள 10-வது டவ்னிங் ஸ்டிரீட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி ஆகிய சமூகத்தின் பிரநிதிகள் மோடியின் இங்கிலாந்துக்கு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “மோடி திரும்பிப்போ” என்று கோஷமிட்டனர்[4], என்றும் சந்தோஷமாகத்தான் செய்திகளைக் கூட்டியது. ஆனால், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்பதனைக் குறிப்பிடவில்லை.
Gujaratis, Kashmiris, Tamils united against Modi
நூற்றுக்கணக்கோனோர்இந்தியாவின்பெயரைக்கெடுத்துவிடமுடியுமா?: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது? முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா? பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம்? சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன? அதில் எத்தனை பேர் சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி என்றெல்லாம் பார்க்கவில்லையா?
Awaaaz propaganda against Modi
“அவாஸ்நெட்வொர்க்”கும், அதன்பின்னணியும்: மோடிக்கு எதிரான இந்த போராட்டங்களை “அவாஸ் நெட்வொர்க்” [Awaaz Network] என்ற அமைப்பு தலைமையேற்று நடத்தியது[7] என்று செய்தி வெளியானது. தனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, யாரிடமும் சம்பந்தமில்லை என்றேல்லாம் அறிவித்துக் கொண்டாலும், இது ஆரம்பத்திலிருந்தே, இந்திய விரோதமாக செயல்பட்டு வருகின்றது, என்பது, அதன் இணைதளத்திலிருந்தே தெரிய வருகிறது. செக்யூலரிஸத்தை காட்டிக் கொண்டாலும், இடதுசாரி ஆதரவு வெளிப்படுகிறது. மனித உரிமைகள், தனிநாடு கோரும் உரிமை, பிரிவினைவாதம், சிறுபான்மையினர், தலித் என்று பலவிசயங்களை சேர்த்துக் கொண்டு, குறிபிட்ட எதிரியை உருவாக்கி ஐத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பது என்று பிரச்சார ரீதியில் செயல்பட்டு வருகின்றன. “தெற்காசிய குடிமகன்களின் இணைதளம்” இதன் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறது[8]. இதன் ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் என்று ஒரு பட்டியல்கொடுத்துள்ளது[9]:
Supporting organizations of Awaaz – South Asia Watch include:
Aaj Kay Naam
Asian Women’s Refuge
Friends of India / All-India Christian Council (UK)
Campaign Against Racism and Fascism (CARF)
Cambridge South Asia Forum
Dalit Forum for Social Justice (UK)
Dalit Solidarity Network (UK)
India Forum
Indian Muslim Federation (UK)
Indian Workers Association (GB)
Muslim Parliament
National Civil Rights Movement (NCRM)
Oxford South Asia Forum
People’s Empowerment Alliance
People’s Unity
Southall Black Sisters
Southall Monitoring Group
Sutton for Peace and Justice
Voice of Dalit International
இவையெல்லாமே, வெவ்வேறு அமைப்புகள் போல காட்டிக் கொண்டாலும், அலவிசயங்களில் ஒன்றாகவே செயல்படுகின்றன. நடத்தப்படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கூட்டங்கள் இவற்றில் செக்யூலரிஸம், இடதுசாரி சித்தாந்தம், முஸ்லிம்-ஆதரவு போன்ற விசயங்களை அலசுகிறார்கள். அதற்கேற்றபடி சித்தாந்த இத்தாந்த வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகள் எப்படியுள்ளன என்று பார்த்தால், இந்து-விரோத போக்காகத்தான் உள்ளது. “மோடி-எதிர்ப்பு” முகமூடி அல்லது போர்வை இவற்றிற்கு சாதகமாக உபயோகப்படுகின்றன, அதுதான் இணைப்பு காரணியாக இருக்கின்றது, அவ்வளவுதான்! ஆனால், அவை இந்திய-விரோதமாகவும், இந்து-விரோதமாகவும் செய்ல்படுவதை கவனிக்க வேண்டும்.
Protestors demonstrating against Indian Prime Minister Narendra Modi hold placards and chant outside Downing Street in central London on November 12, 2015. India’s Prime Minister Narendra Modi today began a three-day visit to London focused on trade deals and connecting with the diaspora as critics warned of a “rising climate of fear” under his rule. AFP PHOTO / LEON NEAL
சித்தாந்த ரீதியில் ஒன்று பட்டு எதிர்ப்பது யாரை?: மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்த இவை, ஆட்சிக்கு வந்த பிறகும், அதே தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனது. உதாரணத்திற்கு, மே 2014ல் இந்துத்துவ தடுப்பு, நீதி மற்றும் மனித உரிமைகள் ஆதரிப்பு என்ற கூடுதலில் பங்கு கொண்டவர்கள்[10]:
சுரேஷ் குரோவர் – Suresh Grover, Director, The Monitoring Group,
பிரஞ்னா படேல் – Pragna Patel, Director, Southall Black Sisters,
கௌதம் அப்பா – Professor Gautam Appa, Academic and Human Rights activist,
இருந்தா குரோவர் – Vrinda Grover, Lawyer, Researcher and Human Rights activist,
அனீஸ் கபூர் – Sir Anish Kapoor, CBE RA Sculptor
சேதன் பகத் – Chetan Bhatt, Director of the Centre for the Study of Human Rights at the London School of Economics,
மைக் வுட் – Mike Wood MP and
ஹெலினா கென்னடி – Baroness Helena Kennedy, QC FRSA Barrister, human rights defender and peer
பிறகு நரேந்தர மோடி எதிர்ப்பிலும் ஒன்றாக இருக்கிறார்கள்[11]. மோடியுடன், பாசிஸம் வளர்கிறது என்றெல்லாம் பேசி-எழுதப்படுகின்ற பின்னணியிலும் இவர்கள் தாம், மாறி- மாறி இருந்து செயல்படுகிறார்கள்[12]. லெஸ்லி உட்வின், நிர்மலா ராஜசிங்கம், விரிந்தா குரோவர், தீஸ்தா செதல்வாத், கவிதா கிருஷ்ணன், முதலியோர் கீழ் கண்ட விசயங்களில் ஒன்று படுகிறார்கள் – கருத்துரிமை போராட்டம், புனே கல்லூரி, சாகித்திய விருதுகள் திரும்பக்கொடுத்தல், லௌ-ஜிஹாத் சித்தாந்த ஆதரிப்பு[13], இந்துத்துவா எதிர்ப்பு[14], மோடி-எதிர்ப்பு, முஸ்லிம் அடிப்படைவாத ஆதரிப்பு, செக்யூலரிஸ போர்வையில் இந்து-எதிர்ப்பு….. லெஸ்லி உட்வின் ஆதரிப்பு, தீஸ்தா செதல்வாத் ஆதரிப்பு[15],………..முதலியவையும் உண்டு…………இப்படி பரஸ்பர ஆதரவு, அழைப்பு, உபசரிப்பு முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இறுதியாக இந்துக்களை எதிர்க்கும் இவர்கள், அவர்களது உரிமைகளை ஏன் மதிப்பதில்லை. இத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தத்தினை என்ன பெயட்ரிட்டு அழைப்பது?
[1] மாலைமலர், பிரதமர்மோடியின்வருகைக்குஎதிர்ப்புதெரிவித்துஇங்கிலாந்தில்நூற்றுக்கணக்கானோர்போராட்டம், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, நவம்பர் 12, 11:05 PM IST.
[7] You can contact us at AWAAZ, the London Civil Rights and Art Centre, Upper Floors, 37 Museum Street, London WC1A 1LQ, Alternatively you can email –admin@awaaz-uk.org at editor@awaaz-uk.org for more information about this website –
ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (2)
கட்டிடம் எப்படி விழுந்தது 06-12-2014
செக்யூலரிஸமாகிவிட்டடிசம்பர் 6 ஆர்பாட்டங்கள்[1]: இதுவரை முஸ்லிம்கள் மட்டும் ஆர்பாட்டம் செய்து வந்ததால், அது கம்யூனலிஸமாகப் பார்க்கப்பட்டது. என்ன, இந்த முஸ்லிம்களுக்கு வேறு வேலையில்லையா என்று கூட பொது மக்கள் முணுமுணுத்தது உண்டு. ஆனால், இந்து இயக்கத்தினரும் இதனை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டதால், இது செக்யூலரிஸமடயமாக்கப் பட்டுவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியே, அதனை மறைமுகமாகச் சுட்டிக் கட்டிவிட்டார். அதாவது ஆர்பாட்டம் நடத்த முஸ்லிம்களுக்கு உரிமைகள் இருக்கின்றன என்றால், இந்துக்களுக்கும் இருக்கின்றனலீனி தா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன் என்ற கேள்விக்கு வினா காண முற்படும்போதும், அந்த செக்யூலரிஸ ஆபத்து வெளிப்படுகிறது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது. இது செக்யூலரிஸம் அல்லது இந்துவிரோத சின்னங்களை உபயோகப்படுத்தும் போக்காக உள்ளது. எனவே, நிச்சயமாக, இனி இந்துக்கள் எதிர்க்கக் கூடும். திப்புசுல்தானைப் பொறுத்த வரையில், கம்யூனிஸ்டுகள், நாத்திக-திராவிட சிந்தாந்திகள், முற்போக்குவாதிகள் என்று பலகூட்டத்தினர் ஆதரிப்பதால், இந்துக்கள் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.
Demonstration at Delhi by the Hindu organization
சர்ச்சைக்குரியகட்டிடஇடிப்பு, நூற்றுக்கணக்கானகரசேவகர்கள்இறப்புமுதலியவற்றிற்குயார்காரணம்?: 1936ம் ஆண்டிற்குப் பிறகு சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம் மசூதியாகப் பயன்படுத்தப்படவில்லை மற்றும் அங்கு தொழுகையும் செய்யவில்லை, என்று மார்ச் 23, 1951 அன்று பைஸாபாத்தின் சிவில் நீதிபதி பதிவு செய்துள்ளார். முன்னர் டிசம்பர் 1949ல் இரண்டு வாரங்களுக்கு மேலாகக் கூடி இந்துக்கள் நாமசங்கீர்த்தனம், பஜனை செய்துள்ளனர். டிசம்பர் 22, 1949 அன்று அங்கு விக்கிரங்கள் அதிசயமாகத் தோன்றியுள்ளன. அதாவது, முஸ்லிம்கள் பாணியில் சொல்வதானால், காபிர்கள் அந்த இடத்தில் சாத்தான்களின் சின்னமான விக்கிரங்களை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர், எனலாம். அதனால், அக்கட்டிடத்திற்கு பூட்டுப் போடப்பட்டது, ஆனால், இந்துக்கள் வழிபாடு அனுமதிக்கப்பட்டது. ஆக, காங்கிரஸ் கட்சி நேரு காலத்திலிருந்தே, இப்பிரச்சினையை இந்துக்களை தாஜா செய்ய உபயோகப்படுத்தி வந்தது. சோமநாதபுரம் கோவில் கட்டப்பட்டது இந்துக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தியது எனலாம். இந்திரா காந்தி காலத்திலும் இது இருந்துகொண்டுதான் வந்துள்ளது. ராமஜென்மபூமியை விடுவிக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 1984லியே ஶ்ரீ ராம ஜானகி ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டது[2]. ஆனால், இந்திரா காந்தி அக்டோபர்.31, 1984 அன்று கொலையுண்டதால் அது நின்று போனது. நேருவின் பேரன் பிப்ரவரி.1, 1986 அன்று பைஸாபாத்தின் நீதிபதி கட்டிடத்திற்கு போடப்பட்ட பூட்டுகளை திறக்க ஆணையிட்டு, இந்துக்கள் வழிபட செய்தார். இதனால் பப்ரி மஸ்ஜித் நடவடிக்கைக் கமிட்டி [The Babri Masjid Action Committee (BMAC)] மார்ச் 1986ல் உருவானது.
ராஜிவ்காந்திமுதல்வி.பி.சிங்வரை–செக்யூலரிஸம்வளர்த்தமுறை: ராஜீவ் காந்தி காலத்தில், அவரே அயோத்தியில் இருந்த பாபாவிடம் கால்கள் தனது தலைமீது வைத்து ஆசி பெற்றுள்ளார். உபிக்கு என்.டி.திவாரி முதலமைச்சராகவும், ராஜிவ் பிரதம மந்திரியாகவும், பூட்டா சிங் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு அனுமதியுடன், நவம்பர்.10, 1989 அன்று காமேஷ்வர் சௌப்பல் என்ற பட்டியியினத்தவர் மூலம் “சிலன்யாஸ்” / பூமிபூஜை நடந்தது. அதாவது கோவில் கட்ட ஆரம்பிக்க கடைகால் பூஜை கட்டிடத்திலிருந்து 192 அடிகள் தூரத்தில் நடைபெற்றது. ராஜிவ் காந்திக்குப் பிறகு, 1989ம் ஆண்டு வி.பி.சிங் பிஜேபி ஆதரவுடன் பிரதமரானார். 11-11-1989 அன்று சுன்னி வக்ப் போர்ட், பைசாபாதில் வழக்குத் தொடுத்ததால், கோவில் கட்டிட வேலை நிறுத்தப்பட்டது. வி.பி.சிங் 10 மாதகால அவகாசம் கேட்டுக் கொண்டார். ஆகஸ்ட் 1990ல் கோவில் கட்டுவதற்கு வேண்டிய கற்கள் வர ஆரம்பித்தன. வி.பி.சிங் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பிஜேபி ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டது மற்றும் டிசம்பர் 1990ல் சோம்நாத்திலிருந்து, அத்வானியின் ரத யாத்திரை ஆரம்பித்தது.
Make-shift temple and proposed model
சந்திரசேகர்காலத்தில்நடந்த சமரச முயற்சிகள் (1989-1991): இதற்குள் 1991ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தாலும், சந்திரசேகரை பிரதமர் ஆக்கினர். இவர் காலத்திலும் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முஸ்லிம் குழுக்கள் ஒத்துவரவில்லை. பிறகு பி.வி. நரசிம்ம ராவ் பதவிக்கு வந்தார். உபி அரசு 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு டிசம்பர் 6.1992 அன்று வரவிருந்திருந்தது. ஆனால், அது டிசம்பர் 11.1992 அன்றைக்கு ஒத்திப் போட்டது. ஏற்கெகெனவே லட்சங்களில் கரசேவர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில், தீர்ப்புத் தள்ளிவைத்தது, அவர்களைத் தூண்டிவிட்டது போலாகியது. இதனால் ஏற்பட்ட விளைவுதான், அந்த கட்டிடத்தின் இடிப்பு.
Long wait for the devotees Ayodhya
நரசிம்மராவ் காலத்திலும் பிரச்சினை தொடர்ந்தது (1991-1996): 08-12-2002 அன்று அரசாங்கம் அவ்விடத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ஆனால், தற்காலிகக் கொட்டகையில் ராமர் விக்கிரத்தின் பூஜை-வழிபாடு தொடர்ந்தது. ஆனால், வழக்கம்போல அயோத்தியாவுக்கு வந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அது மிகவும் இடைஞ்சலாக இருந்தது. பக்தர்கள், யாத்திரிகர்கள் முதலியோர் தரிசனம் செய்யாமல் கூட திரும்ப அனுப்பப்பட்டனர். இதனால், சில இந்து இயக்கங்கள், லக்னௌ உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. நீதிமன்றமும், வரும் பக்தர்களை தரிசனம் ஏற்பாடு செய்ய வேண்டும், அதே நேரத்தில் பாதுகாப்பு கருதி அவர்கள் தொலைவிலிருந்தே அத்தரிசனத்தை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று 01-01-1993 அன்று தீர்ப்பளித்தது. இதையெதிர்த்து யாரும் வழக்குப் போடவில்லை. இன்று வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்[3]. ஜனவரி.7, 1993 அன்று அரசு இன்னொரு ஆணை மூலம் ராமஜென்மபூமி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. இதனையும் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் நீதிமன்றத்தில் எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், உச்சநீதி மன்றம் மற்றும் அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்புகளில் சரித்திர ரீதியில் பல விசயங்கள் அலசப்பட்டன. பிரபல சரித்திராசிரியர்கள் எல்லோரும் முஸ்லிம்களின் சாட்சியாக வழக்குகளில் சேர்க்கப்பட்டது விசித்திரமாக இருந்தது. அவர்கள் தங்களது செக்யூலரொஸத்தைக் காட்டிக் கொள்ள அவ்வாறு செய்தனர் போலும். ஏனெனில், நாளிதழ்களில் அவ்வாறே பேட்டிக் கொடுத்துக் கொண்டும், முஸ்லிம்களுக்கு சார்பாகவும் எழுதிக்கொண்டிருந்தனர்.
ASI excavations at Ayodhya 2003.1
நரசிம்மராவ்பின்பற்றியசெக்யூலரிஸபாதை (1991-1995): 1996ல் பிஜேபி 13 நாட்கள் ஆட்சி செய்தது. நடுவில் காங்கிரஸ் ஆதரவில் தேவ கவுடா (ஏப்ரல் 1997 வரை) மற்றும் ஐ.கே.குஜரால் பிரதமராக சிலகாலம் பதவி வகித்தனர். பிப்ரவரி 21.1998 அன்று கல்யாண் சிங் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது. நரசிம்ம ராவ் பிஜேபி ஆட்சி செய்துவந்த மூன்று மாநில அரசுகளையும் அரசியல் நிர்ணய சட்டத்தின் 356 பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து டிஸ்மிஸ் செய்தார்[4]. 1998 தேர்தலில் பிஜேபி மறுபடியும் ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் (பிப்ரவரி 1998 முதல் ஏப்ரல் 1999 வரை) ஆட்சி நடத்தியது. 1999ம் ஆண்டு தேர்தலில் மறுபடியும் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. இதற்குள், தீவிரவாதிகள் பிப்ரவரி 27.2002 அன்று கோத்ரா ரெயில் நிலையத்தில் அயோத்தியாவிற்குச் சென்று திரும்பிய கரசேவகர்கள் கொண்ட பெட்டியைத் தீவைத்துக் கொளுத்தினர். இதனால் ஏற்பட்ட கலவரங்கள் உலக செய்திகள் ஆகின, ஆனால், குரூரமாக எரித்துக் கொல்லப்பட்ட அப்பாவி யாத்திரிகள் மறக்கப்பட்டனர். அதில் அப்பாவி யாத்திரிகர்கள் 58 பேர் கருகி செத்தனர். அதே ஆண்டு 2002ல் அலஹாபாத் நீதிமன்றம் சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்திற்கு கீழே கோவில் இருந்ததா என்று கண்டறிய இந்தியத் தொல்துறையைக் கேட்டுக் கொண்டது[5]. மார்ச்.12 2003ல் ASIன் ஆய்வு ஆரம்பித்தது, ஆகஸ்டில் கீழே கோவில் இருந்ததாக ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்தது.
ASI excavations at Ayodhya 2003.2
கீழே கோவில் இருந்தது என்ற அறிக்கையை எதிர்த்த செக்யூலரிஸ்ட்டுகளும், தூண்டிவிடப்பட்ட முஸ்லிம்களும்: ஆனால் வழக்கம் போல செக்யூலரிஸ்ட் சித்தாந்திகள், பிரபலமான சரித்திராசிரியர்கள் போன்ற கோஷ்டிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இவர்கல் எதற்காக முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டும் என்பது புதிராக இருந்தது. இது முஸ்லிம்களை உசுப்பிவிட்டதுடன், தீவிரவாதிகளையும் வளர்த்தது. ஜூலை 2005ல் இஸ்லாமிய தீவிரவாதிகள் அவ்விடத்தை குண்டுகளுடன் தாக்கியதில், எதிர்நடவடிக்கையில் ஆறுபேர் கொல்லப்பட்டனர்[6]. செப்டம்பர் 30.2010 அன்று அலஹாபாத் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்து, இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் இப்பொழுதுள்ள ராம்-லல்லா கோவில் என்று கொடுக்கவேண்டும் என்று ஆணையிட்டது[7]. இப்பொழுது கூட (டிசம்பர் 2014) மொஹம்மது ஹஸிம் அன்சாரி [Mohammed Hashim Ansari] என்ற வாதி, 1949லிருந்து நீதிமன்றத்தில் முஸ்லிம்களுக்காகப் போராடி வருகிறார். ஆனால், இவ்வழக்கினால் தான் சோர்ந்து போய் விட்டதாகவும், ஆஸம் கான் போன்ற தலைவர்கள் இதனை அரசியல் ஆக்குவதாகவும், அதனால் தான் இனி போராடப் போவதில்லை என்றும், இடத்தை ராம்-லல்லாவிற்கே விட்டுக் கொடுத்துவிடலாம் என்று கூறியுள்ளார்[8].
[2]7 and 8 April: The Vishwa Hindu Parishad (VHP) sponsored Dharma Sansad in a session at Vigyan Bhawan, New Delhi gives call to liberate the Ramjanamabhumi. To create national awareness in support of the liberation of the Bhumi the VHP organizes a rath-yatra of Sri Rama Janaki Virajman on a motorized chariot from Bihar 25 Sept 1984 to reach Ayodhya on 6 October 1984. But Indira Gandhi’s assassination later that month leads to a suspension of the yatra.
[3] மத்திய அரசின் வெள்ளை அறிக்கை மற்றும் Justice Deoki Nandan, Sri Rama Janma Bhumi – Historical and Legal Perspective, 2001.
[4] The Supreme Court’s verdict in the Bommai case sharply limited the constitutional power vested in the Central Government to dismiss a State government, but upheld the dismissal of four BJP Governments for going against the constitutional philosophy and provisions that were secular.
[5] In 2002, the Allahabad High Court directs the Archaeological Survey of India to excavate the site to determine if a temple lay underneath. On 12th March 2003, the Archaeological Survey of India (ASI) begins excavation in Ayodhya on the directions of the Allahabad High Court to ascertain whether a temple existed at the place where the Babri Masjid was built. In August 2003, the survey says there is evidence of a temple beneath the Mosque.
[6] In July 2005, suspected Islamic militants attack the disputed site, using a jeep laden with explosives to blow a hole in the wall of the complex. Security forces kill five people they say are militants, and a sixth who was not immediately identified.
[7] Allahabad High Court on September 30 ruled by a majority verdict that the disputed land in Ayodhya be divided equally into three parts among Hindus and Muslims and that the place where the makeshift temple of Lord Ram
exists belongs to Hindus. Status quo to be mantained till three months.
ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)
டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்
முஸ்லிம்மற்றும்இந்துஅமைப்பினர்நீதிமன்றத்தில்அனுமதிகேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2]. திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.
06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா
வழக்கம்போலபோலீஸார்பாதுகாப்பு, சோதனை, பயணிகள்அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.
06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்
தா. பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன்முதலியோர்முஸ்லிம்கள்ஆர்பாட்டத்தில்கலந்துகொண்டதுஏன்?: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7]. இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.
06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா
பாபர்மசூதிஇடிப்புவழக்கில்குற்றவாளிகளுக்குத்தண்டனைவழங்கவேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா
திஹிந்துவின்கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].
A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI
ரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.
Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 – The Hindu
பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.
06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா
இந்துமுன்னணிஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இந்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].
Babri-5th
டிசம்பர் 6ம்தேதி – பீதிகிளப்பும், பொதுமக்களைதொந்தரவுசெய்யும்தினமாகமாறிவருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].
[1] தினமணி, பாபர்மசூதிஇடிக்கப்பட்டதினம்: முஸ்லிம்அமைப்புகள்ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST
[2] On Tuesday (02-12-2014), the judge passed orders on two petitions filed by S Elumalai and K Balu, office bearers of Hindu Munnani. The Madras high court has rejected a petition which sought denial of permission for Muslim organisations to stage protests against demolition of Babri Masjid on Saturday (06-12-2014). Muslim organisations have been holding anniversary meetings and rallies across the country ever since the masjid was brought down on December 6, 1992.
[3] They challenged the police refusing them permission to hold demos at Thiruvennai Nallur and Villupuram on December 6 demanding a Ram temple at the disputed site in Ayodhya. The Villupuram police submitted that the places where the petitioners want to hold demonstration are highly congested. But the petitioners said that they were prepared to shift the time and venue if needed. Disposing of the petitions, the Judge said that the first petitioner may shift the venue of demonstration at Thiruvennai Nallur to the place suggested by the police, who shall permit to hold a demonstration at the new venue, subject to reasonable restrictions.
[11] Thousands of citizens under the banner of Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) party took out a rally through major streets of Raichur and staged demonstration outside the office of the Deputy Commissioner, to observe the 22nd anniversary of Babri Masjid demolition as Black Day. They raised slogans against Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure. They also raised questions about the then Prime Minister P.V. Narasimha Rao for allowing the “historical crime” to take place.